-->

Wednesday, November 28, 2012

ஆசிரியர்களின் காதலுக்கு மாணவர்கள் எதிர்ப்பு...

பெரும்பாலும் மாணவர்களின் காதலுக்கு தான் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை எடுப்பர். பள்ளியில் மாணவர்கள் தான் அடித்து கொண்டு, ஆசிரியர்களால் நடவடிக்கை எடுக்கப்படுவார்கள். ஆனால் நாம் வாசித்த செய்தி ஒன்றில், இது முற்றிலும் மாறுப்பட்டு - ஆசிரியை மீது காதல் கொண்டு ஆசிரியர்கள் இருவர் மோதி கொண்ட சம்பவத்திற்கு - மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த வெட்கக்கேடான சம்பவம் நடந்தேறி உள்ளது.

மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே பாடமாகி போனது வருத்தமான விஷயம் தான். நாகரீகம் கருதி, சம்பந்தப்பட்டவர் நலன் கருதி ஊர் மற்றும் பள்ளி பெயர், ஆசிரியர் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. செய்தி தான் முக்கியமே தவிர - செய்தியில் அடிபட்டவர்கள் அல்ல. தவறை அவர்கள் உணர்வார்கள்.

"திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார் ________, 40. இதே பள்ளியில், ________, ________, ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். தலைமை ஆசிரியையு டன், ஆசிரியர்களான ________, ________, ஆகியோர், நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த வாரம், பள்ளி வளாகத்தில், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் இருவரும், தகாத வார்த்தைகளால் பேசியதோடு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதை வேடிக்கை பார்த்த மாணவர்கள், தங்களது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை விவரித்தனர். இதை அடுத்து, கடந்த புதன் அன்று, மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் உதவி துவக்கக் கல்வி அலுவலர் கண்ணய்யா ஆகியோர், பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

விசாரணையில், நடந்த சம்பவம் உண்மை என, தெரிந்ததை அடுத்து, தலைமை ஆசிரியை ________ வேறொரு துவக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.ஆசிரியர் __________ மற்றொரு துவக்கப் பள்ளிக்கும், மற்றொரு ஆசிரியர் __________ வேறு துவக்கப் பள்ளிக்கும், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்" காவல்துறை வரை சென்றுள்ளது காதல் விவகாரம்.

ஆசிரியர்களுக்கும் நிறைய நன்னடத்தை விதி வைக்க வேண்டும் போலும். இதனால் தானோ என்னவோ அரசு - அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வருகை பதிவேட்டிற்கு பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த உள்ளது. சமீபத்தில் வந்த சாட்டை திரைப்படத்தில் - ஆசிரியர்களின் எல்லா தகிடுதத்தங்களையும் வெளிக்காட்டி இருந்தனர் "மேற்கண்ட காதல் சம்பவத்தை தவிர்த்து"...

பணியிடத்தில் எப்படி இருக்க வேண்டும், சக பணியாளர்களிடம் எப்படி பழக வேண்டும் என்கிற ஒழுங்கு விதி கூட தெரியாமல் ஆசிரியர்களாக இருப்பது கண்டிக்க வேண்டிய ஒன்று. இவர்கள் எப்படி மாணவ மணிகளுக்கு சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும். மாணவர்களை தம் செயல்களால் ஆசிரியர்களே கெடுத்தது போலாகி விடாதா? இன்றைக்கு அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு - நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நல்ல ஊதியம்.

எத்தனை எத்தனை தேர்வெழுதி இன்று ஆசிரியர் பணியை அடைய வேண்டி உள்ளது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி பணி செய்ய வேண்டாமா? நல்லாசிரியர் விருது பெற்றால் மட்டும் - நாம் செய்தியாக போவதில்லை. இத்தகைய கெட்ட செய்திகளாலும் செய்தி ஆகலாம். எதில் செய்தியாக வருகிறோம் என்பது நம் செயல்பாடுகளை பொறுத்து அமையும்.

தம் பணியை செம்மையாக செய்கிற ஆசிரியர்களுக்கு மத்தியில் இத்தகைய ஆசிரியர்கள் இருப்பது - நல்ல ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் தான்.

வேலை கிடைக்கும் வரை என்ன பாடுபடுகிறோம். வேலை கிடைத்த பின் என்னவெல்லாம் செய்கிறோம். அதுவும் அரசு வேலை கிடைத்துவிட்டால் போதுமே.   தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்டத்தின் படி, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஆசிரியர்கள், எங்கும் பணி செய்ய முடியாத அளவு பணி இழப்பார்கள். புரிந்து செயல்படுவது நல்லது.

பதிவுக்கு உதவி -தினமலர் செய்தி.
Download As PDF

மரணத்தை ஏற்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி.

பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்கான நிகழ்ச்சி என்று சொல்லி கொண்டு - மேலும் மேலும் பிரச்சனைகளை வளர்ப்பதாக தான் உள்ளன, மன நல ஆலோசனை கூறுவோரின் வழிகாட்டுதல்களால் ஆன நிகழ்ச்சிகள். நான்கு சுவர்களுக்குள் நாம் பேசி தீர்க்க வேண்டிய அந்தரங்க குடும்ப விஷயங்களை - பொது வெளியில், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தங்கள் சுயநலத்துக்காக "பொரணி" பேசுகிறார்கள். காதலும், கள்ளக்காதலும், கூடா நட்பும் பார்ப்பவர்களுக்கு சுவராசியமான தாக இருக்கலாம்.

எப்போதும் பிறரின் அந்தரங்ககளை பார்ப்பதில், கேட்பதில் அலாதி சந்தோஷம் தான். ஆனால் இத்தகைய செயல்களால், நம் கையை கொண்டே நம் கண்ணை குத்த வைக்கும் ஈனச் செயல் என்று பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுவோராவது நினைக்க வேண்டாமா? உணர்ந்ததாக தெரியவில்லை. எதிரியோடு சண்டை போடுவது போல தம் உறவுகளோடு மல்லுக்கட்டி கொண்டு, தம் வாழ்க்கை துணையை பொது இடத்தில் கோப எரிச்சலால் அநாகரீகமாய் பேசுகிறோம்...

சேர்ந்து வாழக்கூடிய மன நிலையில் வாழ்க்கை துணை இருந்தாலும் - தம் பேச்சுகள், தம் செயல்கள் சாதகமான மனநிலையை சாகடித்து விடுமே என்கிற புரிதல் கொஞ்சமும் இல்லாமல் - ஒரு பெண் தம் துணையை பற்றி தொலைக்காட்சியில் கருத்து சொல்ல போக - பொது வெளியில் தங்கள் வாழ்க்கை ஏளனப்படுத்தப்படுகிறதே என்கிற விரக்தியில் ஒரு கணவன் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டான்.

தினமலர் இணையத்தில் வாசித்த செய்தி. தனியார், "டிவி' நிகழ்ச்சியில் மனைவி புகார் செய்ததால், மனமுடைந்த லாரி டிரைவர், தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், குப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர், லாரி டிரைவர் சின்னராசு, 24. இவருக்கும், தண்டராம்பட்டைச் சேர்ந்த மாலதி என்பவருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது; ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சின்னராசு, கேரளாவுக்கு லாரி ஓட்டி சென்ற போது, சந்தியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை 2 வது திருமணம் செய்து கொண்டார்; இவர்களுக்கு, ஒரு மகன் உள்ளான். 2 வது திருமணம் செய்து கொண்டதால், இருவருக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தனியார், "டிவி' நிகழ்ச்சியில், கணவர் 2 வது திருமணம் செய்தது குறித்து, அவர் மீது மாலதி, சரமாரி குற்றச்சாட்டு கூறினார்.

அந்த நிகழ்ச்சியின் போது, மொபைல்போன் மூலம், சின்னராசுவிடம் பேசினார். அப்போதும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த சின்னராசு, நேற்று முன்தினம், தண்டராம்பட்டு வீட்டில், சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னராசுவின் தந்தை தங்கராஜ், போலீசில் புகார் செய்தார். புகாரில், "என் மகன் மீது, தனியார், "டிவி' நிகழ்ச்சியில், மாலதி புகார் கூறினார். இதனால், அவமானமடைந்த என் மகன் சின்னராசு, தற்கொலை செய்து கொண்டார்' என, கூறியுள்ளார்; போலீசார் விசாரிக்கின்றனர்.

நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்த கணவனின் செயல் தவறு தான். மறுக்க முடியாது. அதை முறைப்படி சட்டரீதியாக தீர்ப்பது எப்படி உள்ளது - அதை விடுத்து, பொது மேடையில் விவாத பொருளாக்கி நாமென்ன சாதிக்க போகிறோம். காவல்துறைக்கு குடும்ப விவகாரம் போனால் கூட - காதும், காதும் வைத்த மாதிரி பேசி தீர்த்து கொள்ளவே முயல்வார்கள். "அடிச்சுக்குவாங்கய்யா... நாளைக்கே ஒண்ணா சேர்ந்துக்குவாங்க..." என்று சேர்த்து வைக்க முயல்வார்கள்.

சேர்ந்து வாழவே வாய்ப்பில்லாத பட்சத்தில் தான் அடுத்த கட்டத்திற்கு போவார்கள். இத்தகைய மரண நிகழ்வுகள் - அந்த தொலைக்காட்சிக்கு மேலும் ஒரு விளம்பரம் என்று தான் சொல்ல வேண்டும்... இவர்களின் சுயரூபம் குறித்த நமது முந்தைய பதிவு. நிகழ்ச்சி தயாரிப்போரை தயாரிக்காதே என்றா சொல்ல முடியும். இயலாது. இது ஒரு வியாபாரம். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்கள். பாதிக்கப்பட்டோர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கோபத்தில், எரிச்சலில் எதை வேண்டுமானாலும் பேசி விடக்கூடாது. பிறகு அதனாலான இழப்புகள் நமக்கே.சேர்ந்து வாழ வேண்டும் என்கிற நோக்கத்தில் தானே - தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுத்தது. ஆனால்?  சம்பந்த அந்த நபரின் மரண செய்தியை கேட்டு அந்த பெண் மனது என்ன பாடுபடும். தொலைக்காட்சிகளே, கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.
Download As PDF

தொல்லைக்காட்சியின் விஷமங்கள்..

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் "சொல்வதெல்லாம் உண்மை" பரவலாக பேசப்படுகிறது என்பதை நிகழ்ச்சியின் ஊடே வரும் அதிகப்படியான விளம்பரங்களை வைத்து (ஒரு மணி நேர நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இருபது நிமிட விளம்பரங்கள்)உணர முடிகிறது. சில தினங்களுக்கு முன் நான் பார்த்த "சொல்வதெல்லாம் உண்மையும்" அது குறித்த எனது பகிர்வும் இங்கே. கஷ்டத்தையும், எளிய மனிதர்களின் கண்ணீரையும் வியாபார நோக்கில் தொலைக்காட்சிகள் அணுகுகிறது என்பதே எம் கருத்து.

 "நான்கு சுவர்களுக்குள் பேசி தீர்த்து கொள்ள வேண்டிய விஷயம்" என்பார்கள் நம் பெரியவர்கள். அந்த "நான்கு சுவர்களுக்குள் பேசி தீர்த்து கொள்ள வேண்டிய விஷயத்தை" ஊரறிய பேசி - கடைசியில் கவுன்சிலிங் என்கிற பெயரில் நல்லவர்கள் போல வேஷமிட்டு நான்கு வார்த்தைகள் சொல்லி நிகழ்ச்சியை முடிக்கிறார்கள். உண்மையிலேயே இதில் சமூக சிந்தனை உள்ளதா என்று பார்ப்போம். பெரியவர்களின் வாழ்க்கை பிரச்சனையை அலசும் நிகழ்ச்சிக்கும் நான் பார்த்த நிகழ்ச்சியில் இருந்த சிக்கல்களுக்கும் நிறைய வேறுபாடிருந்தது.

