-->

Thursday, August 30, 2012

தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு!

தொப்பை வயிறு சப்பை மூளை குப்பை உணவு
சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஏழு வயதுப் பெண் திடீரென சுகவீனமடைந்தாள். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சுருண்டு விழுந்தவள் ”வயிறு வலிக்கிறது” என்று அழுதிருக்கிறாள். பதறிப் போன பெற்றோர்கள் உடனடியாக மகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். பலவிதமான சோதனைகளையும், ஸ்கேன்களையும் செய்து பார்த்த மருத்துவர், ’உடலில் எந்தக் கோளாறும் தெரியவில்லையே!’ என்று குழம்பியிருக்கிறார். இதற்கிடையே நான்கைந்து நாட்கள் ஓடி விட்டது. இந்த நாட்களில் தொடர்ச்சியாக வலி நிவாரணி ஊசி போட்டே
Download As PDF

THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!


The Red Market
Red Marketநல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market”  புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி.  அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market”  ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
Download As PDF

ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்!

சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், ஐ.ஐ.டி மாணவரின் விந்தணு தானம் தேவை என ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர்
         
iit-sperm-wanted
சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், தகுதியுள்ள விந்தணு தானம் செய்பவரைத் தேடி வருவதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தகுதியான என்றால்………?
ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான  ஐ.ஐ.டி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் போன்ற நிபந்தனைகளைகளை விதித்துள்ளனர். விரைவிலேயே இச்செயற்கைக் கருவுறுதலை செய்யவிருப்பதால், அன்பும் செழிப்பும் பொங்கித் ததும்பவிருக்கும் தங்களது வாழ்க்கையைத் தொடங்க அவசரமாக விந்தணு தானம் தேவை என்றும் கூறியுள்ளனர். (மதிப்பெண்கள் (CGPA) மற்றும் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தையும் நிபந்தனையாக வைக்க மறந்து விட்டனரோ). இதற்காக தானம் செய்யும் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஐ.ஐ.டி பொலிகாளைக்கு  20,000 ரூபாய் தரவிருப்பதாகவும் விலை நிர்ணயித்துள்ளனர்.
Download As PDF

நோய்கள் விற்பனைக்கு! மருந்து கம்பெனிகளின் மோசடி!! ஆவணப்படம்

அமெரிக்காவின் மருத்துவத் துறை, லாபம் தேடும் முதலாளித்துவ நிறுவனங்களால் திரிக்கப்பட்டு, முறுக்கப்பட்டு, உருத்தெரியாத ஜந்துவாக மாற்றப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது Big Buck Big Pharma ஆவணப்டம்
         
நோய்
‘அமெரிக்கா உலகின் வல்லரசு. அங்கு பாலாறும் தேனாறும் ஓடுகிறது, அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் டாலரில் சம்பாதிக்கிறார்கள், உலகின் எல்லா நாட்டவரும் அமெரிக்க குடிமக்கள் ஆக போட்டி போடுகிறார்கள், எல்லா நாடுகளும் அமெரிக்கா போல வல்லரசாக முயற்சிக்கின்றன’ என்பதுதான் நடுத்தர வர்க்கத்தின் கருத்தாக்கம்.
இந்தியா 2020-ல் வல்லரசாகி விடும் என்ற அப்துல் கலாமிய கனவு அமெரிக்கா போல இந்தியாவும் ‘முன்னேறுவது’ என்பதைத்தான் குறிக்கிறது. வல்லரசு என்றால் எப்படி இருக்க வேண்டும்? இராணுவ வல்லமை, விண்வெளி சாகசம், போர் என்றுதான் இத்தகைய ‘தேசபக்தர்கள்’ பட்டியலிடுவார்கள். கூடவே கொசுறு பின்னிணைப்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, உடல் நலம் பேண அனைவருக்கும் கட்டுப்படியாகும் கட்டணத்தில் மருத்துவ வசதிகள், தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை வாய்ப்புகள் முதலியவற்றையும் கூறுவார்கள்.
Download As PDF

செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !

      காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன.
        புதிய மாடல் செல்போன்களின் விலை நாளுக்கு நாள் மலிவாகிக் கொண்டே போகிறது. உணவுப் பொருட்களின் விலையோ தொடர்ந்து ஏறுமுகமாய் இருந்து வருகிறது. சென்ற ஆண்டின் இறுதி மாதத்தில் குறிப்பிட்ட சில காய்கறிகளின் விலை அதன் முந்தைய மாதத்தை விட 82% அதிகரித்துள்ளது. சந்தைக்குக் காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் தம் குடும்பத்தாரோடு பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன.
Download As PDF

அரசு மருத்துவமனை:எலிகளைக் காட்டித் தப்பிக்கும் திமிங்கலங்கள்!

மீபத்தில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நண்பருக்காக போயிருந்தோம். காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்துவைத்துக் கொண்டிருந்தபோது மருத்துவமனை ஊழியரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவரது ஜன்னலுக்கு வெளியே கொட்டிக் கிடந்த மருத்துவக் கழிவுகளை சுட்டிக்காட்டிய போது, ஏன் சார் கேக்குறீங்க, மூணு பேரு வேல செய்யுற எடத்துல ஒருத்தருதான் இருக்கோம். புதுசா ஆள் எடுக்க மாட்டேங்குறாங்க. என்று எதார்த்தத்தை போட்டு உடைத்தார். அவரிடமிருந்து மாத்திரை வாங்கும் செக்சனுக்கு போனபோது அங்கே விபத்தில் சிக்கியிருந்த தனது மகனை காட்ட வந்திருந்த ஆந்திர மாநில அரசு ஊழியர், தனது அடையாள அட்டையை மருத்துவமனை ஊழியர்களிடம் யார் வந்தாலும் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தார்.
Download As PDF

கருணையும் – வெறியும்! – தினமணி, தினமலரின் இருமுகங்கள்!!

தினமலர்“166 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு” இது தினமலரின் இன்றைய சுவரோட்டி வாசகம். இதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியில் “மும்பையை உலுக்கிய கசாப்புக்கு தூக்குத் தண்டனை உறுதி” என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பதோடு, தண்டனையை வரவேற்று பா.ஜ.க மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்கள் கூறியிருப்பதை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதாவது தேசத்தின் ஒட்டு மொத்த கருத்தாம் இது.
நடுப்பக்கத்தில் கசாப்பை தூக்குக்கயிறோடு படமாக போட்டிருக்கும் தினமலர் இந்த வழக்கு வந்த பாதையை காலக் குறிப்போடு விளக்கமாக போட்டிருக்கிறது. கசாப் தூக்கு என்பது மேலோட்டமாக செய்தியாக மட்டுமல்லாமல் ஒரு ஆவணம் போன்று வாசகர் மனதில் பதிய வேண்டும் என்பது தினமலரின் அவா.
Download As PDF

ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?

சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள்.
   
ஏழைகள் படிக்கக்கூடாது! அப்போ கொன்றுவிடலாமா?
ழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி கருதுவதாக வந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக  ஒரு மாணவரின் செயல்திறனையும் அவரது பொருளாதார நிலைமையையும் இணைத்து ஒரு அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளார் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சுபலா அனந்தநாராயணன். அதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், அனைவருக்குமான கல்வி உரிமை மசோதாவை எதிர்த்து போராடும் படியும் தூண்டியிருக்கிறார்.
Download As PDF

இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்!

