-->

Monday, December 31, 2012

பாலியல் வன்முறை - ஓர் அறிவியல் பூர்வ தீர்வு

1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன?
தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக இருக்கக்கூடும். மேலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வின் படி 9% பாலியல் குற்றங்கள் மட்டுமே நீதி மன்றங்களில் நிரூபிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநில‌த்தில் 2011ல் பதிவான 636 பாலியல் வன்முறைகளில் வெறும் 4 வழக்குகளில் மட்டும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ள‌து. மீதம் 632 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2. ஏன் இவ்வளவு குற்றங்கள்?
தனிமனித ஒழுக்கம், சமூக சூழல் ஆகியவற்றைத் தவிர்த்து பார்க்கும்பொழுது அதிகரிக்கும் குற்ற நிகழ்வுகளுக்குக் காரணம், பெரும்பான்மையான பாலியல் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் போய்விடுவதேயாகும். எடுத்துக்கட்டாக 20% பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதாக கருதுவோமாயின், நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படாததானால் 80% குற்றவாளிகள் விடுதலை செயயப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் அடுத்த குற்றங்களை செய்யும் தொடர் குற்றவாளியாக(Habitual offender) மாறிவிடுகின்றனர்.
3. தொடர் குற்றவாளிகள் என்றல் என்ன?
மேற்கண்ட சுழற்சி ஒரு மோசமான சுழற்சியாகும் (vicious cycle). இந்த மோசமான சுழற்சியினால் தொடர் குற்றவாளிகள் (Habitual offender) உருவாகின்றனர்.
4. ஏன் குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை?
ஏனெனில் பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் சமூக பிரச்சனை (Social stigma) காரணமாக தண்டனை பெற்றுத்தரும் அளவிற்கு சாட்சி கூற இயலாத சூழல் உருவாகின்றது.
5. பாலியல் வன்முறை குறித்த சட்டப் பிரிவுகளை (375,376) மரண தண்டனை வழங்குமாறு திருத்துவதன் மூலம் குற்றங்களை குறைக்க இயலுமா?
முடியாது. ஏன் எனில் சட்டங்களை எவ்வளவு கடுமையாக்கினாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகும்பொழுது ஒரு தண்டனையும் கிடைக்காது. எனவே பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதற்கான அறிவியல் பூர்வ வழிமுறைகளை உருவாக்குவதே சரியான தீர்வாக இருக்கும்.
6. பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதில் என்ன சிக்கல்?
பாலியல் குற்றங்கள் CrPC 53இன் கீழ் உதவி ஆய்வாளர் (Sub Inspector) அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுகின்றன. இவ்வாறு காவல் துறையால் செய்யப்படும் விசாரணை அறிவியல் பூர்வமானதல்ல. காவல் துறையின் விசாரணை அதிகாரிகள், சட்ட மருத்துவம் (Forensic Medicine) குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாக உள்ளனர். காவல் துறை, அரசின் மற்றும் ஒரு படை பிரிவே(Force) அன்றி அறிவியல் சார்ந்த துறை(Scientific Investigators) அல்ல.
பாலியல் குற்றங்களை விசாரிக்கும் முழு பொறுப்பை காவல் துறையிடம் ஒப்படைப்பது சரியான வழி முறை அல்ல. பெரும்பாலும் காவல் துறையின் விசாரணை நேரில் கண்ட சாட்சியங்களைத் திரட்டுவது அல்லது சூழ்நிலை சாட்சியங்களைத் திரட்டுவதாகவே இருக்கும். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிடுவதாலும் குழந்தையாக இருப்பதாலும் யாருமல்லாத இடங்களில் குற்றம் பெரும்பாலும் நிகழ்த்தப்படுவதாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகின்றது.
மேலும் அறிவியல் பூர்வமான சோதனைகளான பெண்ணுறுப்பின் எபிதிலியல் செல்களை ஆணுறுப்பில் கண்டுபிடிப்பது, நகங்களில் சிக்கிய தசைத் துணுக்குகளை ஆராய்வது, ஆடைகளில் உள்ள இரத்தம் மற்றும் விந்து மாதிரிகளைத் திரட்டுவது மற்றும் லோகர்ட் பரிமாற்ற விதியின்படி முடி மற்றும் மற்ற பொருட்களைத் திரட்டுவது போன்ற பல அறிவியல் பூர்வமான வழிமுறைகள் பெரும்பாலான வழக்குகளில் செய்யப்படுவதில்லை.
மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் முறையான வழிகாட்டுதல்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு இருப்பதில்லை. எனவே இவ்வகையான அறிவியல் பூர்வ ஆய்வுகள் (Forensic Investigations) உடனடியாக செய்யப்படாததினால் சாட்சியங்கள் திரட்ட இயலாமல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் போய்விடுகிறது.
7. மருத்துவக் கல்லுரி / அரசு மருத்துவமனைகளில் சட்ட மருத்துவத் துறையின் பங்கு என்ன?
நீதிமன்ற ஆணையின் கீழ் குற்றவாளி அல்லது பாதிக்கப்பட்ட பெண் சட்ட மருத்துவக்குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார். மேற்ககூறிய பல அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டும் வேலையை இத்துறை செய்கிறது. ஆனால் குறைபாடு என்னவெனில் சட்ட மருத்துவத் துறையால் விசாரணையை தன்னிச்சையாக துவங்கவோ, நீதிமன்றங்களினால் ஆணையிடப்படும் பரிசோதனைகளைத் தவிர வேறு வகையான குற்ற விசாரணைகளில் (Forensic investigation) ஈடுபடவோ முடியாது.
எடுத்துக்காட்டாக பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தால் சட்ட மருத்துவத் துறைக்கு அனுப்பப்படும் சூழலில், சட்ட மருத்துவர் குற்றவாளியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கருதினால் அதற்கான ஆணையை அவரால் பிறப்பிக்க இயலாது. இதனால் சட்ட மருத்துவத் துறை அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலையை மட்டும் செய்து மேற்கொண்டு தொடர இயலாமல் நின்று போகும் சூழல் உள்ளது.
8. தற்போதைய தேவை என்ன?
நீதிமன்றங்களில் பாலியல் குற்றங்களை நிரூபிக்கும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வழிமுறைகளை வகுக்காமல் குற்றங்களை குறைக்க இயலாது. எனவே பாலியல் குற்றங்களை தன்னிச்சையாக விசாரிக்கும் அதிகாரமுடைய, அறிவியல் பூர்வமான ஆதாரங்களைத் திரட்டும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஓர் இடை நிலை அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.
 இக்குழுவில் இடம் பெறுவதற்கான இடைநிலை அதிகாரிகளாக‌ அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான புதிய முதுநிலை படிப்பினை உருவாக்கி பயிற்சி அளிப்பதன் மூலமும், மேலும் வளர்ந்த நாடுகளின் குற்ற விசாரணை முறைகளை அவர்களை அறிந்து வரச் செய்வதன் மூலமும் இக்குழுவை சிறப்பான விசாரணை குழுவாக மாற்ற இயலும். மேலும் இக்குழுவினை சட்ட மருத்துவர், சட்ட வல்லுநர் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட விசாரணை அதிகாரி கொண்ட குழுவாக அமைக்க வேண்டும்.
இக்குழு ஏதேனும் ஒரு பாலியல் குற்றம் நடைபெறுமாயின் தன்னிச்சையாக விசாரணையைத் தொடங்கி, அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டுவதன் மூலம் நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படும் எண்ணிக்கையை கூட்டலாம்.
Download As PDF

Sunday, December 30, 2012

மார்க்க விளக்க கூட்டங்களின் அவசியம்

தற்காலத்தில் மார்க்க விளக்க  கூட்டங்களின்  அவசியம் என்ன என்பதை எடுத்துரைக்கும் பயான். அதுவும்  அறியாமை காலத்தோடு தற்காலத்தை ஒப்பிடுவது அழகு
Download As PDF

அல்லாஹ்வின் அன்பை பெற

அல்லாஹ்வின் அன்பை  பெற அல்லாஹ்வால் கூறப்பட்ட விஷயங்கள் என்ன என்பதை எடுத்துச்சொல்லும்   அழகிய பயான்
பேசியவர் :S  முஹம்மத் ஜுபைர் சிராஜி
Download As PDF

கலவிப்பொருத்தம்-என்ன சொல்கிறது காமசூத்திரம்?

இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து அப்படியே எடுத்து எழுதியுள்ளேனே தவிர வேறெந்த உள்நோக்கமும் கொண்டதல்ல…! கண்டிப்பாய் இது வயது வந்தவர்களுக்கு மட்டுமே.

கலவிப்பொருத்தம் என்பதென்ன?

ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்கவைகளில் ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும்.

‘’நீளம்’’ என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும்.
‘’ஆழம்’’ என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.

லிங்கம் சிலருக்கு அதிக நீளமாகவும், சிலருக்கு சாதாரண நீளமாகவும், இன்னும் சிலருக்குச் சிறியதாகவும் காணப்படும்.
யோனியானது சில பெண்களுக்கு ஆழமாகவும், சில பெண்களுக்கு ஆழமற்றதாகவும் காணப்படும்.
இந்த ஆழ-நீளத்தை விளக்க காமசூத்திர அறிஞர்கள் முயல், மான், எருது, குதிரை, யானை என்று மறைமுக உவமைகளோடு குறிப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் முயல், மான், எருது, குதிரை, யானை ஆகியவற்றை அனைவரும் அறிவதோடு, அவற்றின் தோற்றம், அமைப்பு, உறுப்புகள், செயல் யாவும் நன்றாகத்தெரியுமென்பதால் அவற்றை உவமைகளாக குறிப்பிடும்போது ரசனையாகவும், சுலபமாகவும் புரிந்து கொள்ளமுடியும் என்பதாலேயே!

தன்னுடைய லிங்கம் எத்தகையது என்பதை ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்வதில் எவ்விதக் கஷ்டமுமில்லை. அதேபோல யோனியின் தன்மையை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ளமுடியும். மேலும், பெண்ணின் யோனியை ஆணும், ஆணின் குறியை பெண்ணும் தெரிந்து கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை. தோற்றத்திலும் செயலிலும் தெரிந்து கொண்டுவிடலாம்.

ஜாடியில் உள்ள தேனைச் சுவைப்பதற்கு தக்க கரண்டியைப் போட்டு எடுத்தால்தான் தேனும் கிடைக்கும். சுவைக்கவும் செய்யலாம். சிறிய கரண்டியைப் போட்டால் உள்ளே விழுந்து விடும். பிறகு தேனைச் சுவைப்பது எப்படி? இதுதான் ஆழ-நீளப் பொருத்தத்துக்கான சிறியதொரு உதாரணம்.

உறுப்புகளின் வகைகள்(ஆண்)
முயல் வகை ஆண்குறி எல்லாவற்றிலும் சிறியது.
எருது வகை ஆண்குறி நடுத்தரமானது.
குதிரை வகை ஆண்குறி மிக நீளமானது.

உறுப்புகளின் வகைகள்(பெண்)
பெண் மான் வகைப் பெண்குறி மிகவும் ஆழம் குறைந்தது. பெண் குதிரை வகைப் பெண்குறி நடுத்தர ஆழமுடையது
பெண் யானை வகைப் பெண்குறி மிகவும் ஆழமானது.

யோனியின் ஆழத்துக்குத் தகுந்தவாறு அதன் சுற்றளவு அமைந்திருப்பினும் அது சுருங்கி விரியும் தன்மையுடையதென்பதால் சுற்றளவு மாறுபடக்கூடும். நீளத்துக்கும் குறைவான ஆழத்துக்கும் பொருந்தாது. குறைவான நீளத்துக்கும் அதிக ஆழத்துக்கும் பொருந்தாது. சரிசமமான ஆழத்துக்கும் சரிசமமான நீளத்துக்குமே பொருந்தும்.