இது நிச்சயம் "நான்கு சுவர்களுக்குள் பேசி தீர்க்கப்பட வேண்டிய விஷயமே"​. விஷயத்திற்கு, விவாதத்திற்கு வருவோம். பதினான்கரை வயது நிரம்பிய சிறுமியும் (இந்த வருஷம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார்) இருபத்தி இரண்டு வயது நிரம்பிய இளைஞனும் காதலித்து ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த சிறுமியின் பெற்றோர் தேடுகிறார்கள். அந்த சிறுமியும், பையனும் - கையில் ஆளுக்கொரு விஷப்பாட்டிலை வைத்து கொண்டு "எங்களை காப்பாற்றுங்க" என்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அலுவலக கதவை தட்டியதாக - நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் நிர்மலா பெரியசாமி தெரிவித்தார்.

அவர்களை அழைத்து தனியறையில் ஆலோசனை சொல்வதை விட, தொலைக்காட்சியில் உலகமறிய ஆலோசனை சொன்னால் தான் நன்மை பயக்கும் என்று எந்த மடையன் யோசனை சொன்னான் என்று தெரியவில்லை. நிகழ்ச்சியில் அந்த சிறுமியின் தாயார் சொன்னார். "நகரமா இருந்தாலும் இவள் ஓடி போனதும் யாருக்கும் தெரியாது. திரும்ப வந்ததும் யாருக்கும் தெரியாது. ஆனா அது கிராமம். இரண்டே தெரு. எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சு" என்று அழுதவர் தொலைக்காட்சிக்கு ஏன் பேச வந்தார் என்று தெரியவில்லை.

 நம் தவறுகளை நாமே வெளிச்சம் போடுவது - மல்லாந்து படுத்து எச்சில் துப்புவது போலில்லையா? பதினான்கு வயது பெண்ணின் காதலை(?) விவாதிக்கிறோம், புத்தி சொல்கிறோம் என்கிற பெயரில் வந்த யோசனையில் - எனக்கு விஷமத்தனமாக தோன்றிய நிர்மலா பெரியசாமியின் கருத்துகளை சொல்கிறேன். "உனக்கு பதினான்கு வயசு. நீ அந்த பையனை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்பா, அம்மா கூட போ. அப்படி போகலன்னா ஹோம்க்கு அனுப்புவாங்க. பதினெட்டு வயசு வரை அங்க தான் இருக்கணும்" என்கிறார்.

அதற்கு அந்த சிறுமி "நான் ஹோமுக்கே போயிடுறேன்" என்கிறது. யோசித்து பாருங்கள். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் சிறுமிகள் எவரேனும் காதல் வயப்பட்டு, இத்தகைய சூழல் ஏற்பட்டால் "நமக்கு ஹோம் என்கிற வசதி உள்ளது. பெற்றோரின் பிடுங்கல் இல்லாமல் ஹோமில் தங்கி கொள்ளலாம்" என்கிற விபரீதமான யோசனையையும், நிர்மலா பெரியசாமியின் ஆலோசனை தராதா? அதிலும் "ஹோமுக்கு தான் போகணும், ஹோமுக்கு தான் போகணும்" என்பதை திரும்ப திரும்ப சொல்கிறார்.

நிகழ்ச்சியில் கண்ட மற்றுமொரு விஷமத்தனமான விஷயம். சிறுமி, அந்த பையன், சிறுமியின் அம்மா என்று அனைவரும் பையில், மடியில் விஷ பாட்டில் வைத்திருப்பதாக சொல்லி ஒருவரையொருவர் மிரட்டும் காட்சி - தற்கொலை எனும் ஆயுதத்தை பயன்படுத்தி, அனைவரையும் மிரட்டலாம் என்கிற சிந்தனையை சிறார்களுக்கு தராதா? அந்த பதினான்கு வயது சிறுமி சொல்கிறது. "அவரில்லாமல் என்னால் வாழ முடியாது" என்று. பள்ளி மாணவர்கள் காதலித்தால் தப்பில்லை என்று சொல்லி விஷமத்தை கக்கும் சினிமாக்களை விட விஷமத்தன்மை கொண்டவை

இத்தகைய நிகழ்ச்சிகள். விவாதிக்கவும், மனிதர்களுக்கான பிரச்சனை பற்றி பேசவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்க - முன்பே சொன்னதை போல "நான்கு சுவர்களுக்குள் பேசி தீர்க்க வேண்டிய ஒரு சின்னஞ்சிறுமியின் விஷயத்தை" ஊரறிய காட்சிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறுமி என்று நாம் சொல்வதற்கான காரணம் - அந்த சிறுமி அவ்வளவு சின்னவளாக இருந்தாள். பத்தாம் வகுப்பு மாணவி என்று சொன்னால் நம்பக்கூட இயலாது. அந்த சிறுமியின் துப்பட்டாவை கொண்டு இறுக்குகிறார் தந்தை.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பியதற்கு என்ன காரணமிருக்கக்கூடும். ​நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சொல்லக்கூடும். "இதுவொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவிகளுக்கு தேவையான நிகழ்ச்சி" என்று. ஆனால் நாம் அப்படி நினைக்கவில்லை. ஒரு பக்கம் பள்ளி மாணவ மாணவிகள் காதலிக்கும் சீரியல்கள் மற்றும் சினிமாக்களை ஒளிபரப்ப வேண்டியது. மறுபக்கம் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சியாம். நீங்களே நோய் பரப்பும் கிருமிகளை பரப்பி விட்டு - பிறகு அதற்கான மருந்து மாத்திரைகளை நீங்களே தருவீர்களாக்கும்.

பத்து வருஷங்களுக்கு முன் இல்லையே சிறுமிகளின் காதலும், ஓடி போதலும். இன்றைக்கு ஏன். காட்சி ஊடகங்கள் தானே முதல் காரணம். பொறுப்புணர்வில்லாம்ல் நிகழ்ச்சி தயாரித்து சமூகத்தை குட்டி சுவராக்கி விட்டு, குட்டி சுவரான சமூகத்தை நேராக்கவும் நிகழ்ச்சி தயாரிக்கிறீர்கள். முட்டாள் மனிதர்கள் உங்களையும் நம்புகிறார்கள்.
Download As PDF

மூன்று மாத ‘இத்தா’ ஏன்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.


மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:

அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.

அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.


இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.

- மௌலவி அ.முஹம்மது கான் பாகவி
Download As PDF

செக்ஸ் அடிமையா நீங்கள்....?!

  Dr. ஷர்மிளா  
அடிமைகள் பல விதம். அதிலொரு பிரிவு செக்ஸ் அடிமை. பெண்களில் 72 சதவிகி தத்தினர் செக்ஸ் அடிமைகள் என்கிறது ஒரு ஆராய்ச்சித் தகவல். அதில் நீங்களும் ஒருவரா?
செக்ஸ் அடிமைத் தனத்தை எப்படிக் கண்டு பிடிப்பது, அதிலிருந்து வெளியே வருவது எப்படி? இனிவரும் தகவல்கள் உங்களுக்காக....
உங்களுடைய செக்ஸ் நடவடிக்கைகள் சாதாரண மானவையாக இல்லை என உணர்கிறீர்கள். ஆனாலும் அது செக்ஸ் அடிமைத்தனமா என்பதில் சந்தேகமா? கீழ்க்கண்ட கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
1. செக்ஸ் தொடர்பான புத்தகங்கள், நாவல்கள் போன்றவற்றை அடிக்கடி வாங்கிப் படிப்பவரா?
2. பகல் கனவு, அதிலும் சதா செக்ஸ் பற்றிய கனவே காண்பவரா நீங்கள்?
3. உங்களது அசாதாரண செக்ஸ் நடவடிக்கைகள் உங்கள் குடும்பத்தினர், நெருங்கிய தோழிகள் போன்றவர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறதா?
4. செக்ஸ் பற்றிப் பேசுவதில் அதிகக் கிளர்ச்சியடைபவரா?
5. சாதாரணத் தலைவலியாகட்டும், தலையே போகிற பெரிய பிரச்சினையாகட்டும், அதற்கான உடனடி வடிகால் உங்களுக்கு செக்ஸா?
6. மாமூலான மற்ற வேலைகளைச் செய்ய விடாமல் தடுக்கும் அளவுக்கு உங்களது செக்ஸ் ஆர்வம் விஸ்வரூபம் எடுக்கிறதா?
7. அளவுக்கதிக செக்ஸ் ஆர்வத்திலிருந்து விடுபட நீங்கள் ஏதேனும் முயற்சி மேற்கொண்டு, அது தோல்வியடைந்திருக்கிறதா?
மேற்சொன்ன கேள்விகளில் ஒன்றுக்கு உங்களது பதில் ஆமாம் என்றிருந்தாலும் நீங்கள் செக்ஸ் அடிமை என்பதில் சந்தேகமே இல்லை.
செக்ஸ் அடிமைப் பெண்களிடம் எப்படிப் பட்ட அறிகுறிகள் காணப்படும்?
எதிலும் ஒரு நிதானம் இருக்காது. குடும்பம், வேலை, குழந்தைகள், நட்பு என எல்லாவற்றிலும் விட்டேத்தியான ஒட்டு தலுடன் இருப்பார்கள். பொழுதுபோக்கு, கலை என மிகப்பிடித்த பல விஷயங்களிலிருந்து விலகியே இருப்பார்கள்.
அடிக்கடி படபடப்பு, சோர்வு, மன உளைச்சல், டென்ஷன், பொறுமையின்மை போன்றவை ஏற்படும்.
செக்ஸ் அடிமையாகக் காரணம் என்ன?
சிறு வயதில் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படும் பெண்களே பெரும்பாலும் இப்படி ஆகிறார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சித் தகவல். அப்படி ஏற்படுகிற அனுபவத்தை உடனடியாக வெளியே சொல்லி, குடும்பத்தாரால் அரவணைத்து, ஊக்கப் படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிற பெண்கள் சில நாட்களில் சகஜமாகி விடுகிறார்கள். மற்றவரிடம் சொல்ல பயந்து, அதைத் தனக் குள்ளேயே ரகசியமாகப் பாதுகாக்கிற பெண்கள், பின்னாளில் அதீத செக்ஸ் ஆர்வமுள்ளவர்களாக மாறு கிறார்கள் என்கிறது அந்த ஆராய்ச்சி. முள்ளை முள்ளால் எடுக்கிற டெக்னிக் மாதிரிதான் இதுவும்.
அதீத செக்ஸ் ஆர்வமுள்ள பெண்கள் அதற்கு வடிகாலாகத் தேர்ந்தெடுக்கும் முதல் ஆயுதம் சுயஇன்பம். ஆபாசப் படங்களைப் பார்ப்பது, புகைப் படங்களை ரசிப்பது என ஆண்கள் நாடும் விஷயங்கள் இவர்களை ஈர்ப்பதில்லை. 60 சதவிகிதப் பெண்களுக்கு வாரத்துக்கு இரண்டு முதல் நான்கு முறை சுய இன்பம் காண்கிற பழக்கம் இருப்பதாகவும் மேற் சொன்ன ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஆபத்தில்லாத, செலவில்லாத வடிகால் இது என்றாலும், இது அளவை மிஞ்சும் போது வேறு விதங்களில் தன் விளைவுகளைக் காட்டுகிறது.
  தீர்வுகள்  : 
போதை, குடி மாதிரியான எல்லா அடிமைத் தனங்களுக்கும் அடிப்படை மனசு. எனவே முதலில் சிகிச்சை தர வேண்டியது மனதுக்கு. செக்ஸ் ஆர்வம் உங்களைக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்வதாக உணர்கிறீர்களா? மனநல மருத்துவரை அணுகுங்கள். அவர் சொல்கிற மனப் பயிற்சிகள் உங்களை மாற்றும். யோகா, தியானம் போன்றவை கட்டாயம் பலன் தரும்.
கடவுள் நம்பிக்கை உள்ளவரானால், ஆன்மீக விஷயங்களில் அதிக நாட்டம் செலுத்துங்கள்.
மனசு கொஞ்சம் மாறுகிற வரை ஆண்-பெண் சந்திப்புகள் அதிகம் இருக்கிற இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.
இன்டர்நெட் உபயோகிக்கிற, பிரவுஸ் செய்கிற பழக்கமிருந்தால், தற்காலிகமாக நிறுத்துங்கள்.
உடற்பயிற்சி செய்யுங்கள். ஜாகிங் இப்பிரச்சினைக்கான மிக அருமையான பயிற்சி என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.
செக்ஸ் ஆர்வம் தலைதூக்கும் போதும், சுய இன்பம் செய்ய நினைக்கிற போதும் சட்டென மனத்தை உங்களுக்குப் பிடித்த வேறு விஷயத்தில் திருப்புங்கள்.
சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என உண்மையிலேயே நினைப் பவர்களுக்கு அந்த முடிவெடுக்க ஒரு நிமிடம் போதும். ஆனால் அதில் உறுதியில்லாதவர்கள்தான் பலமுறை அப்பழக்கத்தை விட்டவர்களாக இருப்பார்கள். அது மாதிரிதான் அதீத செக்ஸ் ஆர்வமும். முடிவில் உறுதியிருந்தால் இப்பழக்கத்திலிருந்து வெளியே வருவது சுலபம். முடிந்தவரை உங்களை பிஸியாக வைத்திருங்கள். மனசுக்கு வேலையில்லாமல் போகிற போதுதான் இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறது.
-பூவையர் பூங்கா
Download As PDF

Tuesday, November 27, 2012

அ‌திக‌ரி‌த்து வரு‌ம் த‌ற்கொலைக‌ள்

ஆ‌ண்டு தோறு‌ம் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டு ‌உ‌யி‌ரிழ‌ப்பவ‌‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே வரு‌கிறது. அ‌திலு‌ம் ஆ‌ண்களே அ‌திகள‌வி‌ல் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ள்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று உலக சுகாதார அமைப்பின் மனநலத் துறை இயக்குநர் சேகர் சக்ஸேனா கூறினார்.