சமச்சீர் கல்வி இரத்து செய்யப்பட்டிருக்கும் இந்நேரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக பெற்றோர்களை அணிதிரட்டி விருத்தாசலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போராடுகிறது. இந்த போராட்டம் தற்போது கடலூர் மாவட்டம், கோவை என்று பரவி வருகிறது. இதை ஒட்டி விருத்தாசலத்தில் பெற்றோர்களை அணிதிரட்டி நடத்தப்பட்ட மாநாட்டில், அரசியல் சட்டப்படி கல்வி என்பது எப்படி நமது உரிமையாக உள்ளது, சமச்சீர் கல்வியின் அவசியம், தாய்மொழிக் கல்வியின் தேவை, தனியார் பள்ளிகள் நூதனக் கொள்ளை, பகிரங்க கொள்ளை, அரசின் பாராமுகம் என அனைத்து அம்சங்களும் விளக்கப் பட்டிருக்கிறது. சாரமாக தனியார் கல்வியின் அபாயத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.  இந்த முக்கியமான கட்டுரையை படியுங்கள், பரப்புங்கள்! நன்றி
இலவசக் கல்வி நமது உரிமை
விருத்தாசலம் நகரில் இலவச கல்வி உரிமை மாநாடு கடந்த மே மாதம் செவ்வாய் (24-05-2011) அன்று நடைபெற்றது.  மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் திரு .செந்தாமரைக்கந்தன் வரவேற்புரை வழங்கி கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
Download As PDF

குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!

        தன் குழந்தை படிக்க இயலாமல் தற்குறியாய் அலைய வேண்டியிருக்குமோ என்று எண்ணி அதை கற்பனை செய்யக்கூட சகிக்காமல் தற்கொலை செய்து கொண்டார் சங்கீதா.
கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர்  சங்கீதா. பட்டதாரியான‌ சங்கீதா தன்னை விட படிப்பில் குறைந்த, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தர்மராஜை சாதி கட்டுப்பாடுகளை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். பணி புரியும் இடத்தில் இயல்பாக ஏற்பட்ட இக்காதலை திருமணம் வரை கொண்டு செல்வதற்கு அவர் கடுமையாகப் போராடினார்.
சமூகத்தில் அரதப் பழசாகிப் போன சாதி நம்பிக்கையைத் தூக்கி எறிந்தவருக்கு, தனியார்மயம் தாராளமயம் உருவாக்கிய புதிய சமூகச் சீர்குலைவுகளைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு எளிதாகக் கைவரவில்லை.
Download As PDF

கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!

குழந்தைகளின் உச்சந்தலைமுடியைக் கொத்தாக வெட்டி அவமானப்படுத்தப்பட்டது வக்கிரம் நிறைந்த வன்முறை மட்டுமல்ல; ஆதிக்க சாதித் திமிரும், பணக் கொழுப்பும் இணைந்த நவீன தீண்டாமையாகும்.
ர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள நந்தினி லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகம், தனது பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் வகுப்பில் சேர்ந்திருந்த நான்கு குழந்தைகளின் உச்சந்தலைமுடியைக் கொத்தாக வெட்டி அவமானப்படுத்தியிருக்கிறது. இது வக்கிரம் நிறைந்த வன்முறை மட்டுமல்ல; ஆதிக்க சாதித் திமிரும், பணக் கொழுப்பும் இணைந்த நவீன தீண்டாமையாகும்.  இது ஏதோ தனிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்துவிட்ட அசம்பாவிதம் அல்ல; தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளி வர்க்கம், குழந்தைகளின் பாகுபாடற்ற சமத்துவக் கல்வி பெறும் உரிமைக்கு எதிராக விட்டுள்ள பகிரங்கச் சவாலாகும்.
Download As PDF

பெண்களின் மானத்தை விலை பேசும் Camera & face book திருகுதாளங்களும் தற்காப்பும்!


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் எம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதேவேளை மறுபுறம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய உலகின் யதார்த்தம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.
Download As PDF

சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது? பேருந்தின் ஓட்டையா? தனியார்மய இலாபவெறியா? பள்ளி-மாணவி-சுருதி-கொலை

பள்ளி-மாணவி-சுருதி-கொலைஓட்டையில் தொடங்கி பேருந்திலேயே முடிக்கும் வகையில்தான் இது அணுகப்படுகிறது. பேருந்து, ஆர்.டி.ஓ. ஆபீசு, பிரேக் இன்ஸ்பெக்டர் என்று இந்தியனை ரீமிக்ஸ் செய்வதை விடுத்து உண்மையான பிரச்சினை என்ன என்பதைப் பார்ப்பது நல்லது.
சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் சிறுமி சுருதி, 25ஆம் தேதி புதன்கிழமையன்று, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பும்போது, பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பெரிய ஓட்டைக்குள் கால் தவறி விழுந்து, பின் சக்கரம் தலையில் ஏறி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் செய்தி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்தப் பள்ளிப் பேருந்துக்கு ஜூலை 9ஆம் தேதியன்றுதான் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எஃப்.சி. வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நாளேடுகளில் வெளியாகவே, இப்பிரச்சினையைத் தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Download As PDF

கசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது?

நீதிமன்றம்
சாப்பின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கசாப் இந்தியாவிற்கு எதிராக போரில் ஈடுபட்டதாக கூறி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்தாலும் உடனடியாக முடிவெடுக்கப்படும் என்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. பிரியாணி போட்டது போதும் கசாப்பை மட்டுமல்ல அப்சல்குருவையும் தூக்கிலிடுங்கள் என்கிறது பாஜக.
குஜராத் – நரோடா பாட்டியா படுகொலையை நடத்திய பஜ்ரங்தள்-ளின் பாபு பஜ்ரங்கி மற்றும் மோடியின் அமைச்சரவையில் முன்னர் அமைச்சராக இருந்த பாஜக வின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்
Download As PDF

படிப்பால் பண்பாடு பலம்பெற வேண்டும்



  அ. முஹம்மது கான் பாகவி   
[ தமிழகத்தைப் பொருத்தவரையில் முஸ்லிம் மாணவிகள் மாநில அளவில் பள்ளிப் படிப்பில் முதலிடம் பெறும் அளவுக்குக் கல்வியில் முன்னேறியுள்ளனர் என்பது ஆறுதல் தரும் தகவலாகும்.
முஸ்லிம் மாணவ - மாணவிகள் முன்புபோல் இல்லாமல் உயர்கல்வி பெறுவதிலும் தகுதி வாய்ந்த வேலைவாய்ப்புகளை அடைவதிலும் முனைப்புக் காட்டிவருகின்றனர். முஸ்லிம் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் மனமாற்றமுமே இதற்குக் காரணம்.
Download As PDF

பிஞ்சுகளை அடிக்க வேண்டாம்! எதிர்காலம் நஞ்சாகும்!!



அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி இன்றைய காலத்திற்கு ஏற்புடையது அல்ல. ஏனெனில் அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எதிர்காலத்தில் வன்முறையாளர்களாக மாற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.
Download As PDF

Wednesday, August 29, 2012

உலகின் மிகப்பெரிய பல்கலைக் கழகம்

னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். கடந்து ஒரு வாரமாக தேர்தல் முடிவுகள், புதிய முதல்வர், புதிய அமைச்சர் என பல எதிர்பார்ப்புகளுடன் கழிந்து போனது. சரி இனி நாம் விசயத்திற்கு வருவோம். பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?
Download As PDF

Tuesday, August 28, 2012

செக்ஸ் Vs பொருளாதாரம்

1.பதிமூன்று வயதில் செக்ஸுக்கு தயாராகிவிடும் மாணவன் அ மாணவி செக்ஸ் மீதான நாட்டத்தால் தன் அறிவில் பாதியை தான் கல்வி பயில செலவழிக்க வேண்டியுள்ளது. பாதி அறிவு செக்ஸை அடையவோ அ அந்த உணர்வுகளை அடக்கவோ செலவழிந்து விடுகிறது

2. அதிர்ஷ்ட வசமாக சுய இன்பம் இத்யாதி மாற்று வழிகளின் உதவியால் காதல் கத்திரிக்காய் என்று டைவர்ட் ஆகாதிருந்தால் அ புத்தி சாலித்தனமாக கணக்கு போட்டு காதலித்தால் பிரச்சினை இல்லை. தெய்வீக காதல் இத்யாதியில் இறங்கிவிட்டால் ஷெட் (திவால்)
Download As PDF

மருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள், ‘தசைகளையும் வளர்க்கிறது’ இப்போது!