குறிகளின் அளவு (ஆண்)
முயல் வகை – ஆண்குறியின் நீளம் – நான்கு அங்குலம் (10செ.மீ).
எருது வகை – ஆண்குறியின் நீளம் – ஆறு அங்குலம் (15செ.மீ).
குதிரை வகை – ஆண்குறியின் நீளம் – எட்டு அங்குலம் (20செ.மீ).

குறிகளின் அளவு (பெண்)
பெண் மான் வகை – யோனியின் ஆழம் – நான்கு அங்குலம் (10செ.மீ).
பெண் குதிரை வகை – யோனியின் ஆழம் – ஆறு அங்குலம் (15செ.மீ).
பெண் யானை வகை – யோனியின் ஆழம் – எட்டு அங்குலம் (20செ.மீ).

பிடிப்பு என்பதென்ன?
பிடித்துக் கொள்ளுதல், கவ்விக் கொள்ளுதல் என்பவைகளே. ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொள்ளும் போது, பலமுள்ள ஒருவர் சற்று அழுத்தமாக பிடித்துக் கொள்வார். இன்னொருவர் சாதாரணமாகப் பிடித்துக் கொள்வார். வேறொருவர் மிகவும் தளர்வாகப் பிடித்துக் கொள்வார். இதைப்போன்றதே ஆணும் பெண்ணும் கூடிக்கலவி செய்யும் போது உண்டாகும் பிடிப்பும். ஆணின் லிங்கத்தை பெண்ணின் யோனிக்குள் நுழைக்கும் போது, எத்தகைய லிங்கமானது எத்தகைய யோனிக்குள் நுழைக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிடவே இந்தப் பிடிப்பு என்ற உதாரணம் கூறப்படுகிறது. அதாவது ஒன்றையொன்று கவ்விப் பிடித்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் நெருக்கமான உடல் உறவு உண்டாகி, உணர்ச்சி மேலிட்ட இன்பம் காணமுடியும்.

அதிகக் கெட்டியான பிடிப்பு
குதிரை வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்யும் போது வேதனை உண்டாகாமல் செய்ய இயலாது. ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிக நீளமானதாகும்.

கெட்டியான பிடிப்பு
எருது வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்வது சிரமமானதாகும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் நீளமானது.

தளர்ந்த பிடிப்பு
முயல் வகை ஆண் X பெண் குதிரை வகைப் பெண்
எருது வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும் போது தளர்ச்சியாக இருக்கும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் சிறியதாக இருப்பதால் போதிய இன்பம் காண இயலாது.

அதிகத் தளர்ச்சியான பிடிப்பு
முயல் வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும் போது ஒன்றையொன்று உராய்வதில்லை. ஏனென்றால் பெண்ணின் யோனியைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிகவும் சிறியது

பொருந்தாத புணர்ச்சி காரணமாகவே ஆண் பெண் இருவரின் நாட்டமும் வெவ்வேறு திசைகளில் செல்லக்கூடும்.


சமமான பிடிப்புள்ள சேர்க்கை
முயல் வகை ஆண் X மான் வகைப் பெண்
எருது வகை ஆண் X குதிரை வகைப் பெண்
குதிரை வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்

வேகமென்பதென்ன?
ஆண்-பெண் புணர்ச்சியில் ஆழ-நீளம் அறிந்த பின் பிடிப்பு நிலை என்பதைப் பார்த்தோம். இப்பொழுது ‘’வேகம்’’ எவ்வளவு என்பதைப் பார்ப்போம்.
காம இச்சை கொண்ட ஆண் ஒருவன், பெண் ஒருத்தியை நெருங்கி கலவியில் ஈடுபடத்தொடங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தக்கலவியின் வேகம் எத்தகையதென்பது கலவி செயல்படும் முறையாகும்.
வேகமானது அதிகமாகக்கூட ஏற்படலாம். சில சமயம் இயல்பான அளவைக் காட்டிலும் குறைவாகக் கூட காணப்படலாம். மற்றும் சில சமயங்களில் தன்னை அடக்கிக்கொள்ள முடியாதபடி உச்சக்கட்டத்தை அடைவதுமுண்டு. இம்மாதிரி வேகங்களைக்கொண்டு வலிமையுள்ளவன், வலிமையற்றவன் என்று ஒருவனை தீர்மானித்து விடக்கூடாது. ஏனெனில், அவனது மனநிலை, அப்போதைய சூழ்நிலை, பெண்ணின் பிடிப்பு-அதாவது யோனியின் தன்மைக்கு ஏற்ப வேகமானது கூடலாம். இல்லைக் குறையலாம்.

சண்ட வேகம்
சண்ட வேகம் என்பது மிகவேகம். கண் மண் தெரியாத வேகம் என்று சொல்வார்களே அதுதான் இது. அத்தகைய வேகமுடையவனின் கலவி எவ்வாறிருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. அவள் கலவியில் விருப்பமில்லாமல் இருக்கும் பொழுது கூட அவன் கலவிக்கு வருமாறு அவளைத்தொந்தரவு செய்வான்.
அதேபோல சண்ட வேகமுடைய பெண்ணை எவனும் திருப்திப்படுத்த இயலாது. எத்தனை தடவை கூடினாலும் அவளுடைய இச்சை அடங்காது.

மந்த வேகம்
மெதுவாக, தாமதமாகச்செயல்படுதல், இதை மந்தம் என்பார்கள். இத்தகையவன் கலவியிலும் மந்தமாகவே ஈடுபடுவான்.
காம இச்சை குறைவானவன், மெதுவான கலவிப்போக்கு உள்ளவன், நீத்துப்போன விந்து உடையவன், மனைவியின் நகக்குறி, பற்குறிகளைப் பொறுக்க முடியாதவன், கலவிக்கு முன் அல்லது கலவி பூர்த்தியடையுமுன் இத்தகையவனுக்கு விந்து வெளிப்பட்டுவிடும். மனைவியின் அணைப்பைத் தாங்க முடியாமை, போதிய அளவு விந்து வெளிப்படாமை இவை கூட மந்த வேகத்தைச் சார்ந்தவையேயாகும்.

மத்திய வேகம்
‘’மத்திய’’ என்றால் ‘’நடு’’ என்பது பொருள். அதாவது அதிக வேகத்துக்கும், மந்தத்துக்கும் நடுவில் உள்ள நிலையாகும்.
கலவியின் போது ஏற்படும் நகக்குறி, பற்குறிகளைப் பொறுத்துக் கொள்ளுதல், அளவுக்கு மீறிய இச்சையும், நிறைய விந்து வெளிப்படுவதும், பெண்ணினுடைய எத்தகைய புறச்செயலையும் தாங்கிக்கொள்ளுதல், இத்தகை தன்மையுடையவன் மத்திய வேகத்தைச் சார்ந்தவனாகும்.

இதைப்போலவே பெண்களின் காம வேகத்தையும் அளவுக்கேற்றபடி வகையாகப் பிரிக்கலாம்.

வேகப் பொருத்தம்

ஆண் பெண்

மந்த வேகம் X மத்திய வேகம்
மந்த வேகம் X சண்ட வேகம்
மத்திய வேகம் X மந்த வேகம்
மத்திய வேகம் X சண்ட வேகம்
சண்ட வேகம் X மந்த வேகம்
சண்ட வேகம் X மத்திய வேகம்

ஒரே விதமான வேகமுள்ளவர்கள் கலவிப் புணர்வதிலேயே பூரண இன்பம் உண்டு.

நேரமென்பதென்ன?
கலவி எவ்வளவு நேரம் நீடிக்கும்? ஆணும் பெண்ணும் சேர்ந்து கலவியில் ஈடுபடுகிறார்கள். அதை எவ்வளவு நேரம் செய்கிறார்கள்?
கலவி செய்யும் நேரத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்து சீக்கிர காலம், மத்திய காலம், நீண்ட காலம் என்று மூன்று விதமாகக் கூறலாம்.

ஒரு அலுவலை ஒருவர் செய்யும்பொழுது சீக்கிரமாகச் செய்வார். மற்றொருவர் நடுத்தரமாகச் செய்வார். இன்னொருவர் நீண்ட நேரம் செய்வார். வேலைகளைச்செய்வதில் சீக்கிரம் செய்வதே சிறந்ததாக இருந்தாலும், கலவியில் நீண்ட காலம் செய்வதே முதலாவதாகவும் மத்திய காலம் அடுத்தபடியாகவும், சீக்கிர காலத்தை மூன்றாவதாகவும் கொள்ள வேண்டும்.
கலவி என்பது வெறும் கடமைக்காக அல்ல. கலவி மூலம் ஆண் பெண் இருவரும் பரிபூரண இன்பம் அனுபவிக்கத் தகுந்த வழிகள் இருக்கின்றன.
சீக்கிர கால கலவி நேரமுடைய ஆண், தன்னைப்போன்ற ஒரு பெண்ணுடன் கலந்தால் அவர்களுடைய புணர்ச்சி நேரம் குறுகிய கால அளவாகவும் மற்றும் இருவருக்கும் திருப்தியளிப்பதாகவும் இருக்கும். இதே போலத்தான் மத்திய மற்றும் நீண்ட கால புணர்ச்சிகளும்.
ஆணுக்கு விந்து வெளிப்படுவதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதே இந்தப் பகுதியில் முக்கியம். அதாவது இன்ப உணர்ச்சியின் உச்ச கட்டத்தை இருவரும் ஒரே சமயத்தில் அடையவேண்டும் என்பதே கலவியின் தன்மையாகும். எனினும் பெண்ணுக்கு முந்திவிட்டால் கூடப்பரவாயில்லை. ஆனால் ஆணுக்கு முந்தக்கூடாது.

எனவே இருவருக்கும் ஏக காலத்தில் உச்சக்கட்டத்தை அடையக் கூடிய புணர்ச்சி அமையவேண்டுமென்பதே பரிபூரண இன்பம் தரும் தன்மையாகும்
Download As PDF

Saturday, December 29, 2012

மோகம் முப்பது நாள்... - புதுசா கல்யாணமானவங்களுக்காக!

இது கண்டிப்பாய் ஆண்களுக்கானது!!!...

புதுசா கல்யாணம் ஆன ஜோடிங்களுக்கு வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணும்போது பலவிதமான சந்தேகங்கள் உண்டாகும். இதுல ஆணும் பொண்ணும் தங்களோட சந்தேகங்களை யார்கிட்டப்போயி கேட்டு க்ளியர் பண்ணிக்கிறதுன்னு தெரியாம அல்லாடுவாங்க பாருங்க... அய்யோ பாவம்! எதாவது புத்தகத்தை படிச்சி தெரிஞ்சிக்கலாம்னா, உருப்படியா என்ன புத்தகம் இருக்கு?... ஒரு மண்ணும் இல்லை. சரி, டாக்டர் மாத்ருபூதம்?... அவரும் பாவம், போய் சேர்ந்திட்டார்... வேற டாக்டருங்க?... அய்யோ!!! டி.வி.யை ஆன் பண்ணாலே ‘’வாங்கடா, வாங்க உங்க அப்பன் நான் இருக்கேன்டா, வாங்கடா’’ என்று லேகிய டாக்டர்கள் மிரட்டுவதுதான் மிச்சம்!.. சரி என்னதான் பண்ணலாம்?...

ஹலோ... ஹலோ... ஸ்டாப், ஸ்டாப்... நீங்க நினைக்கிற மாதிரி டாப்பிக் வேண்டாம் இங்கே! டிராக் மாறிக்கலாம் பாஸ்!!!

‘’ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்... ஆக மொத்தம் தொண்ணூறு நாள்!’’... இதுதான் பொதுவா புதுசா கல்யாணம் ஆனவங்களுக்காக சொல்ற டயலாக். வாழ்க்கைய கொஞ்சம் அனுபவிச்சு கிராஸ் பண்ணவங்களுக்குத்தான் தெரியும் இந்த டயலாக்கோட வொர்த் என்னான்றது?...