தற்கொலை தடுப்பு அமைப்பான ஸ்நேகா-வின் வெள்ளி விழா சென்னையில் நே‌ற்று நடைபெ‌ற்றது. ‌விழா‌வி‌ல் பே‌சிய ஸ்நேகா அமை‌ப்‌பி‌ன் நிறுவனர் லட்சுமி விஜயகுமார், இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 68 ‌விழு‌க்காடாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதில் 75 சதவீதம் பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 14 வயதுக்கு குறைவான 2,500 குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுக்க போதிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தற்கொலை முயற்சியை தடுப்பது ஒவ்வொருவருடைய கடமை.

தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களிடையே, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்கொலை முயற்சி சட்டப்படி தண்டனைக்கு உரியது என்பதை மா‌ற்றுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இ‌ந்த ‌விழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்டு பே‌சிய உலக சுகாதார அமை‌ப்‌பி‌ன் மனநல‌த்துறை இய‌க்குந‌ர் சேக‌ர் ச‌க்ஸேனா, உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். நான்கு குடும்பங்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மனநலம் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களில் ஆண்களே அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. வாழ்க்கையை முழுதாக புரிந்துகொள்ளாத 25 வயதுக்கும் குறைவானவர்களே, இதில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.

75 சதவீத தற்கொலைகள் மன நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத குறைந்த வருவாய் நாடுகளிலேயே நடைபெறுகின்றன.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்பவர்களே அதிகம். ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதை எளிதில் தடுத்து விட முடியும். இதற்கு அரசு துறைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் தொடர்பான கொள்கையை மேம்படுத்துவது, மன நலம் தொடர்பான மருத்துவ நிர்வாகத்தை மேம்படுத்துவது, மரு‌த்துவ‌ர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் தற்கொலை தடுப்பு பயிற்சிகளை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது என்றார்.

இந்திய மன நல சமூகத் தலைவர் எம். திருநாவுக்கரசு பேசுகை‌யி‌ல், மருத்துவக் கல்வியில் தற்கொலை தடுப்பு குறித்த பாடமே இதுவரை இடம்பெறவில்லை. தற்கொலைகளை தடுக்க முதலில் அதுதொடர்பான பாடம் மருத்துவக் கல்வியில் இடம் பெற வேண்டும் என்று கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்
Download As PDF

அரை மணி நேரம் 'ஜாலி'-250 கலோரி 'காலி'!

Sex Half Hour Burns 250 Calories Aid0174
வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதோ, டிரெட்மில்களில் ஏறி கால் வலிக்க வலிக்க ஓடுவதோ தேவையே இல்லை. உங்களது உடலில் கூடிப் போய் விட்ட கூடுதல் எடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும்- செக்ஸ் உறவுக்காக.
'எக்சர்ஸைஸை' விட 'செக்ஸர்ஸைஸ்' சிறந்த உடற் பயிற்சி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உடல் எடையைக் குறைக்க உடல் உறவே சிறந்த வழி என்ற எண்ணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருக்கிறதாம். நாள் முழுக்க கடுமையான வேலை பார்த்து விட்டு வந்தாலும் இரவில் உறவு கொள்வதற்கு பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக இருக்கிறார்களாம்- அது உடல் எடையைக் குறைத்து, மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் என்பதால்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 76 சதவீத பெண்கள், உடல் எடைக் குறைப்புக்கு செக்ஸர்ஸைஸ் சிறந்த வழி என்று கருதுகிறார்களாம்.
மூன்றில் இரண்டு பங்குப் பெண்கள், ஜிம்முக்குப் போய் உடற் பயிற்சி செய்வதை விட சிறந்தது செக்ஸ் உறவு என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக தினசரி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தாங்கள் தயார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
கெர்ரி மெக்லோஸ்கி என்பவர் எழுதியுள்ள 'The Ultimate Sex Diet' என்ற புத்தகத்தில், அரை மணி நேர உடல் உறவின் மூலம் 150 முதல் 250 கலோரிகள் வரைக் குறைவதாக கூறியுள்ளார். உறவில் ஈடுபடுவோரின் செயல்பாடுகளைப் பொறுத்து சில நேரங்களில் இது 350 கலோரிகள் வரை கூட கூடுகிறதாம்.
முத்தமிடுவதன் மூலம் 200 கலோரிகள் வரை குறைகிறது என்ற தகவலையும் கெர்ரி தெரிவித்துள்ளார்.
எந்த ஜிம்முக்கும் போகாமலேயே இயற்கையான முறையிலேயே நமது உடல் எடையைக் குறைத்து நம்மை டிரிம்மாக வைத்துக் கொள்ள முடியும். செக்ஸ் என்பது உடல் ரீதியான இன்பத்துக்கு மட்டும் நமக்கு உதவுவதில்லை. மாறாக நம்மை புத்துணர்ச்சியுடனும், இளமையுடனும், வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது. எனவே செக்ஸ் என்பதை உடல் மகிழ்ச்சிக்கான விஷயமாக மட்டும் கருதாமல் அதை பல விதங்களிலும் நமக்கு உதவும் ஆசானாக கருதி அணுகினால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை என்பது கெர்ரியின் கருத்து.
Download As PDF

மனிதனை நெறிபடுத்தும் இறைமொழிகள்

மனிதன் சேர்த்து வைக்கும் செல்வத்தை விட மேன்மையான விஷயங்கள் ''இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும். அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.'' (அல்-குர்ஆன் 3:157)
நிராகரிப்பாளர்களை விட மறுமையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்
''நிராகரிப்போருக்கு (காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்'' (அல்-குர்ஆன் 2:212) அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான். ''முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள். பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; "அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான். மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான். இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.'' (அல்குர்ஆன்: 3:156) அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர் இறையச்சமுடையவரே! ''மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்'' (அல்-குர்ஆன் 49:13) அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்தால் கிடைக்ககூடிய நேர்வழி ''ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்'' (அல்-குர்ஆன் 8:29) நிராகரிப்போரின் சூழ்ச்சியை விட்டும் பாதுகாவல் பெற தேவையான செயல்கள்''ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.'' (அல்-குர்ஆன் 3:120) நிராகரிப்போரின் உள்ளத்தில் உள்ளவைகளை அறிந்தவன் அல்லாஹ் (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை. நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள். ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது "நாங்களும் நம்புகிறோம்" என்று கூறுகிறார்கள். எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக் கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்". (அல்-குர்ஆன் 3:119) சிறந்ததும், நிலையானதுமான மறுமை வாழ்க்கை''இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்.'' (அல்குர்ஆன்: 20:131) உலகில் கண்ணிருந்தும், மறுமையில் குருடனான மனிதன்"எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்" என்று கூறினான். (அப்போது அவன்) "என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?" என்று கூறுவான். (அதற்கு இறைவன்,) "இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்" என்று கூறுவான்.'' (அல்குர்ஆன்: 20:124, 125, 126) மனிதனை எச்சரிக்கும் இறைவேதம்''மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்''. (அல்குர்ஆன்: 20:113) ''Jazaakallaahu khairan'' Posted by Jafar Safamarva
Download As PDF

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

சீனி  விஷத்தன்மை வாய்ந்ததென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சிகரட், மதுபானவகைகள் போன்று இதனையும் கட்டுப்படுத்த வழிசெய்யவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 


இதனைக்கட்டுப்படுத்த அரசு வரிவிதித்தல் உட்பட பல சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமெனவும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். 

சீனி சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் உடல் எடை அதிகரித்தல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களுக்குக் காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

இது உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 35 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இது தொடர்பில் 'The Toxic Truth About Sugar' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். 

அக்கட்டுரையில் போசணைக்குறைபாட்டை விட உடற்பருமன் அதிகரிப்பானது மிகப் பெரும் சவாலாக உள்ளதாகவும் இதில் சீனி முக்கிய பங்கு வகிப்பதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். 

அது மட்டுமன்றி சீனியானது மனித உடலின் வளர்சிதை மாற்றத்தினைப் (Metabolism) பாதிப்பதுடன், ஹோர்மோன்களின் சீரற்ற சுரப்புக்கும், உயர் குருதி அமுக்கத்துக்கும் காரணமாக அமைவதாக அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Download As PDF