என்னங்க, எல்லாரும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா?
என்ன அப்படி பார்க்குறீங்க?
ஆஹா, இந்த மேலிருப்பான் திரும்பவும் ஆப்பிளோட வந்திருக்கானே….., இந்த முறை என்னத்த சொல்லப்போறானோ அப்படீன்னு பார்க்குறீங்களா?
அட, அது வேற ஒன்னுமில்லீங்க! ஆப்பிள், குறைந்தபட்சம் இருதய நோய் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவாவது மருத்துவரை கண்டிப்பா தூரத்திலே வைக்கக் கூடிய திறன் கொண்டது 
Download As PDF

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை  சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக  நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை.  நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று  எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால்,  தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “,  என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.
அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள்.  அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள்.  அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான். கதையைக்கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும் புத்திசாலியானப் பேய்தான்” என்கிறார். ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற , செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான்.  அத்துறவியோ புன்னகைத்தபடி, “அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ  பெருமைப்பட வேண்டும்” என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!
அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், “உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை,  அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும்  நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான்.
சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய  அள்ளி, ” என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான். அவ்வளவுதான்,  அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!
என்ன, கதையைக் கேட்டாச்சா?  சரி, இப்போ நாம இந்தப்பதிவோட முக்கியமான செய்திக்கு வருவோம். அதாவது, கதை சொல்வதும் அதை புரிந்து கொள்வதும் ஒரு கலையாம். பெரும்பாலும் மக்கள், கதைகளில் வரும் வார்த்தைகளையும், கதையையும் மட்டுமே புரிந்துகொள்கிறார்களே தவிர, கதையின் அடிப்படைக் கருத்தை (மையக்கருவை) புரிந்துகொள்வதில்லையாம். அது எப்படி என்கிறீர்களா? உதாரணத்துக்கு இக்கதையையே எடுத்துக்கொள்வோம். இக்கதையைக் கேட்ட/படித்த சிலர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்….
“யாருக்குமே எல்லாம் தெரிவதில்லை. பேய்களுக்கு கூடத்தான். சில வகையில் வேண்டுமானால் நாம் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் எல்லா வகையிலும் அல்ல”
“அந்த பேய் ஏன் திரும்ப திரும்ப வந்தது என்றால், எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறது இந்தப் பேய் என்று அவன் எப்பொழுதும் ஆச்சரியப்பட்டான். அதனால், அந்தப் பேய் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஒரு நாள்  எதிர்த்து நின்று தைரியமாக அவன் கேள்வி கேட்டவுடன் அந்தப் பேய் ஓடிவிட்டது”

“அவனில் ஒரு பகுதிதான் அந்தப் பேயே! அதனால், அவனுக்குத் தெரியாத எதுவும் அந்தப் பேய்க்கு தெரியவில்லை”
” அவனுடைய மனதிலிருந்துதான் அந்த பேய் வருகிறது. அதை உருவாக்கியவனும் அவனேதான். அவனுடைய குற்ற உணர்வுதான் பேயாக வந்து அவனை துன்புறுத்துகிறது”
” நாம் பயப்படுவதால்தான் எதுவுமே நம்மை பயமுறுத்துகிறது. அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது”
இன்னும் சிலர்…..
“எனக்கு இந்தக் கதையின் முடிவு பிடிக்கவில்லை. நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் நான் இந்த கதையை படிக்கத் தொடங்கினேன். கடைசியில் சப்பென்றாகிவிட்டது”
“ஆமாம் , அவன் ஒரு ஜென் துறவியைச் சந்தித்தான் என்று ஏன் அந்தப் பேயால் கண்டுபிடிக்க முடியவில்லை?”









ஒரே கதையை படித்தவர்களின் புரிதல்கள் எத்தனை விதத்தில் இருக்கிறதென்பதை கவனித்தீர்களா? ஆக, கதை ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தில் அது பல்வேறு விதமாக திரிந்து, கடைசியில் கதையின் அடிப்படைக் கருத்து காணாமல் போய்விடுகிறது. இதுபோலத்தான் நம் பயங்களும், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளும்!
உண்மையில் பேய்கள் என்பது நம் பயங்களும், மனதில் ஏற்பட்டு நம்மை அலைக்கழிக்கும் ஒரு வித உளவியல் நோய்களுமே. அத்தகைய பயங்களை உருவாக்கி நம்மை இம்சிப்பதே நம் மூளைதான். அது பயங்களையும் உருவாக்கும், அதேசமயம் வேறு யாரோ ஒருவர் வந்து நம்மை பயமுறுத்துவது போல புலம்பவும் செய்யும்! ஆக, நம் பயங்களுக்கும் துன்பங்களுக்கும் நம் மூளைதான் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.
இதைத்தான் சொல்கிறது ஜென் வரலாறு. ஜென் துறவிகள் நம் கற்பனைப் பேய்களைவிட (மனித மனங்கள்!) அதிபுத்திசாலிகளாம். ஆனால், ஜென் துறவிகள் ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே இருக்கின்றனர்(பேய்கள் எங்கே இருக்கின்றன?). அவர்கள் சொல்வது என்னவென்றால், பேய்கள் என்பவை  நம் எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும்தான்.  பயப்படுவதற்கும், துன்பப்படுவதற்க்கும் நாம் விரும்பவில்லை என்றால் வேறு ஒருவர் வந்து  நம்மை எப்படி துன்புறுத்த முடியும்? சற்று சிந்தியுங்கள்!
அதனால், நாம் உருவாக்கிய பேய்களை (பயம், பற்று, எதிர்ப்பார்ப்பு, ஆசை, போதை….) நாமேதான் அழிக்க வேண்டும். மொத்தத்தில் பேய்கள்  நம்மைப் போன்ற உருவமில்லாதவை, வெறும் மனப் பிரம்மைகள்தான்! அவற்றை தூக்கி எறிந்துவிட்டு சென்றோமானால், நலமான வளமான வாழ்வை வாழலாம்!
இந்த ஜென் கதையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Download As PDF

செக்ஸ்: உச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்; இதுவரை கைகொடுக்காத ஆய்வுகள்?!