கல்யாணத்தை பத்தி வேடிக்கையா ஒன்னு சொல்லுவாங்க... கல்யாணம்ன்றது ஒரு ஆழ்கிணறு. ஏற்கனவே விழுந்தவங்க வெளியேற வழியில்லாம தத்தளிச்சிட்டு இருப்பாங்க. வெளியே இருக்கிறவங்களோ, அந்தக்கிணத்துல என்னமோ இருக்குன்னு, எப்படா குதிப்போம்னு நாளை எதிர்பார்த்திட்டு இருப்பாங்களாம்!!! கொஞ்சம் வேடிக்கையா இருந்தாலும் உண்மைதான்றது காலம் காலமா அனுபவிச்சபிறகுதான் புரியுது நம்மாளுங்களுக்கு.

பொதுவாவே நம்மாளுங்க கல்யாணம் ஆன புதுசுல மோகம் கண்ணை மறைக்க, எதிர்காலத்துல வரப்போற பிரச்சினைக்கு தானே விதை போடறது தெரியாம புதுப்பொண்டாட்டிய கொஞ்சம் ஓவராவே தாங்கிப்புடுவானுங்க. அதுக்கப்புறம் மேலே சொன்ன தொண்ணூறு நாள் முடிஞ்சதும் கொஞ்ச கொஞ்சமா ஆப்பு ஸ்டார்ட் ஆகும் நம்மாளுக்கு. கிட்டத்தட்ட ஒரு ரெண்டு வருஷம் முடிஞ்சதும் டெய்லி ஆப்பு மட்டும்தான் அவன் ரெகுலர் வாழ்க்கையாகியிருக்கும். எதுக்கு இப்படி சொந்தக்காசுலேயே சூனியம் வைச்சுக்கனும்?...

அதுனால புதுசா கல்யாணம் செஞ்சுகிட்ட மற்றும் செஞ்சிக்கப்போற தம்பிமார்களே... உங்களுக்கான உஷார் டிப்ஸ்தான் இங்கே வரப்போவுது! பஜார்ல உஜாரா இல்லேன்னாக்க நிஜாரை அவத்துருவாங்கன்றத புரிஞ்சிக்கிட்டீங்கன்னா, கண்டிப்பா இந்த உஷார் டிப்ஸ்சை ஃபாலோ பண்ணுவீங்க மக்காஸ்!!!

1.   கல்யாணமான புதுசுல காரியம் நடக்கனும்கிறதுக்காக பொண்டாட்டியப்பாத்து சும்மா சும்மா ஒரு நாளைக்கு நூறுவாட்டியாவது ‘’ஐ லவ் யூ’’ சொல்றது... ரொம்ப தப்பு இது. ஏன்னா எதிர்காலத்துல ஒரு நாளைக்கு ஒரு தடவை சொல்றதுகூட நின்னு போகும்போது இந்த ஃப்ளாஸ் பேக்தான் உங்களுக்கு எமன்.

2.   கல்யாணமான புதுசுல ஒரு நாளைக்கு இருபது தடவைக்கு மேல பொண்டாட்டிகிட்ட போன்ல பேசுறது... மாட்டீக்காதீங்க மக்காஸ்! கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் ஒரு நாளைக்கு ஒரு தடவை போன் பண்ணவே உங்களால நேரம் ஒதுக்கமுடியாம போகும்போது நிச்சயம் பாதிக்கப்படுவீங்க !

3.   கல்யாணமான புதுசுல பொண்டாட்டிய கன்னாபின்னான்னு வெளியே கூட்டிட்டு போறது... புதுசு புதுசா துணி, நகைகள்னு பர்சேஸ் பண்ணிக்குடுக்கிறது, அப்பப்போ காஸ்ட்லி கிஃப்ட் குடுக்கிறது, பொண்டாட்டிக்கு புடிச்ச ஹீரோவோட புதுப்படத்துக்கு ஆயிரமாயிரம் செலவு பண்ணி ரிலீஸ் அன்னிக்கே சினிமாவுக்கு கூட்டிட்டு போறது, கணக்கு பாக்காம பர்சை தண்ணியா காலி பன்றது... இதெல்லாமே உங்களுக்கு நீங்களே வச்சிக்கிற சூனியம்தான்... ஃபியூச்சர்ல ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க பாஸ், அப்புறம் உங்க இஷ்டம்!!!

4.   கல்யாணமான புதுசுல பொண்டாட்டி சமைக்கிற சமையல் வாய்லேயே வைக்க முடியாம இருக்கும்போதுகூட, ‘’சூப்பர் டார்லிங்... இது மாதிரி ஒரு சமையலை நான் சாப்பிட்டதேயில்லை, எக்சலென்ட்’’ அப்பிடீன்லாம் சும்மானாச்சுக்கும் காரியத்துக்காக புகழ்றது உங்க நாக்குக்கு நீங்களே அடிச்சிக்கிற சாவு மணி... அம்புட்டுதேன் சொல்லமுடியும்!.

5.   கல்யாணமான புதுசுல சாயந்திரம் ஆறு மணிக்குள்ளார ஆபிசிலேயிருந்து எஸ்கேப் ஆகி பொண்டாட்டிகிட்ட அட்டெண்டென்ஸ் போடுறது மாதிரி முட்டாள்தனம் வேற ஒன்னுமேயில்லை பாஸ்!... எதிர்காலத்துல நீங்க கண்டிப்பா வூட்டுக்கு லேட்டா வரப்போற ஒவ்வொரு சாயந்திரமும் உங்களுக்கு நரகம்தான்!!!

6.   கல்யாணத்துக்கு அப்புறம் முதல் மாச சம்பளத்தை பெரிய பருப்பு மாதிரி பொண்டாட்டி கையில எடுத்துக்கொடுக்கிறதுக்கு முன்னாடி ஒரேயொரு நிமிஷம், ‘’வாழ்க்கை முழுவதும் பொண்டாட்டிகிட்ட சம்பளத்தைக்குடுத்துட்டு செலவுக்கு கையேந்தி நிக்கிறதுக்கு ரெடியான்னு’’ யோசிச்சிக்கோங்க பிரதர்!!!

7.   புதுப்பொண்டாட்டிகிட்ட சும்மா சும்மா, அவன் குடிப்பான், இவன் குடிப்பான்... நான் ரொம்ப யோக்கியமாக்கும்... சீச்சீய் இந்த குடிக்கிற ஆளுங்க பக்கத்துல வந்தாலே எனக்கு கொமட்டிக்கிட்டு வரும்... அப்பிடி இப்பிடீன்னு சீன் போடுறதுக்கு முன்னாடி, எதிர்காலத்துல நாம எப்பவுமே எந்த பார்ட்டியையும் அட்டெண்டு பண்ணாம வூட்டுக்கு வருவோமான்றத ஒரு வாட்டி கன்ஃபார்ம் பண்ணிக்கிறது உத்தமமுங்க!!!

8.   கல்யாணமான மூனாவது மாசம் பொண்டாட்டி மாசமா இருக்கான்னு தெரிஞ்சதும், விழுந்து விழுந்து சீன் போட்டு, வூட்டுல துணி துவைக்கிறது, சமைக்கிறது, தண்ணி புடிக்கிறதுன்னு எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செஞ்சீங்கன்னா... சாரி பாஸ்... எதிர்காலத்துல உங்களை கடவுள்கூட காப்பாத்த முடியாது!!!
                            ஸ்பைடர் மேனுக்கே இந்த நிலைமையா?!!!...

மொத்தத்துல சிம்பிளா சொல்லனும்னா... கல்யாணமான புதுசுல சும்மா ஓவர் சீன் போட்டு அள்ளி விடாம, எப்பவுமே நீங்க நீங்களாவே அளவா, இயல்பா, உண்மையா இருக்க பழகிக்கிட்டீங்கன்னா எதிர்காலத்துல உங்க மனைவியும் உங்கமேல கல்யாணமான புதுசுல அப்படி இருந்தீங்க... இப்படி இருந்தீங்கன்னு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம வாழப்பழகிப்பாங்க. உங்க வாழ்க்கையும் டென்ஷன் இல்லாம நிம்மதியா ஓடும். அதுக்காக மனைவி மேல ஓவர் அன்பு வைக்கக்கூடாதுன்னு அர்த்தமில்லை. கல்யாணமான புதுசுல உங்க மனைவிமேல நீங்க ஓவர் அன்பு வைச்சு அதை அவங்களுக்கும் புரியிறமாதிரி வெளிக்காட்டலாம். ஆனா காலம் போக போக உங்களுக்கு உங்க மனைவி மேல அதே அளவு அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டுற அளவுக்கு சூழ்நிலைகள் அமையாமல் போகும். அப்போது உங்கள் மனைவி அதைப்புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றிருக்காவிட்டால் தினம் தினம் உங்கள் வாழ்க்கையில் நரகம்தான்.

அதனால்தான் சொல்றேன் மக்காஸ்... கல்யாணம்ன்றது சாதாரண விஷயமில்லை... உஷார் பிரதர்ஸ்!!!

விஷ் யூ எ ஹேப்பி மேரிடு லைஃப்... என்ஜாய்!!!
Download As PDF

பிணத்தை எரித்துவிடுங்கள், அவைகளாவது கற்பழிப்பிலிருந்து தப்பிக்கட்டும்!

  இந்தியாவில் ஒவ்வொரு 54 நிமிடக்களுக்கு ஒருமுறை கற்பழிப்பு முயற்சி நடக்கிறது. 1 மணி 42 நிமிடக்களுக்கு ஒருமுறை வரதட்சனைக்கொடுமையால் ஒரு பெண் உயிரிழக்கிறாள்.
காட்சி 1 : மும்பை, மே-மாதம்.
  14 வயதுச்சிறுமியை அவள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலிருந்த 5 பேர் கடத்தக் கொண்டுபோய் கணக்கெடுக்க முடியாத அளவிற்கு சுமார் ஐந்து மாதங்களாகக் கற்பழித்திருக்கின்றனர். இரண்டு மாதம் ஆனவுடன் அவள்மீதிருந்த ஆசை தீர்ந்துபோய் “சோறு யார் போடுவதென்ற சண்டை வந்திருக்கின்றது. ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெறும் ஒரே ஒரு வடா பாவ் கொடுத்திருக்கின்றனர்.

  ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு பூங்காவில் வீசிவிட்டனர். அவளை ஆபரேசன் செய்தபோது உடலிலிருந்து எடுக்கப்பட்டவை என்னென்ன தெரியுமா? பேப்பர், மண், கற்கள் (பசியினால் வேறுவழியில்லாமல் அதையும் தின்றிருக்கும் அந்த சிறுமியைப் பற்றி நினைத்துக்கூட நம்மால் பார்க்க இயலவில்லை). கடந்த நவம்பர் 14 உடன் தன் மூச்சை நிறுத்திக் கொண்டாள.


காட்சி 2 : டெல்லி, டிசம்பர் மாதம்.

  முனிர்கா என்ற இடத்தில் ஞாயிறு இரவு ஓடும் பேருந்தில், 23 வயது மருத்துவ மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கி தூக்கி வெளியே வீசி விட்டது. பின்னர் அந்தப் பெண்ணை ஐந்து பேரும் கற்பழித்ததோடு இரும்புக்கம்பியால் அவளின் பெண்ணுருப்பையும் உடல் உறுப்புகளையும் தாக்கி அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுவிட்டது. இவையனைத்தும் டெல்லியின் நடுவீதியில் ஓடும் பஸ்சிலேயே நடந்துள்ளது. டெல்லியில் சிகிச்சை பெற்று பின் சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டு அங்கும் பலனின்றி அந்தப்பெண் இன்று தன் உலகை முடித்துக்கொண்டாள்.

காட்சி 3 : தூத்துக்குடி, டிசம்பர் மாதம்.