''குருதட்சணை வேண்டாம் உன் கற்பு போதும்'' - தடம்புரளும் ஆசிரியர்கள்


நமது செல்போனில் பதட்டத்தோடு வந்த அந்தப் பெண்குரல்..."நர்ஸிங் கல்லூரி மாணவி சாய்னா பேசறேன். உங்க பத்திரிகை மூலம் எங்க கல்லூரி தாளாளரின் முகத்திரையைக் கிழிக்க விரும்பறேன். உங்களைச் சந்திக்கணும்" என்றார் அழுகை கலந்த குரலில்!
அடுத்த கொஞ்ச நேரத்தில் தன் வாப்பா அப்துர் ரஹீமுடன் நம்மை சந்தித்தார். தனக்கு நேர்ந்த சங்கட அனுபவங்கள் குறித்து விவரிக்க ஆரம்பித்தார் சாய்னா.
""எனக்கு சொந்த ஊர் குடியாத்தம். வாப்பா.. எங்கவூர் மசூதியில் வேலை பாக்கறார். நர்ஸிங் படிச்சி நோயாளிகளுக்கு சேவை பண்ணணும் என்பதுதான் என் லட்சியம். எங்க வாப்பாவும் இதுக்கு ஓ.கே. சொல்லிட்டார்.
இங்க தமிழ்நாட்டில் இருக்கும் நர்ஸிங் கல்லூரிகள் நன்கொடைகளை அதிகமா கேட்டுச்சி. அப்ப என் தோழிகள், ஆந்திர மாநில கல்லூரிகள்ல நன்கொடை குறைவு. அதேபோல், கட்டணத்தை வசதிக்குத் தகுந்த மாதிரிஸ கொஞ்ச கொஞ்சமா கட்டலாம்னு சொன்னாங்க. அதைக்கேட்டு சந்தோஷமான நான் திருப்பதியில் இருக்கும் வேதா நர்ஸிங் கல்லூரிக்கு அப்ளிகேஷன் போட்டேன். எனக்கும் சீட் கிடைச்சிது. ரொம்ப சந்தோஷமா அந்தக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன்.
அங்க என் சந்தோஷம் ஒருவாரம் கூட நீடிக்கலை. காரணம், அங்க சேர்ந்தப்பவே என் சீனியர் மாணவிகள் என்னைத் தனியாக் கூப்பிட்டு "இங்க இருக்கும் கரஸ்பாண்டண்ட் வேதநாயகம் மோசமான ஜொள் பார்ட்டி. அவர்ட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்’னு எச்சரிக்கை கொடுத்தாங்க.
அவங்க சொன்னமாதிரியே கரஸ்பாண்டண்ட் வகுப்பில் டபிள் மீனிங்கில் பேசினார். சிலநேரம் வல்கராவும் கமெண்ட் அடிப்பார். ஹாஸ்டல தங்கி இருக்கும் மாணவிகளை அடிக்கடி வீட்டுக்குக் கூப்பிட்டு.. வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வார். அப்ப அவர் நிறைய சில்மிஷங்களும் பண்ணுவாராம். பல மாணவிகள் இதைச் சொல்லி அழுதிருக்காங்க. அவர் பலவிதமா எனக்குத் தூண்டில் போட்ட போதும் ரெண்டு வருசம் எப்படியோ சமாளிச்சிட்டேன். இப்ப ஃபைனல் இயர்.
இதற்கிடையில் இதே கல்லூரியில் படிக்கும் எங்க மாமா பையனை எங்க வீட்டில் எனக்கு நிக்காஹ் பண்ணிவச்சிட்டாங்க. எக்ஸாம் நெருங்கிய நேரத்தில் பலருக்கும் ஹால் டிக்கட் கொடுத்த கரஸ்பாண்டண்ட் எனக்கு மட்டும் கொடுக்காம இழுத்தடிச்சார்.. அதைக் கேட்டு நான் அவர் அறைக்குப் போனேன். எடுத்த எடுப்பிலேயே "நீயும் உன் ஹஸ்பண்டும் ஒழுங்கா எக்ஸாமை எழுதி நல்லபடியா ஊர்ப்போய்ச் சேரணும்னா நான் சொல்றதைக் கேட்கணும். உன்னை நினைச்சி நான் பலநாள் தூங்கலை. உன் அழகு என்னை பைத்தியமா ஆக்கிடிச்சி. ஒருநாள்.. ஒரே ஒருநாள் என் ஆசையை நீ தீர்த்துவச்சா அடுத்த நிமிஷமே ஹால் டிக்கட் தருவேன். இல்லைன்னாஸ உன்னைப்பத்தி தப்புத் தப்பா வதந்தி பரப்பிஸ உன்னை வாழவிடாமப் பண்ணிடு வேன்’னு வில்லன் கணக்கா.. வெட்கமில்லாமப் பேசினார். எனக்கு அழுகை வந்துடுச்சி. அப்படியே வெளில ஓடிவந்துட்டேன்"’ என்று வழிந்த கண்ணீரைத் துடைத்துகொண்டவர்..
""மேதாவி வேஷத்திலிருக்கும் அந்த அயோக்கியனின் முகமூடியைக் கிழிக்கணும். என்னோட எக்ஸாமை நான் நல்லபடியா முடிச்சி.. நர்ஸ் சேவையை வாழ்நாள் முழுக்கத் தொடரணும். இதுதான் என் விருப்பம். நம்ம வேலூர் கலெக்டர்ட்ட கூட அந்த கேடுகெட்ட கரஸ்பாண்டண்ட் பத்தி புகார் கொடுத்திருக்கேன். எனக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன்"’’ என்றார் அழுத்தமாக.
அந்தக் கல்லூரி கரஸ்பாண்டண்ட் வேதநாயகத்தைப் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும்.. ’அவர் பிஸி. வெளியே போயி ருக்கிறார்’ என்ற பதிலையே காலர் ஐ.டி.போல சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் கல்லூரி நிர்வாகம்.
இது குறித்து வேலூர் ஆட்சியர் ராஜேந்திரனிடன் நாம் கேட்டபோது ‘""சாய்னாவின் புகார் திடுக்கிடவைத்தது. இது குறித்து சித்தூர் கலெக்டருக்கு இவரது புகார் மனுவை அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கிறேன். கல்லூரிக்குள்ளேயே இப்படி காமப் பிசாசுகள் என்றால்ஸ சங்கடமாகத்தான் இருக்கிறது"’என்றார் வருத்தத்துடன்.
இந்த நிலையில்ஸ. நமது நண்பர் ஒருவர் மூலம் கடலூர் பகுதியைச் சேர்ந்த அந்த இரண்டு கல்லூரி மாணவிகளும் நம்மைச் சந்தித்தனர். அவர்கள் முகத்தில் கவலையான கவலை. அவர்களின் புகாரும் இதே ரகம்.
அவர்களை விசாரித்தபோதுஸ ""கடலூரில் இருக்கும் ஒரு கிறிஸ்த்தவக் கல்லூரியில் படிக்கிறோம். எங்க கல்லூரியில்.. தனது பெயரில் அருமையை வைத்திருக்கும் வசதிப் பேராசிரியர் துறைத் தலைவரா இருக்கார். அவரிடமும் ஜானின் மகன் என்ற பொருள் வரக்கூடிய பெயரையுடைய பேராசிரியரிடமும் நாங்க படாதபாடு படறோம். புராஜக்ட் ஒர்க்குக்கு கையெழுத்து வாங்கப்போனாஸ. அனுசரிச்சிப்போனாதான் கையெ ழுத்துன்னு கட்டிப்பிடிக்கறாங்க. மிரட்டி மிரட்டியே தப்புத்தப்பா நடந்துக்கறாங்க. குறிப்பா துறைத் தலைவர் வீட்டில் பெரும்பாலும் அவர் மனைவி இருக்கமாட்டாங்க. அதனால் மகள் வயசு உள்ள மாணவிகளை எல்லாம் பலவந்தமா வீட்டுக்கு கூட்டிட்டுப்போய்ஸ. விதவிதமா தன் ஆசையைத் தீர்த்துக்குவார்.
அழகான மாணவிகளைப் பார்த்தா எதையாவது சொல்லிஸ தங்கள் சபலத்தை தீர்த்துக்கறதில் இவங்க ரெண்டுபேருமே கில்லாடிங்க. போன வருசம் டூர் போனப்பஸ இந்த மன்மதப் பேராசிரியர்கள் பல மாணவிகளைத் தனித்தனியா கூட்டிட்டுப்போய் அங்க இங்க தொட்டுத் தடவிஸ எல்லா அசிங்கமும் பண்ணிஸ செல்போன்லயும் படம்பிடிச்சாங்க. அதே போல் இப்ப வந்திருக்கும் ஃபாதரும்.. அந்த விஷயத்தில் பிளேபாயா இருக்கார். படிக்கவரும் மாணவிகள் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுவது எந்த வகையில் நியாயம்? இவங்க அட்டூழி யம் நாளுக்கு நாள் அதி கரிச்சிக் கிட்டே இருக்கு. இவங்களை யாரு தட்டிக்கேட்கறது.?"’ என குமுறியவர்கள்..
""எங்களுக்கு மட்டும் இல்லை. திருவண்ணாமலைகடவுள் பெயரில் இருக்கும் அந்த கல்வி உலகத்தில் படிக்கும் மாணவிகளையும் சில பேராசிரிய மிருகங்கள் வேட்டையாடிக்கிட்டு இருக்கு. என் தோழி ஒருத்தியை போனில் பேசச் சொல்றேன் அவகிட்டயும் விசாரிங்க"’ என்றபடி அந்த மாணவியை செல்போன் லைனில் பிடித்துக்கொடுத்தனர்.
லைனில் வந்த அந்த மாணவிஸ""எங்க கல்லூரியில் மகிழ்ச்சியானவரும்ஸ அரச மோகனமானவரும் பேராசிரியரா இருக்காங்க. இவங்க மாணவிகளை பாலியல் ரீதியாய்ப் பாடாய்ப் படுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க எந்த மாணவியைக் குறிவைக்கிறாங்களோ அவங்க, இவங்க கூப்பிடற இடத்துக்கு வந்தாகணும். இல்லைன்னா எல்லா வகையிலும் பழிவாங்கிடுவாங்க. சமீபத்தில்ஸ நாங்க நெட்டை குட்டைன்னு பட்டப்பெயர் வச்சிக்கூப்பிடும் ரெண்டு மாணவிகளை அவங்க வற்புறுத்திஸ பிச்சாவரத்துக்குக் கூட்டிட்டுப்போனாங்க. குட்டையான மாணவிக்கு தங்கமான பெயர். ஆள் சிவப்பா, கொஞ்சம் புஷ்டியா இருப்பா. அந்த நெட்டை மாணவிக்கோ ஒரு மிடுக்கான கவிஞரின் பெயர். ஆள் கருப்பா இருந்தாலும் வளர்ந்து வாட்டசாட்டமா இருப்பா.
இவங்களை அங்க இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. அப்ப ஒரு பேராசிரியர் தன் செல்போன்லஸ ஒரு மாணவியை அங்க அங்கமாஸ படம் எடுக்கஸ அந்த மாணவிஸ என் வாழ்க்கையை ஏன் சார் வீணாக்கறீங்கன்னு அழுதிருக்கா. அவ அழுகையைப் பார்த்து பயந்துபோன அந்த பேராசிரியர்ஸ சரி இதோ டெலிட் பண்ணிடறேன்னு அவ எதிர்லயே அழிச்சிருக்கார். அப்பவும் அந்தப் பொண்ணு அழிச்சாலும் படத்தை ரெகவரி பண்ணமுடியும். எனக்கு எதிர்காலத்தில் பிரச்சினை வந்தா என்ன பண்றதுன்னு கதற "உனக்கு நிறைய மார்க் போடறேன். ஏன் கவலைப்படறே. இதை நானும் மறந்துடறேன், நீயும் மறந்துடு’ன்னு சொல்லியிருக்கார். பாடம் போதிக்கக்கூடிய புனிதமான தொழிலில் இருப்பவர்கள் செய்யக்கூடிய செய்கையா இது?"’என்றார் கொதிப்பாய்.
இவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டு கலவரமான நாம் சிதம்பரத்தில் இருக்கும் அந்த எஸ்.ஐ.யைத் தொடர்பு கொண்டுஸ இது குறித்தெல்லாம் கேட்க,
""கல்விக்கூடங்கள் சமீபகாலமா காமக்கூடங்களா மாறிக்கிட்டு வருது. பிச்சாவரத்துக்கு போறதோட இதே சிதம்பரத்தில் இருக்கும் லாட்ஜ்களில் ரூம்போட்டும் மாணவிகளை இப்படிப் பட்ட பேராசிரியர்கள் வேட்டையாடறாங்க. ஒரு தடவை நாங்க ரெய்டுக்குப் போனப்ப, ஒரு லாட்ஜில் மாணவிகளோட தங்கியிருந்த பேராசிரியரைக் கையும் களவுமா பிடிச்சோம். அந்த மாணவிகள் வீட்டுக்குத் தெரிஞ்சா தற்கொலை பண்ணிக்குவோம்னு கதற அவங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பி வச்சோம். அந்தப் பேராசிரியருக்கு மட்டும் நாலு அறைகொடுத்து எச்சரிச்சோம். இதேபோல். இன்னொரு ரெய்டில் டி.டி.யில் ஒர்க் பண்ணும் 35 வயசு பேராசிரியை ஒருத்தர்ஸ 19 வயசு மாணவனோட மாட்டினாங்க. அந்தப் பேராசிரியை இனி இப்படி செய்யமாட்டேன். என்னை விட்டுடுங்கன்னு காலில் விழுந்து கதறினாங்க.
பையனோ மேடம்தான் வற்புறுத்தி அழைச்சிக்கிட்டு வந்தாங்கன்னு கண்ணைக் கசக்கினான். ரெண்டுபேரையும் துரத்திவிட்டோம். காலம் எப்படியெல்லாம் மாறிப்போச்சு பாருங்க" என்று அதிரவைத்தார். இத்தகைய கொடுமைகளுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது? (source: http://www.enayamthahir.com/)
இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணமாகவே இருக்கிறது. பாடசாலைக்கும், கல்லூரிக்கும் செல்லும் தங்களது பிள்ளைகள் அதிலும் குறிப்பாக பெண்ணைப்பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். இதற்கெல்லாம் அரசுதான் பொறுப்பேற்று இதுபோன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்ட சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும். அதுமட்டுமின்றி சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தவேண்டும் அரபுநாடுகளைப்போல! செய்வார்களா?
Download As PDF

விளையாட்டு காதலியால் ஏற்பட்ட விபரீதம் - இப்படியும் சில பைத்தியங்கள்!