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:
உங்கள் இருதய நலனை பேணிக்காக்க, ஒரு நாளில் குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்ச்சி செய்வது அவசியம். ஒரு மணி நேரம் செய்யும் உடற்பயிற்ச்சிக்கு நாம் உண்ணும் ஒரு வேளை உணவு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!
நாம எல்லாரும் தெரிஞ்சிக்க, புரிஞ்சிக்க, விவாதிக்க விரும்புற ஆனா இப்படியெல்லாம் செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமாத்தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப்பட்ட எல்லாவிதமான கருத்துகளுமே நம்ம சமுதாயத்துல இதுவரைக்கும்!  அளவான எல்லா விஷயங்களுமே நல்லதுதான்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்! அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் செக்ஸ்கூட!
Download As PDF

உடற்பயிற்சி மாத்திரையாகிறது ஒரு ஹார்மோன

நம் எல்லோருக்குமே ஆசைதான் வாரணம் ஆயிரம் சூர்யா போல நமக்கும் ஒரு சிக்ஸ்
பேக் இருந்தால் நன்றாக இருக்குமே என்று! ஆனால் என்ன செய்ய, சூர்யா போல நம்மால் மாதக் கணக்கில் ஜிம்முக்கு போகவும் முடியாது. உணவுக் கட்டுப்பாட்டிலும் இருக்க முடியாது!
‘இவை இரண்டையுமே செய்யாமல் கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா சொல்லுங்கள்’ என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும்.
ஆனால், அமெரிக்க ஆய்வாளர் ப்ரூஸ் ஸ்பீகெல்மேனோ, ‘அவ்வளவுதானே கவலையை விடுங்க. இந்த உடற்பயிற்சி மாத்திரையை சாப்பிடுங்க. நீங்க ஜிம்முக்கும் போக வேண்டாம் உணவுக் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டாம். ஆனால் கட்டுமஸ்தான உடலமைப்புக்கு நாங்க கியாரண்டி’ என்று சொல்லாமல் சொல்கிறார்.
ப்ரூஸ் ஸ்பீகெல்மேன் தலைமையிலான ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இயற்கை ஹார்மோன் ஒன்று உடற்பயிற்சி போலவே செயல்பட்டு கெட்ட கொழுப்பினை நல்ல கொழுப்பாக மாற்றுகிறது என்பதுதான் ஆய்வுலகின் சமீபத்திய ஹாட் செய்தி.
இந்த ஹார்மோனுக்கு ‘ஐரிசின்’ என்று பெயரிட்டிருக்கிறார் ஸ்பீகெல்மேன். மனிதர்கள் கடவுளுடன் தொடர்புகொள்ள அனுமதி கொடுத்த கிரேக்க பெண் தெய்வத்தின் பெயர் ஐரிஸ். அதுபோல உடற்பயிற்சியானது உடலின் பல திசுக்களுடன் தொடர்புகொள்ள இந்த ஹார்மோன் உதவுவதால் இதற்கு ஐரிசின் என்று பெயர் வைக்கப்பட்டது என்கிறார்.
ஐரிசின், எலிகள் மற்றும் மனிதர்களின் உடலில் இயற்கையாகவே உற்பத்தி ஆகிறது. இது, உடலின் செலவிடப்படாத சக்தியை சேமிக்கும், சிறு உருண்டைகளால் ஆன வெள்ளை கொழுப்பினை, வெப்பத்தை உண்டாக்கும் காப்பி கொழுப்பாக (பிரவுன்
ஃபாட்) மாற்றுமாறு உயிரணுக்களை தூண்டுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சியினால் தசை திசுக்களில் ஏற்படும் மாற்றங்களான கலோரிகள் எரிக்கப்படுவது, மேம்படுத்தப்பட்ட இன்சுலின் உற்பத்தி மற்றும் உடல் உறுதி பெறுவது ஆகிய பல மாற்றங்கள் ஐரிசின் செயல்பாட்டினாலும் ஏற்படுகின்றன.
ஐரிசின் கொடுக்கப்பட்ட எலிகள் சிகிச்சைக்கு பின்னான பத்து நாட்களில் சில கிராம்கள் அளவு எடை குறைந்தன. உயிரணுக்களின் செயல்பாட்டுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் மரபணுக்கள் தூண்டப்பட்டது. மேலும், அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளால் உடலுக்கு ஏற்படும் சேதமும் ஐரிசினால் குறைக்கப்பட்டது. இதனால் உணவுகளால் ஏற்படும் உடல் பருமன் மற்றும்
நீரிழிவு ஆகிய நோய்களிலிருந்து உடலும் பாதுகாக்கப்படுகிறது.
இது தவிர, உடற்பயிற்சியானது நரம்பு தசை பகுதிகளுக்கு பலனளிக்கக்கூடியது. அது போல ஐரிசினும் பலனளிக்கும் பட்சத்தில், தசை நோய்களான மஸ்குலர் டிஸ்ட்ரஃபி மற்றும் தசை விரயமாதல் ஆகியவற்றுக்கும் ஐரிசின் கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார் ஸ்பீகெல்மேன்.
அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் மூத்த ஆய்வாளர் ஜெஃப்ரி ஃப்லையர் ஐரிசின் பற்றி கூறுகையில், ஐரிசினுடைய வருகை உடற்பயிற்சி, உடல் எடை மற்றும் நீரிழிவு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை புரிந்துகொள்ள ஒரு புது அணுகுமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது என்கிறார்.
ஐரிசினை உடற்பயிற்சி மாத்திரையாக உற்பத்தி செய்யவும், பிரவுன் ஃபாட் தொடர்பான மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ளவும் ‘எம்பர் தெரபியூடிக்ஸ்’ என்னும் ஒரு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் ஸ்பீகெல்மேன். இந்த நிறுவனத்துக்காக சுமார் 34 மில்லியன் டாலர் கடனுதவியும் பெற்றிருக்கிறார்.
ஆனால், ஸ்பீகெல்மேன் நினைப்பது போல இந்த ஐரிசினை உடற்பயிற்சி மாத்திரையாக மாற்றுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்கிறார் அமெரிக்காவின் எம்.ஐ.டி ஆய்வு மையத்தின் உயிரியல் துறை பேராசிரியர் ஹார்வீ லோடிஷ். ஏனென்றால்,
கடந்த 1990-களில் தான் கண்டுபிடித்த ‘அடிப்போனெக்டின்’ என்னும் ஹார்மோனை மாத்திரையாக தயாரிக்க முயன்று இறுதியில் தோல்வியையே சந்தித்ததாக கூறுகிறார் லோடிஷ். அடிப்போனெக்டினும் ஐரிசினை போன்ற ஹார்மோன் என்பது
குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஐரிசினும், அடிப்போனெக்டினும் ரத்தத்தில் அதிக அளவுகளில் இருக்கின்றன. அதைவிட அதிக அளவுகளில் இவை இரண்டையும் மாத்திரையாக உட்கொண்டால் மட்டுமே இந்த ஹார்மோன்களின் பலன் உடலுக்கு முழுமையாக
கிடைக்கும். இந்த காரணத்தாலேயே இவை இரண்டையும் மாத்திரைகளாக உற்பத்தி செய்வது மிகவும் கடினமான ஒன்று என்கிறார் லோடிஷ்!
அதேசமயம், ஐரிசினை உற்பத்தி செய்வது மிகவும் சுலபம். அதனால் ஜீன் தெரபி போன்ற முறைகள் மூலமாக ஐரிசினை கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார் பேராசிரியர் லோடிஷ்.
மொத்தத்தில் உடல் பருமன், நீரிழிவு மற்றும் நரம்புதசை நோய்களான மஸ்குலர் டிஸ்ட்ரஃபி மற்றும் தசை விரயமாதல் உள்ளிட்ட பல நோய்களுக்கு ஐரிசின் கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறார் ஸ்பீகெல்மேன்!
எது எப்படியோ, ஜிம்முக்கும் போகாமல், உணவுக் கட்டுப்பாட்டிலும் இருக்காமல் கட்டுமஸ்தான ஒரு உடலமைப்பு நமக்கு கிடைத்தால் கசக்குமா என்ன?  அதனால் ஐரிசின் சீக்கிரம் உடற்பயிற்சி மாத்திரையாக மாறுவதற்கு ஆய்வாளர்
ஸ்பீகெல்மேனின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவோம்.
Download As PDF

அன்றாட மனித உரிமை: அதிகாரத்தின் சூதாட்டம்

மனித உரிமை பற்றிய சொல்லாடல் பொதுவாக இனப்படுகொலை, போர்க்காலக் குற்றங்கள், போலீசாரின் அத்துமீறல்கள், அரசின் அதிகார துஷ்பிரயோகம் போன்றன சார்ந்து அதிகமும் நடைபெற்றுவருகிறது. இலங்கையில் தொடர்ந்து தமிழ் மக்களின் மனித உரிமை துச்சமாக மதிக்கப்பட்டு வருவதை நாம் கொந்தளிப்புடன் கவனித்து எதிர்வினையாற்றிவருகிறோம். அதிர்ஷ்டவசமாக நம்மில் பெரும்பான்மையோரை இதுவரை மேற்படி வன்முறைகள் நேரடியாகத் தீண்டுவதில்லை. அதிர்ஷ்டவசமாகத்தான்.
Download As PDF

இஸ்லாத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவமும், முக்கிய பிரார்த்தனைகளும்!