  7ம் வகுப்பு படிக்கும் தாதன்குளத்தைச் சேர்ந்த புனிதா ரயிலை விட்டு இறங்கிச் செல்லும்போது குடிபோதையில் இருந்த சுப்பையா பலாத்காரம் செய்ய முயற்சித்து முடியாமல் போனதால் தம்மை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சி கொலை செய்து சடலத்தை ரயில்வே பாலம் அருகில் இருக்கும் முட்புதரில் வீசிவிட்டுச் சென்றுவிட்டான்.


காட்சி 4 : கோவை, செப்டம்பர் 2011.

  போத்தனூர் அருகே இரவு நேரத்தில் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விவசாயி தண்டபாணியின் தோட்டத்திலிருந்த மாட்டுக் கன்றுக்குட்டியின் நாக்கை அறுத்து மண்வெட்டியை எடுத்து, அதன் கைப்பிடியை அதன் வாயில் நுழைத்து கத்துவதை நிறுத்தி கன்றுக்குட்டியுடன் உறவுகொள்ள முயற்சித்தனர். அப்போது அது சத்தம் போடவே தூக்கத்திலிருந்த தண்டபானியும் அருகிலிருந்தவர்களையும் உதவிக்கு அழைத்து அனைவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஒரு மாட்டுக்கன்றுக்குட்டியை கற்பழிக்கும் இவர்களுக்கு மனிதர்கள் எம்மாத்திரம்?

தயவுசெய்து பிணத்தைப் புதைக்காதீர்கள், எரித்துவிடுங்கள் அவைகளாவது கற்பழிப்பிலிருந்து தப்பிக்கட்டும்!
Download As PDF

தமிழ் சினிமாவும் மலிவாகிவிட்ட டாக்டரேட்டுக்களும்!

தமிழ் சினிமா வரலாற்றில் பல கௌரவ டாக்டர்கள் உள்ளனர். குறிப்பாக டாக்டர்.சிவாஜி கணேஷன், டாக்டர்.பானுமதி, டாக்டர்.சரோஜா தேவி, டாக்டர்.கே.பாலச்சந்தர், டாக்டர்.எம்.எஸ் விஸ்வநாதன், டாக்டர்.இளையராஜா, டாக்டர்.எஸ்.பி பாலசுப்ரமணியம், டாக்டர். கே.ஜே. யேசுதாஸ் ,  டாக்டர். கமல்ஹாசன் போன்றோர் சினிமாவில் ஆற்றிய சேவைகளுக்காகவும் டாக்டர். எம்.ஜி.ஆர், டாக்டர். ஜெயலலிதா, டாக்டர். கருணாநிதி போன்றோர் சினிமாவை விட்டு வெளியேறிய பின் சமூக அரசியல் சேவைகளுக்காகவும் கௌரவ  டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளனர். அதேபோல சமீபகாலத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் இளையதளபதி விஜய், இயக்குனர் ஷங்கர் இருவருக்கும், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் புரட்சித்தமிழன் சத்யராஜ், இளைய திலகம் பிரபு, தேனிசை தென்றல் தேவா , கங்கை அமரன் ஆகியோருக்கும் , இத்தாலிய மிலான் பல்கலைக்கழகம் சீயான் விக்ரமிற்கும், ஐ.ஐ.சி.எம் பல்கலைக்கழகம்  புரட்சிக்கலைஞர்  விஜயகாந்திற்கும்  டாக்டரேட் பட்டங்கள் வழங்கியுள்ளன. மேலும் சமீபத்தில் இசைபுயல் ஏ.ஆர் ரஹ்மான் தனது நான்காவது டாக்டரேட் பட்டதை அமெரிக்க மியாமி பலகலைகழகத்திடமிருந்து பெற்றார்.
சரி இப்போ விசயத்துக்கு வருவோம். இவர்கள் எல்லாருமே இந்த கௌரவ  டாக்டரேட் பட்டதை பெறுவதற்கு உண்மையிலேயே தகுதி உடையவர்களா? என ஒரு கேள்வி அடிக்கடி நமக்கு வந்துட்டு போகும். அதுலயும் மேற்சொன்ன எல்லாரையும் பொதுவாக சொல்ல முடியாது, ஏன்னா  சிலர் உண்மைலேயே  கலைத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களாகவே இருக்கின்றார்கள். உதாரணத்துக்கு சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்றோரின்  நடிப்புலக சாதனைகளும் , எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் போன்றோரின் இசையுலக சாதனைகளும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், "நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட"ன்னு பாட்டு பாடி நடனமாடுபவர்கள், சீன் பென்னின் டூப்ளிகேட்கள், பிற நாட்டு/மொழி பாடல்களை அப்புடியே அச்சு பிசகாம காப்பி அடிப்பவர்கள்,"கருப்பு எம்.ஜிஆர் கள்", "என்னமா கண்ணு", "என்ன கொடும" வகையறாக்கள் போன்றோருக்கும் அளிக்கப்பட்ட ஹானரரி டாக்டரேட் பட்டங்கள் உண்மையிலேயே  விவாதத்திற்குரிய விடயம்தான்.

முதலில்  டாக்டரேட் என்றால் என்னவென்றும், நம் தமிழ் சினிமாவில் எவ்வாறான டாக்டர்கள் இருக்கிறார்கள் என்றும் பார்ப்போம். பொதுவா  சாதாரண மக்களின் பார்வையில் டாக்டர்ன்னு சொல்றது மருத்துவத்துறையில் பயின்று பட்டம் பெற்றோறரை குறிக்கும் சொல். இதில் மனிதனுக்கு வைத்தியம் பார்ப்போர் முதல்கொண்டு மிருகவைத்தியர், பல்மருத்துவர் (சில வேளைகளில் அக்குபஞ்சர், சித்தவைத்தியம்) எல்லாரையும் பொதுவா டாக்டர்ன்னு சொல்வார்கள். இவர்கள் தொழில்முறை டாக்டர்கள். இதுதாண்டா போலிஸ் டாக்டர்.ராஜசேகர், இளம் நடிகர் அஜ்மல் போன்றோர் மருத்துவக்கல்வி கற்ற தொழில்முறை டாக்டர்கள். பவர் ஸ்டார் சீனிவாசன் போன்ற காமெடி பீஸ்கள் அக்குபஞ்சர், சித்தவைத்திய வகையறாக்கள்.

 இரண்டாவதாக கல்வித்துறையில் உள்ளவர்கள் பெறுவது. அதாவது  பொதுவாக ஆய்வுகற்கைகளை கற்று Ph.D[Doctor of Philosophy]  ,D.Eng [Doctor of Engineering], D.Sci[ Doctor of Sciences ] , D.Edu [Doctor of Education] போன்ற அதியுயர் பட்டங்களை பெற்றோர். இதில் பல  வகைகள் இருந்தாலும் நமக்கு ஓரளவுக்கு பரிச்சயமான அதியுயர் ஆய்வு கற்கை பட்டம் பி.எச்.டி யே. ஒரு பி.எச்.டியை பெறுவதற்கு ஒருவர் பள்ளிகூட மட்ட பரீட்சைகளில்  அதிசிறந்த புள்ளிகளை பெற்று, இளநிலை, முதுநிலை கற்கைகளை மிகவும் சிறப்பாக கற்று , சிறப்பு சித்திகளை எய்து , அப்புறம்  தரமான பல்கலைகழகங்களிற்கு விண்ணபித்து, அனுமதி பெற்று, மூன்றில் இருந்து ஐந்து வருட காலபகுதியை (நாட்டையும், ஆய்வையும் பொறுத்து காலம் மாறுபடலாம்) முழுநேர ஆய்வில் செலவழித்து, பல ஆய்வறிக்கைகளை இன்டெர்நேஷனல் ஜர்னல்களில்[சர்வதேச ஆய்விதழ்கள்] வெளியிட்டு, கான்பரன்ஸ் [கருத்தரங்கு] அட்டென்ட் பண்ணி, அங்கு தமது ஆய்வு முடிவுகளை விவாதம் செய்து, இறுதியில்  சில நூறு பக்கங்களில் முழுமையான ஆய்வேடு[Thesis] தயார்செய்து, அதனை ஒரு கமிட்டி மதிப்பாய்வு செய்து, அப்புறம் ஒரு வாய்மொழிதேர்வு... ன்னு இன்னும் என்னென்னமோ சிரமங்களை எல்லாம் அனுபவித்து பெறுவது. இதன் மதிப்பு கல்வித்துறையில் உள்ளவர்களுக்கே அதிகம் தெரியும். தமிழ்சினிமாவில்  கவிஞர் மதன் கார்க்கி ஆஸ்திரேலிய குயீன்ஸ்லாந்து பல்கலைகழக தகவல் தொழில்நுட்ப  பி.எச்.டி பட்டதாரி. முக்கியமான விடயம் என்னவெனில், சினிமா சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்விலும் இவர் தனது டாக்டரேட்டை விளம்பரபடுத்திகொண்டதே இல்லை.
மூன்றாவது வகை என்னவெனில் Honorary Doctorate [கௌரவ முனைவர்!]. அதாவது  சிலர் தாம்சார்ந்த குறிப்பிட்ட துறையில் அல்லது சேவையில் மிகசிறந்த பங்களிப்பினை செய்து தீவிர அர்பணிப்புடன் செயல்படுவர். அவர்களின் பங்களிப்பினையும் அர்ப்பணிப்பினையும் கௌரவிக்கும் முகமாக பல்கலைகழகங்கள் ஹானரரி டாக்டரேட் பட்டங்களை அளிக்கும். நியாயமாக,  யாருக்கு பட்டம் வழங்குவது என்பதை ஒரு தனிப்பட்ட நபர் தீர்மானிக்க முடியாது. பல்கலைகழகங்களில் நடைபெறும் கூட்டங்களில் முதலில் ஒருவர் பரிந்துரைத்து ,பலர் ஆமோதித்து, சிலர் எதிர்த்து, அனைவரும்  கலந்தாலோசித்து,  தேவைப்படின் வாக்களிப்பு நடத்தி இன்னும் என்னென்னமோ நடத்தியே இவை வழங்கப்படவேண்டும். சில நேரங்களில் தகுதியான நபர்களுக்கே வழங்கப்படும் இப்பட்டங்கள், பல நேரங்களில் தகுதியற்ற நபர்களுக்கும் வழங்கபடுகின்றன. இவ்வாறு தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்படும் டாக்டரேட் பட்டங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகலாவிய ரீதியில் உள்ள ஒரு கேலிகூத்தே. முதல் பத்தியில் குறிப்பிடப்பட்ட அனைவரும் பெற்றது இந்த ஹானரரி டாக்டரேட் பட்டங்களையே.
இங்கு ஒரு விடயத்தை நாம் பொதுவாக அவதானிக்கலாம். சமீபகாலத்தில் தமிழ் சினிமாவில் வழங்கப்பட்ட பல ஹானரரி டாக்டரேட் பட்டங்களும் வியாபாரிகளால்(அல்லது அரசியல்வாதிகளால்)  நடாத்தப்படும் தனியார் பல்கலைகழகங்கள், நிகர்நிலை பல்கலைகழகங்கள் மூலமாக வழங்கப்பட்டனவே. இப்பல்கலைகழகங்கள் இது போன்ற ஹானரரி டாக்டரேட் பட்டங்களை சினிமா பிரபலங்களுக்கு  வழங்குவதன் மூல காரணமே, தம்மையும் தமது பல்கலைகழகத்தையும் விளம்பரபடுத்தல் மட்டுமே. பொதுவாக உலகளாவிய ரீதியில் பல்கலைகழகங்கள் தரப்படுதப்படும்.  நாம் மேலே சொன்ன சில  பல்கலைகழகங்கள் தரப்படுத்தலில் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ள (அல்லது அந்த லிஸ்டிலையே இல்லாத) பல்கலைகழகங்களே. வெளிநாடுகளில் நம் தமிழ்சினிமா கதாநாயகர்கள் காசு கொடுத்து வாங்கிய பட்டங்கள் கூட தரப்படுத்தலில் கீழ்மட்டத்தில் உள்ள பல்கலைகழகங்களிடம் இருந்து வாங்கபட்டவையே. இங்கு ஒரு முக்கிய விடயத்தை குறிப்பிட வேண்டும் சர்வதேச ரீதியில் முதல்தர பல்கலைகழகங்களான எம்.ஐ.டி, ஸ்டென்பர்ட், கார்னெல், கல்டெக் என்பன இவ்வாறான சர்ச்சைக்குரிய ஹானரரி டாக்டரேட் பட்டங்களை வழங்குவதே இல்லை.