இன்றைய இளைஞர்கள் ஓடியாடி விளையாடுவதை மறந்து பல காலங்கள் ஆகி விட்டன. அவர்கள் விளையாட்டெல்லாம் கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸில் விளையாடுவதாகவே உள்ளது. இப்போது அவர்கள் தங்கள் காதலிகளையும் வீடியோ கேம்சிலேயே தேடுகிறார்கள். இவர்களை திருப்திப்படுத்துவதர்க்காக ஜப்பான் நிறுவனம் ஒரு வீடியோ கேமை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்திய உடனே கேம் சூடுபிடித்தது. மிகவும் பிரபலமடைந்தது. அந்த கேமின் பெயர் கூட 'லவ் பிளஸ்' என்பது தான்.
இந்த கேம் 'திரீடி' அனிமேசனில் உருவாக்கப்பட்டது. இந்த கேமில் மூன்று பெண்கள் வருவார்கள். அந்த மூவரில் ஒருவரை விளையாடுபவர் தங்கள் காதலியாக தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் அந்த விளையாட்டுப் பெண் உங்களை அவ்வளவு சுலபத்தில் காதலனாக ஏற்றுக் கொள்ளாது. தனக்கு காதலனாக வரவேண்டும் என்றால் அவனுக்கு இன்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று இந்த பெண் பல பரீட்சைகளை வைக்கும்.
எப்போதும் வேலை வேலை என்று இருப்பவர்களுக்கும் உலகம் என்று ஒன்று இருப்பதையே மறந்து எப்போதும் (வீடியோ) விளையாட்டு விளையாட்டு என்று இருந்து காதலிக்க கூட நேரமில்லாமல் இருக்கும் இளைஞர்களையும் மனதில் கொண்டே இந்த விளையாட்டை வடிவமைத்திருக்கிறார்கள்.
காதல் துணை இல்லாமல் வாடுபவர்களுக்காக உருவான இந்த கேமில் 'சால் 9000 'என்ற புனை பெயரில் ஊர் இளைஞன் விளையாட தொடங்கினான். நாட்கள் செல்ல செல்ல இந்த விளையாட்டுக்கு அவன் அடிமையாகி விட்டான். கடைசியில் விளையாட்டில் வரும் மூன்று பெண்களில் ஒன்றான 'நீனே அனசாகி' என்ற அனிமேசன் பெண்ணை உண்மையாகவே காதலிக்கத் தொடங்கி விட்டான்.
உண்மையான ஒரு பெண்ணை காதலித்தால் ஒரு இளைஞனுக்கு என்னென்ன உணர்வு தோன்றுமோ, அதே உணர்வு இந்த காதலியின் மீதும் அவனுக்கு ஏற்பட்டது. கம்ப்யூட்டரில் அனசாகியை பார்க்க முடியாவிட்டால் ஏக்கத்திலே மனம் நொந்து போவான். இனி அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலை வந்தது.
திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தான். பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவை அதற்காக தேர்ந்து எடுத்தான். ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. காதலியின் அனிமேசன் உருவத்தை போட்டோ எடுத்து அதை பெரிதாக பிரின்ட் அவுட் எடுத்து தேவாலயத்தில் திருமணம் முடித்தான். அந்த போட்டோவுடனேயே முதலிரவும் நடந்தது. புகழ்பெற்ற டோக்கியோ இன்ஸ்டிட்யுட் ஆப் டெக்னாலஜி அரங்கில் புரோகிதர் வந்து சடங்குகள் செய்ய இன்னிசை நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது, இந்த திருமண நிகழ்ச்சி.
இந்த மனிதரின் கடைசி ஆசையாக உடலில் என்ன எழுதி வைத்திருக்கிறார் தெரியுமா? 'நான் இறந்து போனால், வீடியோ கேமில் இருக்கும் என் மனைவியையும் என்னோடு சேர்த்து புதைத்து விடுங்கள்.' எப்படி இருக்கிறது? விளையாட்டு காதலியால் ஏற்பட்ட விபரீதம். குழந்தைகளை அதிகம் வீடியோ கேமில் மூழ்கி விடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கே உண்டு.
Download As PDF

பெண்களை இழுத்துப்போகும் கலாச்சரம்!

"பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; பெண் சுதந்திரம் வேண்டும்" இவை இரண்டையும் நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் போதும், மீடியாக்களில் உங்கள் முகம் காட்டப்படும். அடுத்த கட்டமாக சமுதாய முன்னேற்றம் கருதும் தியாகி என்று நீங்கள் வர்ணிக்கப்படுவீர்கள்.
இந்த வார்த்தைகள் புரட்சிகரமான கோஷங்களாக வெளியில் தெரிந்தாலும் இதன் மூலம் வீதிக்கு இழுக்கப்பட்ட பெண்ணினத்தின் சமூகச் சீரழிவுகள் ஆக்டோபஸாக மாறியிருக்கின்றன. அந்தச் சீரழிவுகளில் எல்லா சமுதாயப் பெண்களும் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.
வாலிபப் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு எனும் முகமூடியில் தங்கள் இச்சைகளை வெளிப்படையாகவே தீர்த்துக்கொள்கின்றனர். அடுத்த வாலிபன், தன் உடலை - அதுவும் மறைவிடங்களின் அழகைப்பார்த்து தம்மைப் புகழ, தொடர வேண்டும் என்ற நோக்கில் ஆடை அணிகிறார்கள். அந்தரங்க விஷயங்களை அம்பலத்தில் பேசுவதை சுதந்திரம் என்று நினைத்து விட்டனர். பெற்றோர் இது குறித்துப் பேசுவதோ, கண்டிப்பதோ பெரும்பாவச் செயலாக மாறிவிட்டது.
அந்நிய சமுதாய வாலிபர்களுடன் சுற்றியலைவதும், கற்பைப் பறிகொடுப்பதும், மிஞ்சும்போது ஈமானைத் தூகியெறிவதும் சர்வ சதாரணமாகிவிட்டது. செல்லமாக வளர்த்த மகள் தன் தந்தையை "அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை" என்று காவல் நிலையத்தில் பதிவு செய்கிறாள். தன் தாயை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறாள். "உங்கள் வீட்டு வாசலும், தோப்புத் துறவுகளும் எனக்குத் தேவையில்லை" என்று துணிந்து கூறுகிறாள். ஈமானற்ற வாலிபனின் இன்பத்(!) துணை ஒன்றே தம் வாழ்வின் இலக்கு என்பதுபோல் கண்டம் விட்டு கண்டம் தாவுகிறாள்.
பெண்களின் உடம்பை வியாபரமாக்கவே மேற்கத்தியர்களின் "பெண் சுதந்திரம்" கோஷம் :
பெண்களின் உடலை வியாபரமாகவே மேற்கத்தியர்கள் "பெண் சுதந்திரம்" கோஷத்தை எடுத்து வருகின்றனர். "நாம் மார்க்கத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சமூகத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளோம்" என்று எடுத்துச் சொல்லப்பட்டபோது அப்படிச் சொன்னவர்கள் "பிற்போக்குவாதிகள்" என்றும், "பெண்ணினத்தை அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்கள்" என்றும் "உலக நடப்பு தெரியாதவர்கள்" என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். ஏன்! குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் கூட காலத்திற்கு ஒவ்வாதவை என்று பெயர்தாங்கி ‘முஸ்லிம் ஸ்காலர்’களாலேயே சாடப்பட்டன.
இழக்கப்பட்ட, இழந்து கொண்டிருக்கும் முஸ்லிம் இளம்பெண்களின் கற்புகளுக்கு பதில் சொல்லப்போவது யார்? சமுதாயப் பெண்களைக் கட்டிப்பிடித்துக் கதைத்துக் கொண்டிருக்கும் அந்த வாலிபர்களிடம் நமது சமுதாயப் கண்மணிகளாம் பெண் கண்மணிகளைத் தூக்கிக் கொடுத்தவர்கள் யார்? ஈமானையே துச்சமாக நினைக்குமளவுக்கு வாலிப சமுதாயத்தை மாற்றியமைத்தவர்கள் யாராக இருப்பினும், அவர் மறுமையின் மைதானத்தில் அழைக்கப்படுவார். விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.
பெற்றோர்களே! பிள்ளைகளை ஒழுக்கசீலர்களாக மாற்றி அல்லாஹ்விடம் ஒப்படையுங்கள். அதற்காக திட்டமிட்டு குடும்பத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.
தாங்களே ஊக்குவித்தால் அத்தகையோரிடமிருந்து எந்தப் பேச்சும் வெளிப்படாது. சீரழிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் விபத்துகள் என்று கூறிவிட்டு தாம் தப்பிக்க தேடிக்கொள்வார்கள்.
எனவே, சமுதாய அமைப்புகளே! இயக்கங்களே! கழகங்களே! திட்டமிட்டு நடக்கும் "இழுத்துக்குப் போவதை" இன்னமும் நீங்கள் விட்டுக்கொண்டே இருக்கப் போகிறீர்களா? வேண்டாம்! சமுதாய ஒழுக்கத்தைக் காக்கவும், அல்லாஹ்வின் கோபம் வெளிப்படுவதைத் தடுக்கவும் நீங்கள் களமிறங்குங்கள்.
Download As PDF

முஸ்லிம்களை திட்டமிட்டே 'தீவிரவாதி'களாக்கும் மிருகங்கள்!





முஸ்லிம்களை திட்டமிட்டே 'தீவிரவாதி'களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,
இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.
"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"
இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக ஒரு சர்வதேசிய அரசியலைத் தொடங்கி கட்டமைக்க வேண்டிய கட்டாயம், குறிப்பாக 1908 இல் இரானில் முதன் முதலாக பெட்ரோலிய எண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின் அமெரிக்காவால் தொடங்கிவைக்கப்பட்டது என்ற புள்ளியிலிருந்து பயணித்தால் உலகளாவிய பயங்கரவாதத்தின் வேரை கண்டடைய முடியும்.
இந்த சர்வதேச அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதை நோக்கி நகர்த்திச் செல்லும் இயக்கக்கூறுகளாக உள்ளூர் அரசியல் இருக்கிறது.
உண்மை இவ்வாறு இருக்க, இந்திய அளவிலான தீவிரவாதத்தை தனித்துப் பார்க்க முடியாது. உள்ளூர் தீவிரவாதம் மேற்படி சர்வதேச தீவிர வாதத்தின் உள்நோக்க அரசியலுடன் பின்னிப் பிணைந்தது.
உலகின் மொத்த பெட்ரோலிய வளத்தின் 80% அரபுப் பிராந்தியத்தில் புதைந்துள்ளது. இந்த உண்மையை உணர்ந்திடாத அரபு ஷேக்குகளும் சுல்தான்களும் அமீர்களும் அந்த அளப்பரிய செல்வத்தை சுரண்டிப்போக அமெரிக்க, ஐரோப்பிய, பிரிட்டிஷ் மேற்கத்திய நாடுகளின் எண்ணெய்க் கம்பெனிகளை கட்டுப்பாடின்றி அனுமதித்தனர் என்பது தான் துயரமான வேடிக்கை.
இந்தக் கம்பெனிகள் பெயருக்கு ஒரு விலையைக் கொடுத்து விட்டு (ஒரு பேரலுக்கு முக்கால் டாலர்!), உலகெங்கும் கொள்ளை லாபத்துக்கு எண்ணெயை விற்று கோடிக் கணக்கில் டாலர்களைக் குவித்தன.
ஆனால் இந்த செல்வத்தின் பிறப்பிடமான அரபுநாடுகளோ சமூக-பொருளாதார வாழ்வில் பின் தங்கி ஏழைகளாக இருந்தன என்பதை இப்போது நம்புவது கடினமே.