நம்மைப் படைத்த இறைவனிடம் நமது தேவைகள் நிறைவேறவும், கஷ்டங்கள், துன்பங்கள், ஆபத்துகள், கெடுதிகள் நீங்கவும் பிரார்த்தனைப் புரிகிறோம். அதாவது துஆ கேட்கிறோம். இதன் சிறப்புகள் என்ன? இதற்கு தக்க பலன் உண்டா? என்பது பற்றியும் சில முக்கியமான துஆக்கள் பற்றியும் இக்கட்டுரையில், அல்லாமா முஹம்மதுப்னு முஹம்மதுப்னு அல்ஜஸ்ரீ ரலியல்லாஹு அன்ஹு (ஹிஜ்ரி 833 ல் திமிஷ்க்-டாமஸ்கஸ் நகரில் பிறந்து, ஷீராஜ் நகரில் மறைந்தார்கள்) என்ற மகான் அவர்களால் ஸஹீஹான ஹதீதுகளிலிருந்து தொகுக்கப்பட்ட இந்த நூலிலிருந்து ‘அல்ஹிஸ்னுல் ஹஸீன்’ என்ற கிரந்தத்திலிருந்து சேகரிக்கப்பட்டு தொகுத்தளிக்கப்படுகிறது.
Download As PDF

ஏற்றமிகு நன்மைகளை அள்ளித் தரும் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதுள்ள ஸலவாத்துக்கள்.

قَلَّتْ حِيْلَتِىْ اَنْتَ وَسِيْلَتِيْ اَدْرِكْنِىْ يَارَسُوْلَ اَللهِ
என்னுடைய எல்லா முயற்சிகளும் முற்றுப்பெற்றுவிட்டன. நாயகமே! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  நீங்கள்தான் என்னுடைய வஸீலாவாக இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் ரஸூலே என்னைக் கைவிட்டுவிடாது இரட்சித்துக் கொள்ளுங்கள்.
All my efforts have come to an end. Ya Rasoolullah Sallalahu Alaihi Wa Sallam  you are the only one who remains as my Waseelah. Oh Allah’s Rasool sallalahu alaihi wa sallam save me.
எல்லாவிதமான நாட்டத்தேட்டங்களுக்காக நின்று கொண்டிருக்கும் போதும் அமர்ந்து கொண்டிருக்கும் போதும் உளுவுடனோ, உளு இல்லாமலோ இதை ஓதிக் கொண்டிருங்கள். இன்ஷா அல்லாஹ் தோல்வி என்பதே இல்லை.
Download As PDF

செக்ஸ்: சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்!


செக்ஸு….. செக்ஸு….. செக்ஸு……

wikimedia: Agabante
“செக்ஸுன்னா, ஏன்யா இப்படி அலையுறீங்க”, அப்படீன்னு யாராவது கேட்டா, சுத்தமா யோசிக்காமகூட, “ஏன்னா, அதுல ஒருவிதமான சுகம், கிளர்ச்சி, இன்பம் இப்படி நெறைய இருக்குங்கிறதுனாலதான்”ன்னு எல்லாரும் கோரசா கத்திச் சொல்லனும்னாவது நெனைப்பாங்க அப்படீங்கிறதுதான் நிதர்சன உண்மை?! ஆனா, சொல்வாங்களா மாட்டாங்களாங்கிறது ஆளைப் பொறுத்தது!
Download As PDF

 தாய்ப்பாலுக்குப் பதிலாக எவ்வெவற்றின் பால்கள் உலகெங்கும் ஊட்டப்படுகின்றன?

       பச்சிளங் குழந்தைகளின் இயல்பான உணவு பாலாதலால் அவைகளுக்குப் பால் ஊட்டப் பெறுகிறது. முதுகெலும்புடைய பெண் விலங்குகள் எல்லாம் தம் குட்டிகள் அல்லது குழந்தைகளைப் பாலூட்டம் தந்தே வளர்க்கின்றன. இந்த நீர்மப் பொருளான பால் (fluid) அவைகளுடைய மார்பகத்திலோ மடி யிலோ சேமித்து வைக்கப் பெற்றுள்ளது. பிறந்த குட்டி அல்லது குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெண்ணும் தரும் பால் முழுமையான நிறை உணவாகும்.
Download As PDF

புத்தகக் கொடி பிடிப்பது...


உன்னைச் சுற்றி
வாழ்க்கைப் பக்கங்களை
விரித்து வைத்திருக்கிறது
உலகப் புத்தகம்

எந்தப் புத்தகத்தையும்
பார்க்கவே நேரமில்லை
படிக்க மட்டும்
முடியவா போகிறது?
Download As PDF

சாப்பிட்டவுடன் செய்யக் கூடாதவை

வழக்கமாக சிகரெட் புகைப்பவராக இருப்பினும் சாப்பிடவுடன் சிகரட் பிடித்தால் சாதாரண நேரங்களில் புகைப்பதை விட மிகப் பெரிய கெடுதல் ஏற்படும்.
சாப்பாட்டின் இறுதியில் அல்லது சாப்பிட்டு முடித்தவுடன் பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) உருவாகும். எனவே சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன் அல்லது பின் பழங்கள் சாப்பிடும் பழக்கமே உகந்தது.
Download As PDF

பிரம்மச்சார்யமா? தாம்பத்தியமா? - எது ஆரோக்கியப் பாதை

   உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறு படும். சிலருக்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடியாது. சிலருக்கு வாரத்திற்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூடப் போதும். அவரவர்களுடைய உடற்கூற்றைப் பொறுத்து உடலுறவின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்மசாரிகளைவிடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். மனிதனுக்கு உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண் டாவது இடத்தை வகிக்கிறது. மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது.
Download As PDF

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !


சென்னையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்சினையை கல்வி நிறுவனங்களின், பாடத்திட்டத்தின் பிரச்சினை என்று மட்டும் பார்ப்பதை விட ஒரு மாணவன் வளரும் சமூக சூழ்நிலையை ஆய்வு செய்வது தேவையாக இருக்கிறது. அந்தச் சூழல் எப்படி ஒரு வன்முறை மனோபாவத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது என்பதை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது.
Download As PDF

உடல் எடையே குறைக்க சில தகவல்கள் !!!!

பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.

உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது. ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் ஒருசில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி ஏதாவது இருக்கிறதா? என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம்
Download As PDF

ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் - சவூதி ஃபத்வா


பிஸ்மில்லாஹ்ஹிர் ரஹ்மானிர் ரஹீம்
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானது. அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர்கள் தோழர்கள் தோழியர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக !
நவீன காலத்தில் வாழும் முஸ்லிம்கள் பல சோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர். குழப்பம் அனைத்து திசைகளிலும் அவர்களைச் சூழ்ந்துள்ளன. முஸ்லிம்களில் பெரும் பான்மையினர் அதில் வீழ்ந்து தத்தலித்துக் கொண்டிருக்கின்றனர். (மார்க்கத்தில்) வெறுக்கப்பட்ட காரியங்கள் தலை விரித்தாடுகிறது. மனிதர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித பயமோ, வெட்கமோ, இன்றி மானக்கேடான காரியங்களைப் பகிரங்கமாக துணிந்து செய்கின்றனர்.
Download As PDF

ஹபீப் தன்வீர் (1923-2009): கற்றதை மறக்கக் கற்றுக்கொண்டவர்

ஹபீப் தன்வீர்எனும் பெயரை நான் கேள்விப் பட்டது 1980களின் இடையில். இப்ராஹிம் அல்காஜி, பி.வி.காரந்த், காவலம் நாராயண பணிக்கர், சத்யதேவ் துபே, ரத்தன் திய்யம், உத்பல் தத் போன்ற இந்தியா வின் மிகச்சிறந்த நாடக ஆளுமைகளோடு ஹபீப் தன்வீர்என்ற பெயரையும் நான் அறிந்திருந்தேன்.
1950களில் இந்திய நாடக மன்றத்தில் தீவிரமாக செயல்பட்டவர். 1982ம் ஆண்டு எடின்பர்க்கில் நடை பெற்ற சர்வதேச நாடகவிழாவில் இவரது சரண்தாஸ் சோர்நாடகம் முதல் பரிசை வென்றது. 1971 பாராளு மன்ற தேர்தலில் காங்கிரசை ஆதரித்து இந்திரா லோக்சபாஎன்கிற நாடகத்தையும் இவர் பல இடங் களில் நிகழ்த்தியிருக்கிறார். 1971-77ம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கி றார். அதாவது அவசர நிலை காலத்தில்.
Download As PDF

அறிவின் திறவுகோல்'' அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்...!

''அறிவின் திறவுகோல்'' அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்!
குழந்தைகள் பிறந்த அடுத்த நொடியிலிருந்து நல்ல தந்தைகள் அவர்களுக்கான வாழ்க்கையை விட்டுவிட்டு குழந்தைகளுக்கு என்று வாழ தொடங்கிறார்கள்.
அவர்களுக்கான பிடித்தது பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு குழந்தைகளுக்கு பிடித்தது, பிடிக்காதது எல்லாம் அவர்களுக்கும் பிடித்தது. பிடிக்காததாக ஆக்கி கொள்வாரகள்.
தந்தையர்கள் எப்போதும் பாசத்தை வெளியே காண்பிக்காமல் கண்டிப்பு என்னும் வேஷம் போடுவதில் வல்லவர்கள்.
Download As PDF

கணிதமேதை அல் குவாரிஸ்மி பற்றிய தகவல்கள் !!!(AL KHWARIZMI )

கணிதத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய சாதனைகள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இன்றைய நவீன கணினிக்கு அவை தான் அடிப்படையாகும்.எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல்-மாமுனூடைய காலத்தில் தான் முறையான கணித விஞ்ஞான ஆய்வு தொடங்கிற்று. இந்தக் காலக்கட்டத்தில் கணித துறை ஆக்கங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் மட்டுமே இயற்றப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டு வரை கணிதத்துறையில் முஸ்லிம்களின் அடிப்படையான ஆக்கங்களே காணப்பட்டன.
Download As PDF

தேசங் கடக்குது தேசபக்தி! பாப் இசையில் வண்டே மாட்றம்!!

தேசங் கடக்குது தேசபக்தி! பாப் இசையில் வண்டே மாட்றம்!!
”வந்தே மாதரம். ஏழெட்டு தடவை சொல்லிப் பாருங்கள், நாவினிக்கும், தொண்டை இனிக்கும்” என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து கொண்டிருந்தார் எழுத்தாளர் சிவசங்கரி. அதென்ன சர்க்கரை வியாதிக்கு மாற்று மருந்தா என்று வாசகர்கள் தேடியலைய வேண்டாம். ”சொல்லச் சொல்ல இனிக்குதடா…. முருகா” மாதிரி இதுவும் ஒரு இனிப்பு மந்திரம்.
Download As PDF

நூலாய்வு: இஸ்லாம் மிகச் சுருக்கமான அறிமுகம்



நூலாய்வு : அபத்தமான அறிமுகம்

நூல் : இஸ்லாம் மிகச் சுருக்கமான அறிமுகம்
மூலம் : மலிஸ் ரூத்வென்
மொழிபெயர்ப்பு : சிங்கராயர்
பக் : 202
விலை : ரூ 90
வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை. புத்தாநத்தம்,621310

அமெரிகாவிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக அச்சகம், 1997 ல் ஆங்கிலத்தில் வெளியிட்டு ஒலிவடிவமாக (audio book) வும் வெளிவந்துள்ள Islam A Short introduction என்ற நூலின் தமிழாக்கம் இது.
Download As PDF

புகை பிடிப்பதால் 25 நன்மைகள்...!!!

mohammed zubair



 புகை பிடிப்பதால் 25 நன்மைகள்...!!!
புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

Download As PDF

ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?



Androgynous நாம் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் ஆணா பெண்ணா என்பதை எப்படி பிரித்தறிகிறோம்? நமது மூளையில் இந்த வேறுபாடுகள் எவ்வாறு உணர்த்தப்படுகின்றன? இது ஒரு சுவையான ஆய்வு. மாண்ட்ரீல் பல்கலைக்கழக உளவியல் அறிஞர் இது பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

படத்தில் காணும் androgynous தோற்றம் கொண்ட நபரின் நிறம், முகத்தில் உள்ள சில குறிப்பிட்ட பாகங்கள் இவற்றைக் கொண்டுதான் மனித மூளை ஆண்பெண் வேறுபாடுகளை விரைவாக பிரித்தறிகிறது. புருவங்கள் வாய்ப்பகுதி இவற்றில் காணப்படும் பளபளப்பினாலும் நமது மூளை ஆணையும் பெண்ணையும் தெரிந்துகொள்கிறது.
Download As PDF

ஈறுகெட்ட நாகரிகம்


Jaw வேட்டையாடி பிழைத்துவந்த வாழ்க்கையை விட்டு வேளாண்மை செய்து பிழைக்கும் நிலைக்கு மனிதன் வாராதிருந்தால் நாடு, நகரம், அறிவியல் தொழில் நுட்பம் என்று எதுவுமே ஏற்பட்டிருக்காது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதன் வேட்டைக்காரனாகத் தானிருந்தான். அவனது பற்களின் பலத்தையும், பெரிய தாடையின் அளவையும் இன்றைய மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நவீன மனிதனின் பற்கள் வெறும் அவலுக்கு சமம். தாடை கூட சிறியதாகி உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.
Download As PDF

தாவரங்களின் இனப்பெருக்கம்


தாவரங்களின் ஆண்பாகம் என்பது மகரந்தத்தூள்கள்.

பெண்பாகம் என்பது சூல்முடிகள்.

பறவைகள், காற்று இவற்றின் உதவியால் மகரந்தத்தூள்கள் சூல்முடியில் போய் ஒட்டிக்கொள்கின்றன. சூல்தண்டு வழியாக மகரந்தத்தூள் இறங்கி, ஒரே ஒரு மகரந்தம் மட்டும் சூலகத்திற்குள் போய்ச்சேருகிறது. இதைத்தான் தாவரங்களில் கருவுறுதல் என்கிறோம்.
Download As PDF

சுறாவுக்கு எத்தனைப் பற்கள்?