இவ்வாறு சில பல்கலைகழகங்கள் தமது சுய விளம்பரங்களுக்காக அரைவேக்காட்டுத்தனமாக வழங்கும்  ஹானரரி டாக்டரேட் பட்டங்களை பெறும் அரைவேக்காடுகள் தமிழ்சினிமாவில் செய்யும் அலப்பறைகள் தான் தாங்க முடியாதவையாக உள்ளன. ஏற்கனவே ஒரு டாக்குத்தர் இருந்தாரு. தற்பொழுது  சமீபத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் டைடில் கார்டிலும், விளம்பரங்களிலும்  ஒரு குறிப்பிட்ட நடிகரின் பெயருக்கு முன்னால்  "டாக்டர்" "சீயான்" என இரு பட்டங்கள் போடப்படுகின்றன . அடப்பாவிகளா, "டாக்டர்"ங்குறது ஒரு கௌரவ பட்டம், "சீயான்"ங்குறது தென்தமிழக கிராமங்களில் பொறுக்கிகளை குறிக்கும் ஒரு பட்டம் . ரெண்டையும் நீங்க ஒரே விதமாக தான் அணுகுவீர்களா? நல்லா வருவீங்கடா.

சரி, சிவாஜி, கமலில் இருந்து  இப்போ விஜய், விக்ரம் வரை டாக்டரேட் மலிவாகி  விட்டதே, இடையில் இன்னுமொருவர் லிஸ்டில் விடுபடுகிறாரே, என்று அதை தேடிப்பார்த்தால் அதன் பின் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இருக்கிறது. விஜய், ஷங்கர் போன்றோருக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தினால் டாக்டரேட் பட்டம் கொடுத்த போது நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பலரும்  அப்பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி. சண்முகத்திடம்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஏன் நீங்கள் இன்னும் டாக்டரேட் பட்டம் கொடுக்க முன்வரவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு ஏ.சி. சண்முகம்  " நாம் ஏற்கனவே பலமுறை அவரை அணுகி டாக்டரேட் பட்டம் கொடுப்பதற்கு(!) முனவந்தோம், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் அதனை மறுத்து விட்டார்"  என்று கூறியுள்ளார்.  மேலும் பல வருடங்களுக்கு முன் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தினால் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட டாக்டரேட் பட்டதை, அவர் திருப்பிகொடுத்ததுடன் மட்டுமல்லாமல் அவரது "நிராகரிப்பு கடிதம்" ( Letter of Denial ) இன்றும் அப்பல்கலைக்கழக நோட்டிஸ் போர்டில் இருக்கின்றதாம். எத்தனையோ விடயங்களுக்கு ரஜினிகாந்தை வழிகாட்டியாக கொள்ளும் நம் சினிமா நாயகர்கள், இவ்விடயத்திலும் ரஜினியை பின்பற்றலாமே. அல்லது பெற்றுகொள்ளும் கௌரவ டாக்டரேட் பட்டத்தை துஸ்பிரயோகம் செய்யாமலாவது இருக்கலாமே.
அலர்ட்டா இருந்துக்கோ பாஸு, விட்டா இவனுக எங்களுக்கும் டாக்டரேட் கொடுத்துருவாங்க!
Download As PDF

குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்...

சென்ற ஞாயிறு சன் தொலைக்காட்சியில் "குட்டிச் சுட்டீஸ்" நிகழ்ச்சியை காண நேர்ந்தது. தொலைக்காட்சி ஊடகங்களில் குழந்தை நிகழ்ச்சி நடத்துவோருக்கு மட்டுமல்ல - பெரும்பாலும் எந்த நிகழ்ச்சி நடத்துவோருக்கும் சமூக அறிவும், சமூக பொறுப்புணர்சியும் இல்லை என்பதையே அவர்கள் கேட்கிற கேள்விகள் நிருபித்து கொண்டே வருகிறது. சென்ற ஞாயிறு - குழந்தைகளுக்கான அந்த நிகழ்ச்சியை நடத்திய இமான் - பல அபத்தமான கேள்விகளுடன் இந்த கேள்வியை கேட்டார் - ஒரு ஐந்து வயது குழந்தையுடம்.

"லவ்'ன்னு சொல்றாங்களே. அந்த லவ்வுனா என்ன" என்று. குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கேட்க வேண்டிய கேள்வி தானா? "காலேஜ்க்கு போவாங்கல... அவங்க அப்புறம் அப்பா அம்மாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்க கேட்பாங்க" என்று தனக்கு தெரிந்த பதிலை சொன்னது. குழந்தைகள் எது சொன்னாலும், எது செய்தாலும் அழகு தான். ரசிக்கலாம் தான். அதிகப்பிரசங்கித்தனமாக பேசினாலும் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து மனது சந்தோஷப்படும் தான்.

அதற்காக வயதுக்கு மீறின கேள்வியை கேட்பதில் எந்த நேர்மையும் இல்லை. அந்த கேள்வியை கேட்காவிட்டால் அந்த நிகழ்ச்சி சிறக்காதா? ஆபாசமான பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைப்பது. அபத்தமான கேள்விகள் கேட்பது என்று குழந்தைகளை வயதுக்கு மீறின விஷயங்களை செய்ய தூண்டும் செயல்பாடுகளை தொலைக்காட்சிகள் தவிர்ப்பது நல்லது. இது குறித்து மத்திய ஊடக ஒளிபரப்பு திட்ட கவுன்சிலிங் என்கிற அமைப்பு என்ன கூறுகிறது என்று பார்ப்போமா.

"குழந்தைகளை வயது வந்தவர்கள் போல சித்தரித்து தொலைகாட்சி ஊடகங்களில் காண்பிப்பது குற்றம்" என்று சொல்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்ன? மேலும் அந்த கவுன்சிலிங் அமைப்பு கூறியிருப்பதாவது, "குழந்தைகளைப் பெரியவர்கள் போல சித்தரித்து நெடும் தொடர் எடுப்பது, காதல் பாடல்களுக்கு, குத்துப் பாடல்களுக்கு நடனமாட விடுவது, காதல் பாடல்களை பாட சொல்வது என்பதெல்லாம் குற்றம் என்றும் ரியாலிட்டி ஷோக்கள் என்கிற பெயரில் குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடுவர்கள் பேசுவது மிகவும் தவறான செயல்.

 இது போன்ற ரியாலிட்டி ஷோக்களை இனி நடத்தவே கூடாது என்றும் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கிறது. இந்த அமைப்பு நாட்டின் அனைத்து ஒளிபரப்பு ஊடகத்துறை சார்பான அமைப்பு என்பது குறிப்பிடத் தக்கது. வரவேற்தக்க முடிவு தான். நாட்டில் ஒவ்வொரு செயல்பாட்டை கண்காணிக்கவும் ஒரு அமைப்பு இருந்து கவுன்சிலிங் செய்தாலும், அது பெயரளவுக்கு தான் இருக்கிறதே ஒழிய முழுமையாக செயல்படவில்லை என்பதே உண்மை.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  குழந்தைகள்  மனதில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பல சம்பவங்கள் நிருபிக்கின்றன. ரியலிட்டி ஷோவில் தோற்ற மாணவன் தற்கொலைக்கு முயன்று இருக்கிறான். மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பல நிகழ்ச்சிகள் - நல்ல விஷயங்களை விட ஆபத்தை ஏற்படுத்தும் விஷயங்களையே நிறைய கற்று தருகின்றன. சில தினங்களுக்கு முன் தினசரி ஒன்றில் வாசித்த செய்தி.

பதினொரு வயது சிறுமி, ஏதோ ஒரு நிகழ்ச்சியை பார்த்த பாதிப்பில் தன் உடம்பிற்கு தீ வைத்திருக்கிறார். சற்று நேரத்தில் அந்த சிறுமி பரிதாபமாய் இறந்துவிட்டது. இது அறியா குழந்தை மனதில் ஏற்பட்ட தாக்கம். வயது வந்தவர்கள் மனதிலும் நஞ்சை தூவும் வேலையை செய்கிறதே சில தொடர்கள். நான் எந்த தொடரையும் பார்ப்பதில்லை. ஆனால் எப்போதாவது தொடர்கள் பக்கம் போனால் - இந்த காட்சிகள் வர தவறுவதில்லை.

அது - எந்த பெண்ணுக்காவது அவரின் சினேகிதர்கள் - குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அந்த பெண்ணை கெடுக்க முனைவது. அதை ஆபாசமாக படம் பிடிப்பது. இதை பார்க்கிற ஒருவனுக்கு இதே புத்தி வராது என்பதற்கு என்ன நிச்சயம்.​குழந்தைகளின் அருகிலேயே இருந்து - அவர்கள் என்ன நிகழ்ச்சி பார்க்கிறார்கள் என்று பார்த்து கொண்டே இருக்க முடியாது. குழந்தைகளிடம் இருந்து ஆபாச காட்சிகளை மறைக்க பாடுபட வேண்டி உள்ளது.

கூடிய மட்டும் குழந்தைகளுக்கென கார்ட்டூன் மற்றும் நகைச்சுவை சேனல்கள் என்று செட் செய்து வைத்தாலும் - ​நல்ல நிகழ்ச்சியினுடேயும் விளம்பரங்கள் வக்ரமானதாய் உள்ளது. இன்றைக்கு நாட்டில் நிகழும் அனேக அவலங்களுக்கு முதற் காரணமாக தொலைக்காட்சி ஊடகங்களே இருக்கின்றன என்பதை உணர்ந்து - தங்கள் பணியினை பொறுப்புணர்ந்து ஊடகங்கள் மேற் கொண்டால் மிக நல்லது.
Download As PDF