2ம் உலகப்போருக்குப் பிந்தைய உலகளாவிய தேசிய உணர்வும் சோசலிசத்தின் எழுச்சியும் அரபுநாடுகளிலும் தேசிய விடுதலை உணர்வுகளைத் தூண்டியது.
இரானில் இந்த எழுச்சி மேலோங்கிய போது பெட்ரோலிய வயல்கள் தேசிய மயமாக்கப்பட்டன. இரான் தேசியத்தலைவர் மொசாதிக் இதற்கு தலைமை தாங்கினார்.
தமது கல்லாப் பெட்டியின் கொழுத்த பகுதியில் அடிவிழவே அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் இந்த தேசியமயமாக்கலுக்கு தடைகளை ஏற்படுத்தின.
இரானின் சுதந்திரமான எண்ணெய் வர்த்தகத்தை கவிழ்த்துவிட பலவகையிலும் ஈனச் செயல்களில் இறங்கினர்.
பிரிட்டிஷ் கப்பல்கள் இரானின் எண்ணெய்க் கப்பல்களை கடலில் தடுத்தன. உச்சகட்டமாக மொசாதிக்கின் ஆட்சியைக் கவிழ்த்து அவரையும் கொலை செய்தனர்.
தனது கைக்கூலியான மன்னன் ஷாவின் பொம்மை அரசை அமெரிக்கா நிறுவியது. ஒருகட்டத்தில் இவனும் தேசிய இயக்கத்தின் பேரெழுச்சி அலையில் குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு ஓடினான். ஏகாதிபத்திய கெடுபிடிகள் அனைத்தையும் மீறி அரபு தேசியம் வளர்ந்தது. இரானைத் தொடர்ந்து அரபுநாடுகள் அனைத்தும் தமது எண்ணெய் வளத்தை தேசியச் சொத்தாக பிரகடனம் செய்தன.
வழக்கம் போலவே அமெரிக்காவும் அதன் சக கொள்ளையர்களும் இந்த நாடுகளை தொடர்ந்து மிரட்டிக்கொண்டே இருந்தனர். அன்றிருந்த சோவியத் ரஷ்யா மட்டுமே அரபுநாடுகளுக்கு துணையாக நின்றது.
ஒரு பேரலுக்கு கேவலம் முக்கால் டாலர் என்ற நிலை மாறி 30 டாலருக்கு அரபுநாடுகள் விற்கத் தொடங்கின.
எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் (OPEC) உருவாகி எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்தது.
வரலாற்றில் முதல்முறையாக அரபு மண்ணின் மக்கள் தமது சொந்த செல்வத்தின் மதிப்பை உணர்ந்து அனுபவித்தனர். செல்வம் குவிந்தது,
ஏகாதிபத்தியத்தின் கல்லாப்பெட்டி அரசியலில் பெரும் அடி விழுந்தது.
தொழில் வளர்ச்சியில் முன்னேறிச் சென்று கொண்டிருந்த ஏகாதிபத்தியங்களும் ஐரோப்பிய நாடுகளும் அரபுநாடுகள் சொன்ன விலைக்கு எண்ணெயை வாங்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாயின. அரபுநாடுகள் இதன் பின்னரே இன்று நாம் காணும் செழிப்புநிலையை அடைந்தன.
ஏகாதிபத்தியங்களின் பிறவிக்குணமான பிரித்தாளும் சூழ்ச்சியில் அமெரிக்கா இறங்கியது.
இரான்-இராக் மோதல், எகிப்து-சிரியா மோதல், சிரியா-லெபனான் போர், லெபனா னில் கிறித்துவர்-முஸ்லிமிடையே கலவரங்கள், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல், குவைத், இராக், இதர அரபுநாடுகளுக்கு இடையே தொடர்ந்து போரும் பதட்டமும் என்பதன் பின்னணியில் அமெரிக்காவின் சூழ்ச்சி அரசியலே நிலையாக இருக்கின்றது.
இத்தகைய சூழ்ச்சி அரசியலின் பின்னணியில் அரபுப் பிராந்தியத்தில் தனக்கு ஒரு வேட்டைநாயாகத்தான் இஸ்ரேல் என்ற நாட்டை அமெரிக்கா நிறுவியது. தியோடர் ஹெர்ஸ் என்பவரின் யூத இனவெறிக் கோட்பாடான ஜியோனிச சித்தாந்தத்தின் அடிப்படையில், இஸ்லாமியரது நாடான பாலஸ்தீனம் 1948ல் அமெரிக்க ஆதரவுடன் பிளக்கப்பட்டு இஸ்ரேல் என்ற புதிய தேசம் 'உருவானதாக' அறிவிக்கப்பட்டது!

நிலமெல்லாம் ரத்தம்- அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்
பாலஸ்தீன மக்களோ ஜோர்டான், சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். 1948 முதல் 1956, 1967, 1973, 1982 என தொடர்ந்து எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான், சினாய், கோலன் குன்றுகள், பாலஸ்தீனத்தின் காசா, மேற்குக்கரை என அரபுப்பிராந்தியத்தில் குண்டுவீச்சுக்களை இன்றளவும் நடத்திக்கொண்டு இஸ்ரேல் திரிவதை வரலாறு நிரூபிக்கிறது.
எகிப்தில் நெப்போலியன் தொடங்கி, அல்ஜீரியா, லிபியா, இரான், இராக், லிபியா, பாலஸ்தீனம் லெபனான் என அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஒரு நூற்றாண்டு ஆக்கிரமிப்பு தனியே எழுதப்பட வேண்டியது.
கடைசியாக பேரழிவு ஆயுதங்களிருப்பதாக பொய் சொல்லி இராக்கில் நுழைந்த அமெரிக்கப்படைகளின் துணையோடு பாக்தாத்தின் வரலாற்று ஆவணக்காப்பகம், தேசிய அருங் காட்சியகம், தேசிய நூலகம் ஆகியவை திட்டமிட்டு சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன.
தொன்மையான மெசபடோமியா, சுமேரியா, அக்காடியா, பாபிலோனியா, அசிரியா, சால்டியா, பெர்ஷியா (இரான்), கிரிஸ், ரோம், அரபு வம்சங்கள் ஆகிய நாகரீக, கலாச்சார சின்னங்களின் மிகப்பெரும் அரிய சேமிப்புக்களுடன், உலகின் முதல் சட்ட விதிகளின் தொகுப்பு என்று கருதப்படும் ஹமுராபி சட்ட வரைவுகளின் அசல் சுவடிகள், உலகின் ஆதிப்பழமையான எழுத்து வடிவங்களான குனிபார்ம் எழுத்துச்சுவடிகள், பாடல்கள், வாய்பாடுகள், சுடுகளி மண் சுவடிகள்.. என இந்த அருங்காட்சியகத்தில் இருந்த செல்வங்களின் மதிப்பு அளவிடற்கரியது.
இராக்கிலும் ஆப்கனிலும் நுழைவதற்கான திட்டம் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்ததுதான்.
"அரபுப் பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தைக் கபளீகரம் செய்வது, எடுக்கின்ற எண்ணெயை எந்த வழியாக தனது கட்டுப்பாட்டு எல்லைக்குள் கொண்டு வந்து ஸ்டாக் செய்வது, விற்பது" என்ற இரு அஜெண்டாக்களின் மீதுதான் இராக்+ ஆப்கன் (உள்ளே நுழைவதற்கான) போர் தொடங்கப் பட்டது.
வளைகுடா நாடுகளின் எண்ணெய், எரிவாயுவை ரஷ்யா வழியாகவோ இரான் வழியாக பாரசீக வளைகுடாவுக்கு தரை மார்க்கமாகவோ எடுத்துவர அமெரிக்கா விரும்பவில்லை.
ஆனால் மூன்று மாற்றுத் திட்டங்களை அது வைத்திருந்தது. அஜர்பைஜான், ஜார்ஜியா, துருக்கி வழியாக மேற்கே மத்திய தரைக்கடல் பகுதிக்குக் கொண்டுவருவது; அல்லது கஜக்ஸ்தான், சீனா வழியாக கிழக்கே பசிபிக் பகுதிக்கு கொண்டு வருவது;
ஆனால் துர்க்மேனிஸ்தான் தொடங்கி மேற்கு ஆப்கன், பாகிஸ்தான் வழியே இந்தியப் பெருங்கடல் வந்தடையும் மூன்றாவது வழியே உகந்தது என்று அமெரிக்கா முடிவு செய்தது.
எனில் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரதேசமாக ஆப்கனை மாற்றியமைக்க வேண்டும். அதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த போதுதான் அமெரிக்காவால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட பின்-லேடனும் அல்-காய்தாவும் உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தி ஒரு வழியைத் திறந்துவிட்டார்கள்.
இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய்க் காரணத்தைப் பரப்பி அமெரிக்கா இராக்கில் நுழைந்தது, சதாம் உசேனையும் கொன்றது, இராக்கில் எண்ணெய் எடுக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டது.
அல்-காய்தாவை ஒழிப்பதாகச் சொல்லி ஆப்கனில் நுழைந்தது. 9/11 தாக்குதலை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தும், தனது மக்கள் ஆயிரக்கணக்கில் சாவார்கள் என்று தெரிந்திருந்தும் தாக்குதலை அனுமதித்தது.
காரணம் எண்ணெய் அஜெண்டாதான். இதற்கான ஆதாரங்கள் இணையதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன.
அரபுப் பிராந்திய இஸ்லாமிய மக்களின் கோபத்தைத் தூண்ட முக்கிய காரணமாக இருப்பது, தங்கள் மண்ணில் உள்ள பெட்ரோலியத்தை அமெரிக்க, ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள், சுரண்டி எடுப்பது மட்டுமல்ல.
தங்களின் நீண்ட பாரம்பரிய மத, கலாச்சார வாழ்வையும் பாரம்பரிய அடையாளச் சின்னங்களையும் அழித்ததை, தங்கள் மதத்தின், கலாச்சாரத்தின் மீதான படையெடுப்பாக, இன அழிப்பாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.
அமெரிக்காவிலும் அதன் சகாக்களின் மண்ணிலும் இருக்கின்ற பெட்ரோலிய வளம் வெகுவிரைவில் வற்றிவிடும் என்று கண்டறியப்பட்டுள்ள முக்கியமான பின்னணியில் மட்டுமே அரபுப்பிராந்தியத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களின் ஆர்வம், ஆதிக்கம், கெடுபிடி அரசியல், 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' ஆகியவற்றை ஆய்வு செய்யவேண்டும்.