பொன்னன் கட்டுமரத்தின் துடுப்பை வேகமாகப் போட்டான். “தம்பி! இதுக்கு மேலே போக வேண்டாம். இனிமே வரதெல்லாம் சுறாமீன் சஞ்சாரப் பகுதி'' என்று எச்சரிக்கை செய்தான், கொம்பன்.

Fishermen கட்டுமரத்தில், பனை ஓலைக் கூடையில், பிடித்த மீன்களெல்லாம் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. “அண்ணே! நான் இதுவரை சுறாமீனைப் புடிச்சதே இல்லை. இப்ப ஒன்றைப் புடிச்சுப் பார்க்கலாமா?' என்று ஆவலுடன் கேட்டான், பொன்னன்.
Download As PDF

ராமர் பாலம் – கட்டுரை

                என் கட்டுரையில் எழுதுவதற்காக மேற்கோள்களுக்காக இணையத்தில் தேடியபொழுது இனிமேல் புதிதாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்னும் அளவிற்கு சிலர் நன்றாகவே எழுதியிருக்கிறார்கள். அவற்றைப் படித்த பின்னரும் ஒரு சிலர் தேர்ந்தெடுத்து மட்டுமே புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை கட்டுரைகள் எழுதினாலும் விழலுக்கு இரைத்த நீரேயாகுமன்றி பயனொன்றும் தாராது. நான் எப்பொழுதும் பொன்மொழியாக கீழுள்ள மொழியைச் சொல்லுவேன்,
புரிந்தவனுக்கு இருமுறை சொல்லவேண்டிய அவசியமில்லை; புரியாதவனுக்கு இருமுறை சொல்லியும் பிரயோஜனமில்லை.
Download As PDF

Sunday, August 26, 2012

Fatwa about Pseudo Disciples-ஷெய்குக்கு மாற்றமான முரீது பற்றிய பத்வா

ஷெய்குக்கு மாற்றமான முரீது பற்றிய பத்வா.
In Tamil: K.M.N.நூஹ் முஹ்யித்தீன் ஆலிம் மஹ்லரி,உலவி அவர்கள்
இந்த பத்வா வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபிக கல்லூரியின் ஸ்தாபகரும், மாமேதையுமான மௌலானா, மௌலவி ஷம்ஸுல் உலமா அல்ஹாஜ் அப்துல் வஹ்ஹாப் ஹஜ்ரத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆசிரியரும், ஞான மேதையுமான குத்பே வேலூர் என்று போற்றப்பட்ட குத்வத்துஸ் ஸாலிகீன் ஷெய்குஷ் ஷீயூக் மௌலானா ஷாஹ் முஹ்யித்தீன் வேலூர் (குத்திச ஸர்ரஹுல் அஜீஸ்) அவர்களின் பார்ஸி தொகுப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.
Download As PDF

Friday, August 24, 2012

தப்லீக் ஜமாஅத்தினர் பின் நின்று தொழலாமா?

தமிழ்நாடு அரசு தலைமைக் காழியின் பத்வா-Can Muslims perform their prayers (namaz) under the Tableegh Jamath Followers?-Tamil Nadu Kazhi fatwa:

கேள்வி: அஷ்ரப் அலி தானவி, காஸிம் நானோத்தவி, ரஷீது அஹ்மது கங்கோஹி, இஸ்மாயில் திஹ்லவி, ஹுஸைன் அஹ்மது மதனி மற்றும் இல்யாஸ் ஆகியோர் கொண்டுள்ள (அகாயித்) கொள்கைகள் என்ன? இவர்களைப் பின்பற்றிய ஒருவரை இமாமாகக் கொண்டு அவரது தலைமையின் கீழ் முஸ்லிம்கள் தம் தொழுகையை நிறைவேற்றலாமா? இவர்கள் தம் கொள்கை(அகாயித்)களை ஏற்கலாமா? இப்படிப்பட்ட ஒரு இமாமின் தலைமையின் கீழ் தொழப்படும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக அமையுமா?
Download As PDF

பைஜிஷாஹ் பற்றி கூறியிருப்பதற்கு விளக்கம் தாருங்கள்

கேள்வி:எல்லா சிருஷ்டிகளையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான் இறைஞானம் வந்ததற்கான அடையாளம் என்பார்கள்
அன்புள்ள சூஃபி மன்ஜில் சகோதரர்களே!
என் ஷைகு நாயகம் பைஜீஷாஹ் நூரி(ரஹ்). ஒரு முறை அவர்களின் வீட்டு வாசலில் ஷைகு அவர்களுடன் அமர்திருந்தோம். ஈராக் யுத்த நேரம். செய்தி கேட்பதற்காக டி.வியை வைத்தபோது தரீக்கத்திற்கு எதிரான கொள்கையுடைய ஒரு பேச்சாளர் சூஃபியாக்களை சாடினார். அதிலும் குறிப்பாக எனது ஷைகு அவர்களை மறைமுகமாக சாடினார். அங்கே இருந்த சீடர்கள் கோபமடைந்தார்கள்.  ஷைகு அவர்கள் முகத்தில் சிறு வருத்தமும் இல்லை. புன்னகை மாறாமலே இப்படி சொன்னார்கள், “ அவர் எந்த நோக்கத்துடன் இப்படி பேசுகின்றாரோ தெரியவில்லை. ஆனால் ஒருவருக்கு தவறான உள் நோக்கமில்லை. அவரது ஆய்வின் படி தவறென்று என்னை விளங்கி கொண்டுள்ளார். அதன் விளைவாக அல்லாஹ், ரசூலின் பொருத்தம் நாடி என்னை  ஏசினால். அதற்காக இறைவன் அவருக்கு நற்கூலி வழங்குவான் என்பது என் நம்பிக்கைஎன்றார்கள் என் ஷெய்கு நாயகம் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள். என்ன ஒரு பரிசுத்தமான ஜீவன் அவர்கள். கராமத்தை உடைய அவ்லியாவாக அவர்களின் பல கராமத்துகளை கண்டிருந்தாலும் அவர்களுடைய இஹ்லாஸ் என்னை அவர்கள் மேல் அளவற்ற நேசம் கொள்ள செய்தது.
Download As PDF

மீசை முழுவதும் செரைக்கலாமா? & தாடி கத்தரிக்கலாமா?


கேள்வி: மீசை முழுவதும் செரைக்காலமா & தாடி கத்திரிக்காலமா ஆண்கள் மொட்டை போடலாமா?
பதில்:
தாடி, மீசை, தலைமுடி வளர்த்தல், மொட்டை அடித்தல் பற்றிய விளக்கம்:
தாடி, மீசை:
நமது மார்க்கத்தில் புற அலங்காரம் என்னும் தன்னை அழகுபடுத்துதல் பற்றி நிறை ஹதீதுகள் காணக் கிடைக்கின்றன. அதில் தாடி, மீசை, மொட்டை அடித்தல் பற்றிய விபரங்களை இதில் தருகிறோம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
'மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!'
அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ
Download As PDF

முஹம்மது அப்துல் கரீம் ஹஜ்ரத் அவர்களின் கேள்வி-பதில்கள்

உலகத்தில் குர்ஆனை ஓதுவது நன்மை மிகுந்ததா? ஸலவாத்து ஓதுவது நன்மை மிகுந்ததா?
பதில்: ஒரே எடையுள்ள இரண்டு வஸ்துவைப் பார்த்து எவ்வாறு ஒன்றைவிட ஒன்றைக் கூடுதலாகச் சொல்ல முடியாதோ அதைப் போலத்தான் இதற்கும் ஜவாபாகும். ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள்: 'நான் உங்கள் மீது முஹப்பத்து வைக்க நாடினால் நீங்கள் குர்ஆனை மிகுதமாய் ஓதுங்கள். அல்லாஹுத்தஆலா உங்கள் மீது முஹப்பத் வைக்க நாடினால் ஸலவாத்தை மிகுதமாக ஓதுங்கள். அல்லாஹ்வைப் புகழ்வது எனக்குப் பிரியம். என்னைப் புகழ்வது அல்லாஹ்வுக்குப் பிரியம்.
கேள்வி: ஈமான் கொண்டுள்ள முஃமின் தனக்கு ஈமானைக் கொடுக்கும்படி துஆ கேட்கலாமா?
Download As PDF

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடுமா?