பொருளியல் நெருக்கடியால் ஐரோப்பாவிலும் அதிகரித்த தற்கொலைகள்

இசுரேலின் கொடுந்தாக்குதால் உருக்குலையும் பாலத்தீனம்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னணி அடியாளாக நின்ற உலகை மிரட்டி வரும் இசுரேல் அரசு, கடந்த 14.11.2012 அன்று முதல், திடீரென பாலத்தீனத்தின் காசா பகுதிகளில் கடும் தாக்குதல்களை ஏவியது.
பாலத்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் “பயங்கரவாதிகள்” மீதான தாக்குதல் என்ற பெயரில், யூதவெறி இசுரேல் அரசு நடத்திய இக்கொலைவெறித் தாக்குதலில் சற்றொப்ப, 90க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் சில தினங்களில் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலும் பெண்களும், பிஞ்சுக் குழந்தைகளும் அடங்குவர்.
கடந்த 18.11.2012 அன்று மட்டும், இசுரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலால், 5 குழந்தைகள் உள்ளிட்ட 31 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 14.11.2012 தொடங்கிய ஆறு நாட்களில் மட்டும் சற்றொப்ப 1350 முறை காசா மீது தாக்குதல் நடத்தியதாக, மனிதகுலப் படுகொலை செய்ய எந்தவிதத் தயக்கமும் இன்றி புள்ளி விவரம் வெளியிடுகிறது.
இத்தாக்குதலின் போது, காசா மீது தரைவழித் தாக்குதலை நடத்த, 75 ஆயிரம் இராணுவத் தினரை ஆயத்தமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேடன்யாகு.
பாலத்தீனத் தாயகப் பகுதியான காசாவை, 1967இல் அடாவடித்தனமாக ஆக்கிரமித்த இசுரேல் நாடு, கடந்த 2005-ம் ஆண்டுதான், அனைத்துலக நர்டுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து வெளியேறியது. அதன்பின், 2007இல் காசா பகுதியில் நடைபெற்ற தேர்தலில் பாலத்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து, காசா மக்களை பணியவைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது இசுரேல். உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தடை, பொருளியல் தடை என பல தடைகளை விதித்து பாலத்தீன மக்களைப் பணியவைக்க முயன்றது இசுரேல்.
ஆனால், எதிர்பார்த்தது நடக்கவில்லை. மக்கள் பணியவில்லை. அதனால், தொடர்ந்து, காசாவை மீண்டும் ஆக்கிரமிக்க வேண்டுமென்ற வெறியுன் அவ்வப்போது இசுரேல் தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையில் இப்போதுவரை பாலத்தீனம் “பார்வையாளர்” (Observer) என்ற தகுதி நிலையில் உள்ளது. அதனை “உறுப்பினர் அல்லாத நாடு” (Non-member state) என்ற தகுதி நிலைக்கு உயர்த்திக் கொள்ள உலகின் பெரும்பாலான நாடுகளின் ஆதரவைப் பெற்றுவிட்டது.
2012 நவம்பர் 29இல் நடைபெறும் வாக்கெடுப்பில் பாலத்தீனம் “உறுப்பினர் அல்லாத நாடு” என ஏற்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறான தகுதியைப் பாலத்தீனம் பெற்றுவிட்டால் ஐ.நா.வின் பல்வேறு உறுப்பு அமைப்புகளில் யுனிசெப், ஐ.நா. மனித உரிமை மன்றம் போன்றவை) பாலத்தீனம் இடம் பெற வாய்ப்பு ஏற்படும்.
பிறகு இந்த உறுப்பு அமைப்புகளில் எல்லாம் இசுரேல் அமெரிக்க அச்சுக்கு எதிரான விவாதங்கள் எழும். இதனைத் தடுக்கும் நோக்குடனேயே இசுரேல் இத்தாக்குதலை நடத்தியது.
இசுரேல் மட்டும் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இருதரப்பும் போரை நிறுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். பாலத்தீனத்தின் மீதான போரை நிறுத்த, எகிப்து அரசு முயற்சிகளை எடுத்ததன் விளைவாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
பொருளியல் நெருக்கடியால் ஐரோப்பாவிலும் அதிகரித்த தற்கொலைகள்
கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரும் பொருளியல் நெருக்கடி, அமெரிக்காவில் வேலையிழந்த பலரையும் தற்கொலைக்குத் தள்ளியதை, 2008 மார்ச் தமிழர் கண்ணோட்டம் இதழில் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.
தற்போது, அதே போன்றதொரு பொருளியல் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஐரோப்பாவில், அதன் விளைவாக நடைபெறும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
கடந்த மே மாதத்தில் இத்தாலியின் ரோம் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றக் கட்டிடத்தின் முன், வேலையிழந்து விரக்தியடைந்த ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து அதே போல், இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
பிரிட்டன், பிரான்ஸ், கிரேக்கம் உள்ளிட்ட பல ஐரோப்பா நாடுகளிலும், பொருளியல் நெருக்கடியின் காரணமாகவும், வேலையிழப்புக் காரணமாகவும் நடைபெறுகின்ற தற்கொலை களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஐரோப்பிய நாடுகளிலேயே குறைந்த விகிதம் தற்கொலைகள் நடைபெற்ற கிரேக்க நாட்டில், பொருளியல் நெருக்கடியின் விளைவாக, வேலையின்மை விகிதம் 20 ஆக உயர்ந்துள்ள நிலையில், தற்கொலைகளின் விகிதம் இருமடங்காக உயர்ந்துள்ளது. 2011ஆம் ஆண்டு, அந்நாட்டு சுகாதாரத் துறை எடுத்த ஆய்வின்படி, கடந்த ஆண்டை விட 40 விழுக்காடு அளவிற்கு தற்கொலை விகிதம் உயர்ந்திருப்பதாகக் கூறியது.
கிரேக்கத்தைப் போலவே, போர்த்துகல், அயர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்ற நிலை நீடிக்கிறது.
உழைக்கும் மக்களைத் தற்கொலைக்குத் தள்ளிய உலகமயத்தை, என்றைக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பது என்பதை, ஐரோப்பிய உழைக்கும் மக்கள் உணர்ந்து, முடிவெடுக்க வேண்டும்.
Download As PDF

இளைஞர்களை சீரழிக்கும் மதுக்கடைகளை நாமே இழுத்துப் பூட்டுவோம்!