உலகின் மிகப்பெரும்பான்மை பெட்ரோலியவள நாடுகளை தனது காலடியின்கீழ் கொண்டு வருவதன் மூலம், உலக அரசியல்-பொருளாதாரத்தின் அச்சையே தன்னால் கட்டுப்படுத்த முடியும், தான் விரும்பிய திசைக்கு நகர்த்த முடியும் என்ற ஏகாதிபத்திய அரசியல் தான் அமெரிக்காவின் நவீனகால கெடுபிடி அரசியலின் மையப்புள்ளி.
இந்த மையப்புள்ளியில் இருந்து பிறழ்ந்து "அரபுப்பிராந்திய அரசியல்+அமெரிக்கா+உலகளாவிய பயங்கரவாதம்" என்ற அரசியலை ஆய்வு செய்வது, தன்னை ஏமாற்றிக்கொள்வது அல்லது பிறரை ஏமாற்றுவது ஆகிய இரண்டில் ஒன்றாகவே இருக்கும்.
இந்தியாவின் பயங்கரவாதம் உண்மையில் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.
அதன் உச்சகட்டம் தான் பிவினையின் போது வடக்கு, வடமேற்குப்பகுதிகளிலும் பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள். இந்தப் படுகொலைகளில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத் தரப்பாரும் ஈடுபட்டிருந்தார்கள்.
இந்த வகுப்புக் கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ்.இன் கைகள் இருந்ததை அதன் வரலாறு அம்பலப்படுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங்கள்தான் விடுதலை பெற்ற இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன என்ற உண்மையைப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.
முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப்பட்ட தீவிரவாதத் தாக்குலானது ஒரு தனிநபர் மீதான படுகொலையே, அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.
அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். எனவே விடுதலை பெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை1948 ஜனவரி 20லிருந்து பேசத் தொடங்குவது தான் சரியாக இருக்கும்.
ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அவர்கள் திட்டத்தில் ஏற்பட்ட கோளாறால் அன்றைய முயற்சி வெறும் வெடிகுண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்துநாள் உயிரோடு இருந்தார்.
ஜனவரி 30 அன்று கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான். அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித்தோல் நீக்கமும் (இஸ்லாமிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் (கோட்சே காந்திஜியை சுடும்பொழுது கையில் "இஸ்மாயில்" என ஒரு முஸ்லீம் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டு ஒரு மூஸ்லீம் போல் "சுன்னத" தும் செய்திருந்தான்.) எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகிறது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாக இருந்தன.
அவர்களது நோக்கம்: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம்,
இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது.
மருத்துவமனையின் உள்ளேயிருந்து ஒருவன் ஓடி வந்து, "காந்தியை முஸ்லிம் ஒருவன் சுட்டுவிட்டான்" என்று கூச்சல் போட்டதும், அவனை ஜவஹர்லால் நேரு பற்றி இழுத்து கன்னத்தில் அறைந்து "முட்டாள், காந்தியை சுட்டது ஒரு இந்து" என்று சொன்னதும், தொடர்ந்து வானொலியில் அதை அறிவித்து மிகப்பெரும் மதக்கலவரத்தை தவிர்த்ததும் வரலாற்று உண்மை.
பயங்கரவாதத்தை, அதுவும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஊளையிடும் ஊடகங்களும் ஆட்சியாளர்களும்கூட 1948 ஜனவரி 20, 30 பற்றியோ கோட்சேவின் முஸ்லிம் வேஷம் பற்றியோ பேசாமல் மிக ஜாக்கிரதையாக தவிர்த்தே வந்திருக்கின்றார்கள்.
இனிமேலும் பேசமாட்டார்கள். நமது பாடப்புத்தகங்களில் கூட "காந்தியாரை ஒருவன் சுட்டான்" என்ற ஒற்றைவரியோடு காந்தியின் வரலாறு அல்லது கதை முடிந்து போவது தற்செயலான ஒன்றல்ல.
விடுதலை பெற்ற இந்தியாவின் மிகப்பெரும் திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாதமாக 1992 டிசம் பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பும் அதனைத் தொடர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கொலை வெறித் தாண்டவமும், எதிர்வினையாக நாடெங்கும் நடந்த குண்டுவெடிப்புக்களும்.
இந்திய ஜனநாயகத்தின் தூண்கள், உத்திரங்கள், ஜன்னல்கம்பிகள் என்று வர்ணிக்கப்படும் இந்திய ஊடகங்கள், 1992-க்குப் பிறகு, (தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ போன்ற அரசு ஊடகங்கள் உட்பட) அயோத்தி பற்றிக் குறிப்பிடும்போது 'சர்ச்சைக்குரிய' என்ற சொல்லை சிறிதுகாலம் பயன்படுத்தி வந்தன.
ஆனால் இப்போதெல்லாம் ராமர்கோவில் என்றே ஊடகங்களில் சொல்லாடப்படுவது, கோட்சேவை 'மறந்தது' போன்ற மறதியா, திட்டமிட்ட ஒன்றா?
இது ஊடக பயங்கரவாதமா ஊடக ஜனநாயகமா?
தெரிந்தவர்கள் சொல்லலாம்.
அயோத்தியைப் போல், குஜராத்தில் அந்த வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது பா.ஜ.க. முதல்வர் நரேந்திரமோடி, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், கூடவே மாநில போலீஸ். ஆயிரக்கணக்கில் குப்பையாக அப்புறப்படுத்தப்பட்டனர் முஸ்லீம் மக்கள்.
Massacre of more than 2000 Muslims by Hindu terrorists (Gujaraat 2002) 1/3
Massacre of more than 2000 Muslims by Hindu terrorists (Gujaraat 2002) 2/3
Massacre of more than 2000 Muslims by Hindu terrorists (Gujaraat 2002) 3/3
INDIA EXPOSED [Gujarat Massacre]: Hindu Terrorism Supported by Hindutva Fascists & Govt. 1/2
இதை நேரில் பார்த்த ஜாஹிரா ஷேக் என்ற இளம் பெண்ணும் அவளுக்காக வாதாட வந்த டீஸ்டா செதல்வாத் என்ற சமூகப் போராளியும் நாயை விடவும் கேவலமாக அரசு நிர்வாகத்தால் அலைக்கழிக்கப்பட்டனர்.
ஒருகட்டத்தில் டீஸ்டாவுக்கு எதிராகவே ஜாஹிரா வாக்குமூலம் கொடுக்கும் அளவுக்கு நரேந்திர மோடி அரசு கொடுமைப்படுத்தியது. இங்கேதான் வாய்கிழியும் அளவுக்கு ஜனநாயகம் பேசப்படுகின்றது.
வரலாற்றுச் சம்பவங்களை முன்பின்னாக அடுக்கி 'எடிட்' செய்வதன் மூலம் வரலாற்றைச் சிதைக்கும்-வரலாற்றைத் திரித்து எழுதும் இந்துத் துவா அஜெண்டா
அப்பாவி முஸ்லிம்களின் பிரதிநிதியாகப் பேசவைக்கும் போது,"ஒரு தீவிரவாதி நியாயம் பேசலாமா?" என்ற கேள்வி வைக்கும் உத்தி.
அன்றாடங் காய்ச்சிகளாக, அகதி முகாம்களில் இன்றும் விளிம்புநிலை வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் நியாயங்கள் பேசும்போது அடிபட்டுப் போகின்றன, முற்றாக ஒதுக்கித்தள்ளப்படுகின்றன.
"நீ ஒன்றும் பேசாதே, என்ன இருந்தாலும் நீ தீவிரவாதி" என்ற முத்திரை நெடுகிலும் குத்தப்படுகின்றது.
மாலேகான், ஹைதராபாத் மெக்கா மசூதி போன்ற இடங்களில் குண்டு வெடிக்கச்செய்தவர்கள் ராணுவ கர்னலான புரோஹித் என்பவனும், ஒரு பெண் சாமியாரும், இவர்கள் இணைந்து நடத்தும் ஒரு இந்துத்துவா தீவிரவாத ஆயுதப் பயிற்சிப்பள்ளியும். மும்பை போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்காரே பாரபட்சமின்றி இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டதால், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலால் "துரோகி" என்று தூற்றப்பட்டு படாதபாடு படுத்தினர்.
2008 நவம்பர் 26 மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது அங்கே நடவடிக்கைக்காக சென்ற கார்காரே, தீவிரவாதிகளின் துப்பாக்கிக்கு பலியானார்
('துரோகி' என்று திட்டிய பா.ஜ.க. கும்பல் உடனடியாக 'கார்கரே ஒரு தியாகி' என்று பாடியது. அவரது மனைவிக்கு கோடி ரூபாய்களை சன்மானமாகத் தர மோடி முன்வந்தபோது கார்கரேயின் மனைவி துச்சமாக நிராகரித்தார்).

கார்காரேயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெரும் சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன.
"லவுகீக வாழ்வில் வேலைக்குப்போவது, கடைக்குப்போவது, சாப்பிடுவது, மலஜலம் கழிப்பது, துணி துவைப்பது" போன்ற அன்றாடக் கடமைகளைப் போலவே அல்லது அக்கடமைகளில் ஒன்றாகவே சமூகத்தை 'தூய்மை'ப்படுத்துவதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று போதிக்கின்றன.
கொலம்பஸ், ஹிட்லர், கோட்சே, அத்வானி, மோடி, ஜார்ஜ் புஷ்...என வரலாறு நெடுகிலும் 'தூய்மை' ப்படுத்தப் புறப்பட்டவர்கள் இப்படித்தான் பதட்டமின்றி இருந்தார்கள், இருக்கின்றார்கள்.
ஆயிரக்கணக்கான அரவாக் இன பழங்குடிகளைத் தீயில் இட்டு எரித்த கொலம்பசும், யூதர்களை லட்சக்கணக்கில் சாக டித்த ஹிட்லரும், அரபுப்பிராந்தியத்திலும் இராக்கிலும் ஆப்கனிலும் ஒரு நூற்றாண்டாக அமெரிக்காவும் அதன் சகாக்களும் இப்படித்தான் பதட்டம் ஏதுமின்றி மனிதப்படு கொலையை செய்துகொண்டே இருக்கிறார்கள்.
காந்தி யாரை சுட்டு வீழ்த்தியபோதும் கோட்சேயும் அவனது சகாக்களான வீரசவர்க்கார் கும்பலும் பதட்டமின்றி அமைதியாகத் தான் இருந்தார்கள்.
அயோத்தி, ஒரிசா, குஜராத், பிஹார், மும்பை, மாலேகான், ஹைதராபாத், ராஜஸ்தான், தென் காசி, குல்பர்க் சொசைட்டி ஆகிய இடங்களில் முஸ்லிம், கிறித்துவ மக்களை உயிரோடு கொளுத்தியும் குரல்வளைகளை அறுத்த போதும்,
முஸ்லிம்-கிறித்துவப் பெண்களை வல்லுறவு செய்தபோதும் நிர்வாணமாக ஊர்வலம் வரச் செய்தபோதும் அவர்கள் பதட்டமின்றித்தான் இருந்தார்கள், நிதானமாக 'தூய்மை'ப்படுத்தினார்கள்.
ஸ்டெயின்ஸ் பாதிரி யாரையும் அவரது இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்துக் கொளுத்தி 'தூய்மை'ப்படுத்தியபோதும், சொராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜெஹான் போன்ற இசுலாமியக்குப்பைகளை போலி என்கவுன்டர்களில் சுட்டு வீழ்த்தியபோதும் பதட்டமின்றிதான் இருந்தார்கள்.
'வாட்டர்' படப்பிடிப்பின் போது மீராநாயரையும் அவரது குழுவினரையும் கங்கைக் கரையில் ஓடஓட விரட்டியபோதும் பதட்டம் இன்றிதான் இருந்தார்கள்.
மீராநாயரை விரட்டிவிட்டு, கங்கையிலும் காசியிலும் மொட்டை அடித்து தெருவில் அநாதைகளாகவும் விபச்சாரிகளாகவும் விரட்டப்பட்ட இந்து மதப்பெண்களின் 'புனித'த்தைக் காப்பாற்றினார்கள்.
குஜராத்தில் சாயாஜி பல்கலைக்கழக மாணவர் சந்திரசேகரையும், பேராசியர் பணிக்கரையும் விரட்டி அடித்து சிறையில் தள்ளியபோதும்,
கர்நாடகாவில் இளம்பெண்களை அடித்து நொறுக்கி அவமதித்து 'பாரதப் பண்பாட்டை'க் கட்டிக்காத்த போதும் பதட்டம் இன்றித்தான் இருந்தார்கள்.
ஆமிர்கானின் 'பானா' திரைப்படத்தை குஜராத்தில் திரையிட்ட அரங்குகளை எல்லாம் அடித்து நொறுக்கி குஜராத்தில் தடை செய்த போதும் பதட்டமின்றி அமைதியாகத்தான் இருந்தார்கள்.
காஷ்மீரில் முஸ்லீம் பெண்களை வல்லுறவுக்காளாக்கிய போதும், முஸ்லீம் சிறுவர்களை போலி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்து பதவி உயர்வு பெற்றபோதும் இந்திய ராணுவத்தினர் பதட்டமின்றி நிதானமாகத்தான் இருக்கின்றார்கள்.
பொடா, தடா, அடாபுடா போன்ற சட்டங்களின் கீழ் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை விசாரணை ஏதும் இன்றி வருடக்கணக்காய் சிறையில் அடைத்து மனநோயாளிகளாக்கிய போதும் கூட மாண்புமிகு நீதிமன்றங்கள் பதட்டம் ஏதுமின்றி அமைதியாகத்தான் இருக்கின்றன.
அரசு எந்திரமோ ஒரு நட்டு, போல்ட்டு, ஸ்க்ரூ கூட கழன்றுவிடாமல் எப்போதும்போல் கழுவப்படாத சிமெண்டு கலவை மெசின் போல சுழன்றுகொண்டேதான் இருக்கின்றது.
கர்ப்பிணிப்பெண்ணின் பிறப்புறுப்பு வழியே கையை நுழைத்து கருப்பைக்குள் இருந்த கருவைக் கலைத்து கருவறுத்தார்கள் 'கருவறுத்தார்கள்' உண்மைதான்!
முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்களைத் தேடி, வயிற்றை சூலாயுதங்களால் கிழித்து, உள்ளே இருந்த சிசுக்களை தீயில் போட்டு வாட்டிய கொடுமையும் நடந்ததே!
எங்கே? குஜராத்தில்.
செய்தவர்கள் யார்? நரேந்திரமோடியும் போலிசும் சங்பரிவார் கும்பலும் தானே!
அல்-காய்தா, இராக், அமெரிக்கா, கத்திரிக்கா, புடலங்கா என்று பேசும் ஊடகங்களில் குஜராத்தில் இந்தக் கொடுமைக்காரர்களைப் பற்றி ஓர் இடத்திலும் குறிப்பாகவோ அடையாளத்தாலோ கூட உணர்த்தாதது ஏன்?
.ஆம், பதட்டம் ஏதும் இன்றி இந்துத்துவா தீவிரவாதிகள், முஸ்லிம், கிறித்துவர்களை நல்லபடியாகத்தான் 'தூய்மை'ப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
'இந்திய சமூகத்துக்கு தேவையில்லாத இஸ்லாமியர்களை, இடையூறு விளைவிப்பவை. இவர்களை அப்புறப்படுத்தி சமூகத்தைத் 'தூய்மை'ப்படுத்தும் கடமையை கோட்சேயைப் போல், மோடியைப் போல் நிதானமாக, பதட்டமின்றி செய்யவேண்டும்' என்ற இந்துத்துவா அரசியலை வெட்கம் ஏதுமின்றி 'பாஞ்ச ஜன்ய' சங்கு எடுத்து ஊதுகின்றனர்.
தனது வர்த்தக லாபங்களுக்காக உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும்,
வர்த்தக லாபங்களுக்காக இந்திய இஸ்லாமிய மக்களை திட்டமிட்டே 'தீவிரவாதி'களாக ஆக்கும் பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,
இந்த அஜெண்டாவை செயல் படுத்தும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும்,
இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.
பொதுவாக சமூகத்தில் சுத்தமானவர்கள், முற்போக்கானவர்கள் என்று 'அறியப்பட்ட' வர்களின் அசைவுகள், வார்த்தைகளை பொதுவெளியில் உள்ள சமூகம் எப்போதும் அவதானித்துக் கொண்டே இருக்கிறது.
அவர்கள் கூறும் வார்த்தைகளின் உள்ளே புகுந்து உண்மையைத் தேடுவதை விட்டுவிட்டு வார்த்தைகளையே உண்மை என நம்பிவிடுகின்றது.
"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்" என்ற ச.தமிழ்ச்செல்வனின் கவலையை இங்கே பதிவு செய்வது பொருத்தம்.
ஆக்கம்: இக்பால்
Download As PDF