இளைஞர்களை போதையில் ஆழ்த்தி, அவர்தம் ஆளுமையைச் சீரழித்து, உடலையும் நாசப்படுத்தும் மதுவை, அரசே விற்பனை செய்யும் அவலம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
உணவைப் போலவே, மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள கல்வி, மருத்துவம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களும், முதலாளிகளும் கொள்ளை இலாபத்தில் வழங்கிக் கொண்டிருக்க, அரசாங்கமோ மது விற்பனையில் இலக்குகள் நிர்ணயித்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் தீபாவளிப் பண்டிகையின் போது, தமிழக அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் மதுக்கடைகள், சற்றொப்ப 270 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்துள்ளதாக அறிவித்தது. கடந்த, நவம்பர் 10ஆம் நாளில் ரூ 110 கோடிக்கும், நவம்பர் 11ஆம் நாளில் ரூ 100 கோடிக்கும், இதன் உச்சமாக தீபாவளி முதல் நாளான 12.11.2012 அன்று ரூ 150 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.
இது அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை விட கூடுதலானது என்பது மட்டுமல்ல, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 கோடிக்கு அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.
இத்தனைக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் விலை, இதுவரை 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் விலை ரூ 10 முதல் ரூ 15 வரையும், பிராந்தி, விஸ்கி போன்ற மதுவகைகள் ரூ 5 முதல் ரூ 40 வரையும் இதுவரை உயர்த்தப்பட்டுள்ளன.
இவ்வளவு விலையேற்றம் நடந்தும் கூட, குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையாமலிருப்பது மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிகமாக உள்ளதையேக் காட்டுகிறது. குடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே விலையேற்றம் செய்கிறோம் என அரசும், அதிகாரிகளும் வெளியில் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் மது விற்பனை மூலம் வரும் வருமானத்தை மேலும் அதிகரிக்கவே இவ்விலையேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது ஓரளவு நிறைவேறியும் உள்ளது.
உடலுழைப்பில் ஈடுபடுகின்ற எளிய உழைப்பாளிகள் உடற்சோர்வை மறக்க மதுவை நாடுவது என்ற கடந்த கால நிலைமையெல்லாம் இப்போது இல்லை. பள்ளி – கல்லூரி மாணவர்களும், படித்து வேலைக்குச் செல்லும் இளைஞர்களும், அலுவலகங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்க உழைப்பாளிகளும் மதுவை நாடிச் சென்று தம் ஆளுமையை சீரழித்துக் கொள்வது தான் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் சமூகப் போக்கும் கவலை கொள்ள வைத்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என பல்வேறு விழாக் காலங்களின் போது, தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம், அதிகளவில் மதுவை விற்பனை செய்ய வேண்டுமென இலக்கு நிர்ணயிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக, டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையை அதிகரிக்க, அந்தந்த பகுதியில் பல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். மதுப்பாட்டில் ஒன்றை பலருக்கு பகிர்ந்தளிக்கும் ‘கட்டிங்’ முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறு, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6823 டாஸ்மாக் மதுவிற்பனைக் கடை மற்றும், ஏராளமான அரசு அங்கீகரிக்கப்பட்ட மது அருந்தும் கூடங்களும், பலதரப்பட்ட ‘குடிமகன்’களுடன் இணைந்து தான், அரசின் இலக்கைத் தாண்டி விற்பனை செய்து முடிக்கும் ‘சாதனை’யை ஒன்றிணைந்து நடத்துகிறார்கள்.
அ.தி.மு.க. அரசு 2003ஆம் ஆண்டு அக்டோபர் முதல் சில்லறை மது விற்பனை முழுவதையும் டாஸ்மாக் மூலம் ஏற்று நடத்திவருகிறது.
தனியார் மதுபான நிறுவனங்களுக்கு, அரசே முகவராக இருந்து விற்பனை செய்துத் தந்து, தனியாருக்கு கொள்ளை இலாபம் சம்பாதித்துக் கொடுக்க முன்வந்த போது, மதுபான முதலாளிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
அ.தி.மு.க. அரசின் இம்முடிவை எதிர்த்து, யோக்கியவான் போல எதிர்த்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி செயலலிதா அம்மையாரின் முடிவைத் தனது ஆட்சியில் முழுமையாக ஏற்றுக் கொண்டு, செயல்படுத்தினார். இதன் பின்னணியில், மதுபான உற்பத்தி முதலாளிகள் தேர்தல் கட்சிகளுடன் கொண்ட ‘சுமுக உறவே’ இருந்தது பின்னர் அம்பலமானது.
இன்றைக்கும், தமிழக அரசு அதிகம் கொள்முதல் செய்யும் மது வகைகளை, உற்பத்தி செய்துத் தரும் மைடாஸ் மதுபான நிறுவனத்தின் அதிபர் மோகன், அ.தி.மு.க.வில் பதவிப் பெற்றுத் தரும் அளவிற்கு செல்வாக்குப் படைத்தவராக வலம் வந்தவர். எலைட் டிஸ்டிலரிஸ் மதுபான நிறுவனத்தில், தி.மு.க.வின் முக்கியத் தலைவர் ஜெகத்ரட்சகன் முக்கியமான பங்குதாரர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான ‘பெண் சிங்கம்’, ‘உளியின் ஒசை’ திரைப்படங்களைத் தயாரித்தவர், எஸ்.என்.ஜெ. டிஸ்டிலரீஸ் என்ற மதுபான நிறுவனத்தின் அதிபர் என்.ஜெயமுருகன்.
இவ்வாறு, தி.மு.க. அ.தி.மு.க. கட்சிகளும், மதுபான முதலாளிகளும் வைத்துக் கொண்ட கூட்டு, இன்று வரை அவ்வாறேத் தொடர்கின்றது. இந்த உறவில் விரிசல் ஏற்படும் போதெல்லாம், மதுவிலக்கு குறித்த அவ்வப்போது இந்தக் கட்சிகள் குரல் எழுப்புவார்கள். தேர்தல் கட்சிகள் சிலோகித்துப் பேசிக் கொள்வர்.
சுயமாக சிந்திக்கும் ஆற்றல், சொந்தமாக உழைத்து உண்ணும் சுயமரியாதை கொண்ட மனநிலை, இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஆளுமையோடு இளைய சமுதாயத்தினர் உருவாவதை எந்த தேர்தல் அரசியல் கட்சியும் உண்மையில் பொறுத்துக் கொள்வதே இல்லை.
தேர்தல் பரப்புரைக்காக வரும் இளைஞர்களுக்கு மது விருந்து வைப்பதும், மதுவையே கையூட்டாக அளித்து வாக்குப் பெறுவதும் என மதுவை மக்கள் மீது திணிக்கும் வேலையையும் தேர்தல் கட்சிகள் தான் வலிந்து மேற்கொண்டனர்.
பன்னாட்டு மது நிறுவனங்களும் முதலாளிகளும், கொழுப்பதற்காக உயர்தர பன்னாட்டு நிறுவன மது வகைகளுக்காகப் புதிய மதுக்கடைகளைத் திறக்க முன்வருகின்றது அ.தி.மு.க. அரசு.
உலகமயப் பொருளியல் கொள்கையின் விளைவால் ஏற்பட்ட, விலைவாசி உயர்வு, வேளாண்மை முடக்கம், 8 மணி நேர வேலை என்பது நீங்கி அதிக நேரம் பணியிலிருப்பது, அரசுகளின் இலவச அரிசி, உழைக்காமலேயே சம்பளம் பெறும் வகையிலான நூறு நாள் வேலைத்திட்டம் என பல்வேறு காரணிகள், மக்களை பொருளியல் மற்றும் உளவியல் குளறுபடிகளில் ஆழ்த்தின. இவை, மக்கள் வாழ்வில் நிலையற்றத் தன்மையையும், மனச்சோர்வையும் அதிகப்படுத்தின.
மேலும், உலகமய நுகர்வியப் பண்பாட்டின விளைவாலும், பொருளியல் அழுத்தங்களாலும் சிதைக்கப்பட்ட குடும்ப அமைப்பு, குடும்பம் மற்றும் சுற்றத்தாருடன் விரிசலை ஏற்படுத்தி, குடும்ப உறுப்பினர்களை உதிரிகளாகக் கட்டமைத்தது. ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகப் பேசி, ஒன்று கூடி வாழ்ந்த வாழ்க்கை முறை மாற்றி, அனைவரும் தனித்து விடப்பட்ட நிலையில், எளிமையான சிக்கல்களுக்குக் கூட, மதுவையும், அதன் உச்சமாகத் தற்கொலையையும் தீர்வாக மக்கள் நாடுகின்றனர். தமது சொந்த சோகங்களைத் தீர்க்கும் இரட்சகனாக மது இவ்வகையில் தான் இளைஞர்களுக்குப் பெரிதும் அறிமுகமானது.
காதல் தோல்வி முதல், தேர்வில் தோல்வி வரை இளைஞர்களின் மனச்சோர்வுக்குத் தீர்வாக மதுவும், அதற்கு அடுத்த நிலையில் தற்கொலையும் வைக்கப்பட்டிருப்பதனால் தான், தமிழகத்தில் அதிகளவில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற உண்மையையும் நாம் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளின் தீவிர விற்பனைக்கு பின்னரான காலங்களில், ‘பீர் குடிப்பவன் தான் இளைஞன்’ என்று கருதத்தக்க வகையில், திரைப்படங்களாலும், ஊடகங்களாலும் நடத்தப்பட்ட கருத்தியல் பரப்புரை அமைந்தது, ஒளிந்திருந்து, எப்பொழுதாவது ஒருமுறைக் குடித்து வந்த இளைஞர்களை, நிரந்தரமான, வெளிப்படையான குடிமகன்களாக மாற்றியது. பல திரைப்படங்களில் பெண்கள் பீர் குடிக்கும் காட்சிகளும் இடம் பிடித்தன. இவற்றின் விளைவாக, பள்ளி – கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்கே குடித்து விட்டு வந்து நின்ற அவல நிகழ்வுகள் நடைபெற்றன.
தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகளவில் பணம் சம்பாதிக்க வந்த புதிய இளைஞர்களை, அவர்களது வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க என்ற பெயரில், மதுபான அடிமைகளாக மாற்றும் வேலை அத்துறையிலேயே நடைபெற்றுக் கொண்டுள்ளது. அந்நிறுவனங்கள் அளிக்கும் விருந்துகளில் மது வகைகள் தவறாமல் இடம்பிடிக்கின்றன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வரவும், வளர்ச்சியும், மது அருந்துவதை தமது பணியிடப் பண்பாட்டில்(Work Culture) ஒன்றாகக் கருதும் இளைஞர்களை உற்பத்தி செய்து கொண்டிருப்பதால், மது விற்பனையை இது கூடுதலாக்குகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் ஜியோஸ்கோப் என்ற மது நிறுவன மேலாண் இயக்குநர் ஆர்.எல்.ராஜா. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 19.01.2012)
மேலும், சென்னை போன்ற மாநகரங்களில், புதிய ஐந்து நட்சத்திர விடுதிகளும் மதுக்கூடங்களும், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் ஆண்களை மட்டுமின்றி, அதிலுள்ள பெண்களையும் மதுபோதையில் ஆழத்துவது குறிப்பிடத்தக்கது.
முதலாளிகளின் கூட்டமைப்பான அசோசாம்(ASSOCHAM), தனது தொண்டு நிறுவனத்தின் மூலம்? சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் மதுப்பழக்கம் குறித்து அண்மையில் எடுத்து வெளியிட்ட ஆய்வறிக்கை, நமது கூற்றுக்கு வலு சேர்க்கிறது. அந்த ஆய்வில், 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களில், 45 விழுக்காட்டினர், ஒரு மாதத்தில் 6 முறை குடிப்பதாகவும், விழாக் காலங்களின் போது 70 விழுக்காட்டினர் மது அருந்துவதாகவும் தெரிவிக்கிறது. பன்னாட்டு முதலாளிகளின் கூட்டமைப்பான அசோசாம் வெளியிட்ட இவ்வாய்வு அறிக்கையில், மேற்கத்தியமயமாக்கல் தான் இதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டிருப்பது தான் வேடிக்கை. (காண்க: http://www.assocham.org/prels/printnews.php?id=2617)
அசோசாமின் மற்றொரு ஆய்வறிக்கை, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் மட்டைப்பந்து உலகக் கோப்பை நடைபெற்ற போது, மட்டைப்பந்து போட்டிகளை ஆர்வமுடன் பார்த்த இளையோரில் 55 விழுக்காட்டினர், போட்டியை முன்னிட்டு மது அருந்தினர் எனத் தெரிவித்தது. மது முதலாளி விஜய் மல்லையா கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டும் பின்னணி இதுதான்.
கடந்த 2002-03 நிதியாண்டில் 2,828.09 கோடிக்கு மது விற்பனையில் வருவாய் ஈட்டிய டாஸ்மாக் நிறுவனம், 2011-12 நிதியாண்டில் சற்றொப்ப 18,081 கோடி ரூபாய் மதுவை விற்பனை செய்ய முடிந்தது.
இந்த அதிகரித்துள்ள தொகை, உழைக்கும் மக்களில் கணிசமானோர், தமக்குக் கிடைத்த கொஞ்ச நஞ்சக் கூலி வருவாயைக் கூட மது அருந்தி அழித்ததன் காரணமாக வந்தத் தொகை. மதுவிற்கு அடிமையாகி நுரையீரல் அழுகி இறந்தவர்களின் குடுமபங்கள், வாழ வழியற்று நடுத்தெருவிற்கு வந்ததன் மூலம் கிடைத்த தொகை இது.
இவ்வாறு பலரது குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்ததன் காரணமாகக் கிடைத்த இந்தத் தொகையால் தான் அரசாங்கமே செயல்படுகின்றது எனச் சொல்வதற்கு உண்மையில் இந்த அரசியல்வாதிகள் வெட்கப்படுவதே இல்லை?
போதைப் பொருட்களை அரசே கட்டுப்படுத்த வேண்டும் எனக்கூறும், இந்திய அரசியலமைப்பு விதி 47-ஐ முறைப்படி கடைபிடித்தால், தமிழக அரசின் டாஸ்மாக் கடை மது விற்பனை, அரசமைப்புக்கு எதிரான நடவடிக்கையாகும். 
தமிழக அரசின் சொந்த வருவாய் வழிகளில் முதன்மையான வருவாய் இனமாக மதுக்கடை வருமானமே உள்ளது. எனவே, இதுவரை இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக் குறை 1,18,610 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாக தமிழக அரசு தனது 2012-13 வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில், 18,000 கோடி வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகளை மூடலாமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.
பெரும்பற்றாக்குறைக்கு இடையிலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதற்கு வேறு வழி என்ன இருக்கிறது எனக் கேட்போரும் உண்டு. அவர்கள் கீழ்வரும் அட்டவணைப் பார்க்கட்டும்.
tn_govt_650
தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலிக்கும் உற்பத்தி வரி (Central Excise Duty) கடந்த ஆண்டு 9376 கோடி ரூபாய். சுங்க வரி 29875 கோடி ரூபாய். தமிழகத்தில் இருந்து இந்திய அரசு வசூலித்த நிறுவன வருமான வரி, தனி நபர் வருமான வரி, செல்வ வரி, ஆகியவை மொத்தம் 34,586 கோடி ரூபாய். தமிழகத்திலிருந்து இந்திய அரசுக்கு கிடைத்த, சேவை வரி கடந்த ஆண்டில் 5594 கோடி ரூபாய். ஆக, வடநாட்டு தில்லிக் கொள்ளையர்கள், தமிழகத்திலிருந்து அள்ளிச் சென்ற வரி வருமானம் மட்டும், 79,631 கோடி ரூபாய் ஆகும்.(காண்க: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 அக்டோபர் 1-15 , கி.வெங்கட்ராமன்)
தமிழகத்திலிருந்து இந்திய அரசு கொண்டு செல்லும் இப் பெருந்தொகையை தமிழக அரசு, இதுவரை ஒருமுறை கூட முழுவதுமாகக் கேட்கவில்லை தமிழகத்திற்கு உரிமையுள்ள வருமானமான இந்தப் பெருந்தொகையில், தமக்குரியப் பங்கைக் கேட்க வக்கில்லாத தி.மு.க. – அ.தி.மு.க. உள்ளிட்ட தேர்தல் கட்சிகள் அனைத்தும், தில்லிக்குச் சென்று 1000 கோடிக்கும், 2000 கோடிக்கும் பிச்சை எடுப்பதை ஏதோ பெரிய சாதனையாக படங்காட்டுகின்றன. இதை நம்புபவர்கள், ‘டாஸ்மாக் இல்லையெனில் அரசே நடக்காது’ என ஏமாறுகின்றனர்.
எனவே, தமிழக அரசு, இந்திய அரசு தமிழகத்திலிருந்து கொள்ளையடித்துச் செல்லும் பணத்தை கேட்டுப் பெற்று, வருவாய் இழப்பில்லாமல் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக அரசு, மதுக்கடைகளை மூட முன்வரவில்லையெனில், அப்பணியை விழிப்புணர்வுள்ள தமிழக இளையோர் சமூகத்தைத் திரட்டி நாம் மேற்கொள்வோம்! டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டுவோம். அது நம் கடமை!
Download As PDF

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்

Mohamed Salih
அஸ்ஸலாமு அலைக்கும் ....
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
மீது நான் எழுதிய ஒரு சிரிய கவி இதோ .....

" காதலால் தேடல் "

அஸ்ஸலாம் அலைக்கு முஸ்ஸலாம் அலைக்கும்
அஸ்ஸலாம் அலைக்கு முஸ்ஸலாம் அலைக்கும் ....!!!!!

யா ரஸூலுல்லாஹ் எங்கள் யா ஹபீபுல்லாஹ்
யா ஷபீயுல்லாஹ் வருக அஸ்ஸலாம் அலைக் .......
அஸ்ஸலாம் அலைக்கும் .........

ஆதி தூதரே என் உயிரின் உயிரே
உங்களை காண வேண்டும் என்ற ஆவலாலே ....!!!
அஸ்ஸலாம் அலைக்கும் ........

கருவில் இருந்தேனே இனி கபுரில் இருப்பேனே
உங்களை காணும் எந்தன் ஆசை எப்ப தீருமோ....!!!
அஸ்ஸலாம் அலைக்கும் ........

கண்கள் தேடுதே என் இதயம் வாடுதே
வையகம் போற்றும் உண்மை வேந்தர் உங்களை காணவே ....!!!
அஸ்ஸலாம் அலைக்கும் ........

முத்த மிடனுமே நான் முத்த மிடனுமே
உங்கள் பாதங்களை தொட்டு தழுவி முத்தமிடனுமே....!!!
அஸ்ஸலாம் அலைக்கும் ........

இறுதி பார்வையே என் இறுதி பார்வையே
ஒளிவான ஜோதி முகத்தை நான் காண வேண்டுமே ...!!!
அஸ்ஸலாம் அலைக்கும் ........

உலக வாழ்விலும் என் இறுதி மூச்சிலும்
உறுதியாக உங்கள் நாமம் கூற வேண்டுமே ......
அஸ்ஸலாம் அலைக்கும் ........

உடலும் அர்பணம் என் உயிரும் அர்பணம்
மறை போற்றும் இறை வேந்தர் உங்கள் முன்னாலே...!!!
அஸ்ஸலாம் அலைக்கும் .......

 

Download As PDF

Tuesday, December 25, 2012

குழந்தைகள் எதிர்கொள்ளும் எட்டு சவால்கள் - எதிர்கொள்ளும் வழி!

உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்... குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்... முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.
'இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் முனைவர் லாவண்யா ஆகியோரிடம் முன் வைத்து பேசினோம். இருவரும் வரிசைப்படுத்திய எட்டு சவால்கள், இங்கே... பெற்றோர்களின் கவனத்துக்காக இடம் பிடிக்கின்றன.
  1. தனிமை :  
'நோபல்’ பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், 'ஒரு காலத்தில் நியாயத்தைக் கருதி உருவாக்கி வைக்கப்பட்ட உறவுகள், இன்று லாபம் கருதும் உறவுகளாக சுருங்கிவிட்டன’ என்று வேதனையுடன் சொல்லியுள்ளார். இன்றைய குழந்தை, தான் யாருடன் விளையாடுவது என்று தீர்மானிப்பதில்கூட லாபம், சுயநலம் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. 'இன்னாருடன் சேர்ந்து விளையாடினால்தான் என் குழந்தை நல்லவனாக வளருவன்’ என்ற கற்பிதத்தில் ஒவ்வொரு குழந்தையின் நட்பு வட்டமும் பெற்றோர்களால் கண்காணிக்கப்படுகிறது, சுருக்கப்படுகிறது.
பல வீடுகளில் சி.டி-க்களும் கார்ட்டூன்களுமே குழந்தைகளின் தோழமை ஆகின்றன. இப்படித் தனிமையில் வளரும் குழந்தைகள், எப்படி சோஷியலைஸ்டாக வளர முடியும்? எனவே, நண்பர்கள், உறவினர்கள் என சமூகத்திடம் பழகவிட்டு வளர்த்தெடுங்கள் குழந்தைகளை.
  2. மலையேறிப்போன விளையாட்டுப் பொழுதுகள் :  
குழந்தைகள் குழுவாக சேர்ந்து விளையாடிய காரணத்தால்... சாதிய உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளன. ஆனால், இன்று ஓர் குழந்தை குழுவாக விளையாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதைவிட, அந்தக் குழந்தை விளையாடுவதற்கே அனுமதிக்கப்படுவதில்லை. 'விளையாடுற நேரம் அந்த கணக்கைப் போட்டுப் பாரு’ என்பது போன்ற பெற்றோர்களின் சுயநலம் சார்ந்த தவறான புரிதலால், குழந்தைகளால் தங்கள் இயல்புக்குரிய விளையாட்டை அனுபவிக்க முடிவதில்லை.
பாரதி சொன்ன 'ஓடி விளையாடு பாப்பா’வை தான் மருத்துவர்களும் சொல்கிறார்கள். உடல், மன ஆரோக்கியத்துடன் உங்கள் குழந்தை வளர, அடுத்த முறை... 'விளையாடச் செல்கிறேன்' என்று கேட்டால், மகிழ்ச்சியுடன் அனுப்பி வையுங்கள்.
  3. முதலீடாகும் குழந்தைகள் :  
'உனக்கு நான் எல்.கே.ஜி-க்கு பத்தாயிரம் செலவு செய்தேன், ஐந்தாம் வகுப்புக்கு 20 ஆயிரம் செலவு செய்தேன், எட்டாம் வகுப்புக்கு 30 ஆயிரம் செலவழித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றே பெரும்பாலான பெற்றோரும், குழந்தைக்காக செய்யும் கடமை என்பதை உருமாற்றி... குழந்தை மேல் செய்திருக்கும் முதலீடு என்கிற எண்ணத்தை குழந்தையின் மனதில் விதைக்கிறார்கள்; அந்தக் குழந்தைக்கு... முதலீட்டுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டிய இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்கள். இந்த இன்வெஸ்ட்மென்டை மதிப்புமிக்க பொருளாக மாற்றுவது போல்தான் கொடுக்கப்படுகின்றன 'எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிட்டீஸ்’ என்கிற நடனம், இசை, ஆங்கிலம், ஃபிரெஞ்சு கிளாஸ் போன்றவை. அன்பை முதலீடு செய்யுங்கள் குழந்தை மேல்... பதில் அன்பு கிடைக்கும்!
  4. பெரிய மனுஷத்தனம் :  
குழந்தையின் திறமை, அறிவு ஆகியவற்றை, அது வாங்கும் மார்க்கை வைத்தே மதிப்பிடுகிறார்கள் வீடு மற்றும் பள்ளியில். அதாவது குழந்தையின் பெர்ஃபார்மென்ஸை வைத்தே அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு குழந்தையும் நாம்தான் 'நம்பர் ஒன்’னாக இருக்க வேண்டும் என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓட ஆரம்பிக்கும்போது, அதன் வயதுக்கும் இயல்புக்கும் மீறிய அறிவைத் தேடி அலைகின்றன. அதனால்தான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தை மூன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தை போல் பெரிய மனுஷத்தனமாகப் பேசுகிறது. இந்த பெரிய மனுஷத்தனம் சில சமயங்களில் வன்முறையாக உருவெடுக்கிறது. 'எம்பொண்ணு பெரிய மனுஷி மாதிரி பேசுவா..!’ என்று பெருமைப்படும் பெற்றோர், ஒரு கணம் நிறுத்தி சிந்தியுங்கள்.
  5. வடிகட்டப்படாத செய்திகள் :  
வரவேற்பறையில் டி.வி, படுக்கை அறையில் கம்ப்யூட்டர், மொபைல் போனில் செய்தி எனத் தகவல் தொடர்பு சாதனங்கள் நொடிக்கு நொடி பல்லாயிரம் செய்திகளை கொட்டிக் கொண்டே இருக்கின்றன. பெரியவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தத் தகவல் தொடர்பு சங்கிலியில், பாஸிட்டிவ் செய்திகளைவிட நெகட்டிவ் விஷயங்களே அதிகம் கிடைக்கின்றன. ஒரு குழந்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தத் தகவல்கள் அனைத்தும் அந்தக் குழந்தையையும் சென்று சேர்கின்றன. சீரியலில் வரும் இரண்டாம் தாரம் பற்றிய கதை, ஒரு மூன்றாம் வகுப்புச் சிறுமிக்கு எதற்குத் தேவை என்பது பற்றி யோசிப்பதில்லை. அதனால் ஒரு குழந்தை தன் வயதுக்கும், மனதுக்கும் தேவைஇல்லாத விஷயங்களைக் கற்றுக் கொள்வதால் அந்தக் குழந்தையின் அன்பான, பண்பான இயல்புகள் நமக்குத் தெரியாமலேயே சிதைக்கப்படுகின்றன. மீடியாக்களுக்கு தணிக்கை கொண்டு வருவதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்கும் என்று காத்திருக்காமல், முடிந்தவரை முடக்கிப் போடுங்கள் தொலைக்காட்சிகளை.
  6. ஒப்பீடு :  
'நீ மட்டும் இந்த வருஷம் ஒழுங்கா பரீட்சை எழுதி, ஃபர்ஸ்ட் குரூப் வாங்கலேனா... உன் லைஃபே அவ்வளவுதான்’ என்பது போன்ற உணர்வுப்பூர்வமான தாக்குதலை எதிர்கொள்ளாத குழந்தைகளே இன்று இல்லை. 'பக்கத்து வீட்டு சுரேஷ் மேத்ஸ்ல சென்டம் வாங்கியிருக்கான். நீ இன்னும் 80 மார்க்லயே நில்லு’, 'சுனிதா என்ன அழகா டான்ஸ் ஆடுறா... நீயும்தான் இருக்கியே’ என்பது போன்ற ஒப்பீட்டுத் தாக்குதலுக்கு ஆளாகாத குழந்தைகள் யார் இருக்கிறார்கள்? வீட்டுக்கு வீடு நடக்கும் இந்தத் தாக்குதல் மனதளவில் ஓர் குழந்தையை நிறையவே காயப்படுத்துகிறது. 'நாம் எதற்குமே லாயக்கு இல்லையோ’ என்ற தாழ்வு மனப்பான்மையையும், 'அவனால்தான இந்தத் திட்டு’ என்கிற பொறாமை மனப்பான்மையையும் வளர்க்கிறது. இது நாளடைவில் வன்முறைக்கு வழி செய்யும். ஒப்பீட்டுத் தாக்குதல் குழந்தைகளை எந்தளவுக்கு பாதை மாற்றுகிறது என்பதை உணருங்கள்.
  7. மாறிவரும் கலாசாரம் - உணவு :  
தொழில்நுட்ப வளர்ச்சியாலும் உலகமயமாக்கத்தாலும் பூமி பந்து சிறு உருண்டையாகிவிட்டது. நூடுல்ஸ், உலகக் குழந்தைகளின் உணவாகிவிட்டது. சர்வதேச பிராண்ட் நொறுக்குத் தீனிகள், ஹோட்டல்ஸ், கூல்டிரிங்ஸ் என உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றம் வந்துவிட்டது. நம் சீதோஷண நிலைக்குப் பொருத்தம் இல்லாத உணவு, அதிக கலோரி கொண்ட உணவு, அந்த அதிக கலோரியை வெளியேற்ற வழி இல்லாத வாழ்க்கை முறை என பல்வேறு காரணங்களால் சிறு குழந்தைக்கும் சர்க்கரை நோய், ஒபிஸிட்டி, ரத்த அழுத்தம் என படுத்துகிறது. அதே நேரம், 'சத்துக் குறைபாடு தேச அவமானம்’ என பிரதமரே சொல்லும் நிலை. குழந்தைகளின் உணவையும் ஆரோக்கியத்தையும் பொருத்தத் தெரிந்தவர்களே... சிறந்த பெற்றோர்.
  8. பாதுகாப்பு :  
சமீபகாலமாக குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. பள்ளிக்கும் வீட்டுக்கும் இருக்கும் தூரம், பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் தனித்து இருக்கும் குழந்தைகள் என பல்வேறு காரணங்களால் குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் தனித்து இருக்கும் குழந்தைகளிடம் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும், சீண்டல்களும் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன. இதனை நிகழ்த்துபவர்கள் பெரும்பாலும் அந்தக் குடும்பத்துக்கு நெருங்கிய உறுப்பினர்களாக இருப்பதால், அது சரியா... தவறா என்ற குழப்ப மனநிலைமையில் இருப்பது குழந்தைகளின் பெரும் பெரும் சவலாக இருக்கிறது.
வளரும் சூழ்நிலையும், மீடியாவின் வளர்ச்சியும் குழந்தைகளுக்குப் பாலுறவு குறித்து பல தவறான புரிதல்களை கற்பித்து உள்ளன. இதனால், பள்ளிக் குழந்தைகளிடம் கூட கர்ப்பக்கலைப்பு நடந்துள்ளது என்கிற அதிர்ச்சிகரமன தகவல்கள் வெளியாகி உள்ளன. 'குட் டச்... பேட் டச்’ என ஐந்து வயதில் இருந்தே கற்றுக்கொடுங்கள் தற்காப்பு விஷயங்களை.
''ஒரு கலாசார - பொருளாதார - சமூக மாற்றத்தில் பாஸிட்டிவ் ஆன விஷயங்களும், நெகட்டிவான விஷயங்களும் இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்த பாஸிட்டிவ் - நெகட்டிவ் விஷயங்களில் எது தேவை, தேவையில்லை என்பதில் முதலில் பெற்றோர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தால் மட்டுமே குழந்தைகள் குழந்தைகளாக வளர முடியும். அதற்கு, குழந்தைகளுடன் உரையாட வேண்டும்!'' என்கிறார் நடராசன் நெத்தியடியாக!
ஆம்... குழந்தைகளுடனான பெற்றோர்களின் குவாலிட்டி நேரங்களே இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை, வழிகாட்டலை அவர்களுக்கு வழங்கும்!
- நாச்சியாள்
- அவள் விகடன் 27-மார்ச் -2012
Download As PDF