இந்தியர்களின் வீடுகளில் 1,80,00,000 கிலோ தங்கம்!!!

லண்டன்: உலகளவில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்தியர்களிடம் தான் உள்ளதாகவும், இந்தியர்களின் வீடுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு 50 லட்சம் கோடியைத் தாண்டும் ($950 billion) என்று தெரியவந்துள்ளது.
Macquarie Research என்ற சர்வதேச நுகர்வோர் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்திய வீடுகளில் மட்டும் 18,000 டன் தங்கம் உள்ளது (ஒரு டன் என்பது 1,000 கிலோ. இதன்படி பார்த்தால் இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் எடை 1.80 லட்சம் கோடி).
இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) மதிப்பில் 50 சதவீதம் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் தங்களது சேமிப்பில் பெரும்பாலானதை தங்கத்தில் தான் முதலீடு செய்து வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையில், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி முதல் 2011 செப்டம்பருக்குள் 64 சதவீதம் அதிகரித்துவிட்டது. ஆனாலும், உலகிலேயே மிக அதிகமாக தங்கம் வாங்கும் மக்களும் இந்தியர்கள் தான்.
கச்சா எண்ணெய் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு (capital goods) அடுத்தபடியாக இந்தியா இறக்குமதி செய்யும் 3வது மிகப் பெரிய விஷயமும் தங்கம் தான். கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் தேவையில் 92 சதவீதம் இறக்குமதி மூலம் தான் பூர்த்தி செய்யப்பட்டது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்வதில் சீன மக்கள், இந்தியர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
பொருளாதார வளர்ச்சியைத் தடையாக மாறி வரும் இந்தியர்களின் தங்க மோகம்
மின்னும் பொன்னைப் பார்ப்பதற்கு பளிச்சென சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இது கடுமையாக பாதிக்கும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்- இதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய வகையில் இந்தியர்களின் தங்க மோகம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. 2011 ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி அளவு 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாம். பணவீக்கம் படு மோசமாக உள்ள நிலையிலும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் தங்கத்தின் மீது பெருமளவில் செலவித்து வருகின்றனராம்.
இந்தியாவின் இறக்குமதி பொருட்களில், கச்சா எண்ணெய்க்கு அடுத்த இடத்தில், அதாவது 2வது இடத்தில் தங்கம் உள்ளது. இது 2007-08 காலகட்டத்தில் 5வது இடத்தில் இருந்தது.
ஆனால் இப்படி தங்கம் மீதான இந்தியர்களின் மோகத்தால், வளர்ச்சி விகிதம் கடும் பாதிப்பை சந்திக்கிறதாம். தங்கத்தில் பணத்தைப் பெருமளவில் முடக்கி வைப்பதால், பணப் புழக்கம் பெரும் முடக்கத்தை சந்திப்பதாக கூறுகிறது தங்க கவுன்சில். வங்கி லாக்கர்களில் சிவனே என்று தூங்கிக் கொண்டிருக்கும் தங்க நகைகள், பிஸ்கட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அது கூறுகிறது.
இதுகுறித்து எச்டிஎப்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் அபீக் பரூவா கூறுகையில், தங்கத்தின் மீது செலவழிக்கப்படும் பணம் கிட்டத்தட்ட வீண் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் மீதான பணப் புழக்கம், பிற செயல்களுக்குப் பயன்படாமல் முடங்கிப் போய் விடுவதால் தங்கத்திற்காக செலவழிப்பது என்பது கிட்டத்தட்ட வீன் செலவாகவே உள்ளது என்றார்.
உருப்படியான செலவுகளுக்குப் பணத்தை இறைப்பதற்குப் பதில் பெரும்பாலானவர்கள் தங்கத்திற்காக நிறைய செலவழிப்பதால் பிற நிதித் தேவைகளுக்கு போதிய பணம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
பிற நிதி சேமிப்புகள் தற்போது மக்களிடையே குறைந்து விட்டன. தங்கத்தின் மீது சேமிக்கவே அதிக விருப்பம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுக்குப் பெரிய அளவில் பலன் இல்லை என்பது மக்களுக்குத் தெரியவில்லை என்கிறார் கோடக் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் இந்திரணில் பான். அவர் கூறுகையில், முன்பெல்லாம் நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, பிக்சட் டெபாசிட் போடுவது, வங்கியில் பணத்தை சேர்த்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேமிப்புகளில் மக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இப்போது தங்கத்திற்கு மாறியுள்ளனர். ஆனால் இது ஜிடிபியின் வளர்ச்சியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றார்.
தேவையில்லாமல் நமது சேமிப்பு முடங்கி்ப போவதுதான் தங்கத்தின் மீது பணத்தைக் கொட்டுவதால் கிடைக்கும் லாபம் என்பது நிதி ஆலோசகர்களின் கணிப்பு.
மக்களுக்கு திடீரென தங்கத்தின் மீது மோகம் பிறந்ததற்குக் காரணம் உலகளாவிய அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியும், அதிகரித்து வரும் தங்கம் விலையுமே காரணம் என்கிறார்கள். இப்போதே வாங்கி வைத்து விட்டால் நாளை தங்கம் விலை மேலும் கூடும்போது மதிப்பு அதிகரிக்கும் என ம்க்கள் கருதுகிறார்கள். இதனால்தான் தங்கம் பக்கம் மக்கள் கவனம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
பெரும்பாலான தங்கத்தை நாம் வெளியிலிருந்துதான் இறக்குமதி செய்து வாங்கி விற்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் மீது பணத்தை முடக்குவதை வீடு போன்றவற்றை நாம் அதிகம் வாங்கினால் பணச் சுற்றாவது நிற்காமல் தொடரும் வாய்ப்புகள் உள்ளன என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.
அதிகரித்து வரும் தங்க முதலீடுகளால் இப்போது பெரியளவில் பாதிப்பு வரவில்லை என்றாலும் கூட, பிற முதலீடுகளில் மக்கள் நாட்டம் குறைந்து பெருமளவில் தங்க முதலீடுகள் அதிகரிக்கும்போது நிச்சயம் அது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
source: thatstamil.com
Download As PDF

கலப்பட தங்கம் !

தங்க நகை மேலுள்ள மோகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. விலையேற்றத்தைப் போலவே. ஒரு சவரன் நகை சேதாரம் சேர்த்த விலை 23,500. ஏற்றம் பற்றி மணமகன் சமூகத்திற்கு கவலையில்லை. மணப்பெண்களுக்கும் ஆசை குறையப்போவதில்லை. மாட்டிக் கொண்டு விழிப்பவர்கள் பெண்ணின் தாய், தந்தையர்.
தங்க நகை பக்கம் பார்வை திருப்பாமல் குஜராத் போரா முஸ்லிம்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர். அவர்களது ஆபரணம் வெள்ளி நகை மட்டுமே. அச்சமூகத்தில் வரதட்சணை, முதிர் கன்னிகள் பிரச்சினையில்லை.
தமிழக முஸ்லிம் சமூகமும் வெள்ளி நகைக்கு மாறவேண்டும். வெள்ளியில் நகை செய்து தேவைப்பட்டால் தங்க முலாம் பூசிக் கொள்ளலாம். ஒரு சவரனுக்கு 2,000த்துக்கும் மேல் லாபம் ஈட்டப்படுவதாகக் கூறப்படும் தங்க ஆபரணங்களில் பல நுணுக்கங்கள் உள்ளன. அவை அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடியவையல்ல.
ஹால்மார்க் முத்திரை என்பது அரசு தருவது. தரம் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா? சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது. 916 ரிஞிவி ஹால்மார்க் என்பதன் பொருள் ‘‘அரசு அனுமதித்த அளவுக்குத் தக்கவாறு செம்புகலக்கப்பட்ட நகை’’ இவ்வாறான ஆபரணங்கள். 99% டச் உள்ள ஒரிஜினல். 91.60 என்பதுதான் 916 எனக் கூறப்படுகிறது.
100 சதத்தில் 8.40 பாயிண்ட் செம்பு, வெள்ளி கலந்து தயாரிக்கப்படுகிறது. ஹால்மார்க் இல்லாத ரிஞிவி 95% வரை டச் உள்ளவை என வியாபாரிகள் கூறுகின்றனர். ஹால்மார்க் ரிஞிவி இரண்டுமில்லாத நகைகள் 85% டச் உள்ளவை. விற்கும்போது விலை குறைவாகக் கிடைக்கும். நகைகள் சில கடைகளில் வாங்கி அணியும்போது கறுத்துவிடும். செம்பு நிறத்திற்கு மாறும், சூட்டுடம்பு கலர் மாற்றிவிட்டது.
உப்பு காற்றுப்பட்டதால், உப்பு தண்ணீரில் குளித்ததால் நிறம் கருத்திருக்கிறது இவ்வாறு சமாதானம் கூறப்படும். இவையனைத்தையும் மறுக்கிறார் இவ்வியாபாரத்திலுள்ள அனுபவஸ்தர் குஜராத் பிரவீன்பட். காப்பர் கலப்பு அதிகமே நிறம் மாற்றத்திற்கான காரணாமென்கிறார்.
நகைகளில் எத்தனை சதம் செம்பு கலக்கப்பட்டுள்ளது? ரகம் பிரித்து அறிய வியாபாரிகளுக்கென்று டச்சிங் பார்த்துக் கொடுக்கும் அரசு அனுமதி பெற்ற சில கடைகள் சௌகார் பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ளன. அங்கு சென்று அறிந்து கொள்ளலாம். ஆபரண நகைகளில் வளையலில் செம்பு கலப்பு அதிகமிருக்கும். பெங்களூர், ராஜ்கோட் தங்க நகைகளுக்கு சந்தையில் மறுமதிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

-கரீம்கனி,  செப்டம்பர் 2011 முஸ்லிம் முரசு.
Download As PDF