கேள்வி: நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடுமா?
பதில்: தற்போது பள்ளிவாயில்களில் தொழுவதெற்கென்றே நாற்காலிகள் போடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் மிகவும் முடியாதவர்கள் அமர்ந்து தொழுவதையும் நீங்கள் பார்த்துதான் இருப்பீர்கள். நின்ற நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும், குனிந்த நிலையிலும், படுத்த நிலையிலும் இறைவனை நினைவுகூறும் படி ஏவப்பட்டுள்ள குர்ஆன் ஆயத்திற்கு இமாம்கள் தந்த விளக்கப்படி இந்த தொழுகை அமைந்துள்ளதையும் பார்த்திருப்பீர்கள்.
Download As PDF

அந்த ''நூறு ரூபாய் நோட்டு''


வைக்கம் முஹம்மது பஷீர்
''நூறு ரூபாய் நோட்டு'' அதிகாலை வேளையில் குளித்து முடித்து, காப்பி குடித்து விட்டு, சந்தோஷத்துடன் விடை பெற்றுச் சென்ற விருந்தாளி, மதியம் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வியர்வையில் நனைந்து களைப்புடன் திரும்பி வந்து தன்னை உபசரித்தவனுக்கு முன்னால் ஒரு நூறு ரூபாய் நோட்டை வைத்துவிட்டுச் சொன்னார்:
""மன்னிக்கணும். நான் பெரிய ஒரு தவறைச் செய்துவிட்டேன். படகுத் துறையில் உட்கார்ந்து கொண்டு நான் நீண்ட நேரம் சிந்தித்தேன். வாழ்க்கைக்கு ஒரு தத்துவ அறிவியலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சிந்தனைகள் இப்படியும் அப்படியுமாகப் பிணைந்து கிடக்கின்றன. மொத்தத்தில் – மிகவும் சிரமம்.
Download As PDF

புற்றுநோய் எச்சரிக்கை!

Cancer_cell, brain
மக்களிடையே பெருகிவரும் புற்றுநோய் குறித்து நமது சமூகநீதி முரசு இதழில் பலமுறை தலையங்கமாகவும் கட்டுரைகளாகவும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். சமூகநீதி அறக்கட்டளையின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வெளியூர்களில் நடைபெறும் கல்வி மாநாடுகளிலும் இன்றைய இந்த சீர்குலைந்து போன வாழ்வியல் முறையை தொடர்ந்து எச்சரித்தே வருகின்றோம்.
கடந்த 15, 20 ஆண்டுகளாக பாதை மாறிப்போன நமது வாழ்க்கை  முறையினால் ஏற்பட்ட விளைவுகள் தான்
Download As PDF

ஆண்களை “வெளுத்து” வாங்கும் சவூதிப் பெண்கள்!

சவூதி அரேபியாவின் ஜித்தா நகர காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான புள்ளி விவரத்தை வெளியிட்டு அரபுநாட்டு ஆண்களை ஆடிப்போக வைத்துள்ளது.
“கணவன்மார்களை அடித்து வெளுத்து வாங்கும் பெண்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது என்பது தான் அந்த அதிர்ச்சியான புள்ளிவிவரம். ஒரு மாதத்திற்கு 145 ஆண்கள் அடியின் வேதனை தாங்க முடியாமல் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர் என்றும் இந்தக் கொடுமை ஆண்டுக்கு 20 சதவிகித அளவிற்கு அதிகரித்து வருகிறது என்றும் ஜித்தா நகர காவல்துறை தெரிவிக்கிறது.
“இதுபோன்ற வன்முறையை யார் செய்தாலும் அது குற்றம் தான் என்றாலும் பெண்கள் தங்களால் தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கும் போது தான் இவ்வாறு எல்லை மீறுகின்றனர் என்று இதற்கான காரணத்தை கூறுகின்றார் சவூதியின் பெண்ணுரிமை ஆர்வலரான ஃபாத்திஹா.
ஏராளமான குடும்பவியல் ஆலோசனை மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் ஃபாத்திஹா கூறுகிறார்.
Download As PDF

இஸ்லாமிய கலாச்சாரம் நெகிழ்வும் அதன் இறுக்கமும்…

இமாம் யூசுப் அல்கர்ளாவி
முன்னுரை :
எங்களின் இறைவனே! வானங்களும் பூமியும் நீ நாடிய எல்லாப் பொருட்களும் நிரம்ப எல்லாப் புகழும் உனக்கே உரித்தாகட்டுமாக!
ஸலவாத்தும் ஸலாமும் உனது இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் மீது நிலவட்டுமாக! அண்ணலாரின் மூலம் முஃமின்களுக்கு நீ பெரும் உதவி புரிந்துள்ளாய். அவர் அவர்களில் ஒருவர். அவர்களுக்கான தூதர். உனது வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களைப் பரிசுத்தப் படுத்தியவர். வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்தவர். அதற்கு முன்பு அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருந்தவர்களே.
Download As PDF

இன்றைய கல்வி – ஓர் இஸ்லாமிய பார்வை!


[ ஒரு ஆண்டில் தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 3 இலட்சம் பொறியியல் படித்தவர்கள் பட்டம் பெற்று வெளிவருகின்றனர். அதில் 10 ஆயிரம் மாணவர்களுக்குக் கூட சரியான வேலை கிடைப்பதில்லை என்பதுதான் இன்றைய நிலை.
ஒழுக்கம், நேர்மை, பண்பாடு போன்ற அறநெறிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கையை உருவாக்காமல், இந்திய அரசின் உயர்கல்வி கொள்கையும் மாநில அரசுகளின் பள்ளிக்கல்வி கொள்கையும் இந்தத் தனியார் கொள்ளைக் கூட்டத்தாரின் விருப்பங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு வடிவமைக்கப்படுகிறது.
Download As PDF

இறைவனின் முடிச்சு - கவிக்கோ




கவிக்கோ அப்துர் ரஹ்மான்
[ பாலுறவில் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து ஒன்றென உணர்கின்றனர். இதுவும் ஏகத்துவத்தை- எல்லாம் ஒன்று என்பதை - நுட்பமாக உணர்த்தும் சான்றாகும். ] இஸ்லாம் திருமணத்தை இருவருக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட நிகழ்வாகக் கருதவில்லை. அதை வெறும் சமூக நிகழ்வாகவும் கருதவில்லை. அதை ஒரு வழிபாடாகவே மதிக்கிறது.
இறைவன் திருமறையில்
'உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்'(24ஃ32) என்று ஆணையிடுகிறான். இறைவன் ஆணையை நிறைவேற்றுவது வழிபாடாகும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் திருமணத்தைச் சமய ஒழுக்கமாகவே கருதுகிறார்கள். 'திருமணம் வழிமுறை எவர் அதைப் புறக்கணிக்கிறவர் என்னைச் சார்ந்தவரல்லர்' (புகாரி 5063) என்பது இறைத் தூதர் வாக்கு. திருமணத்தை இறைநம்பிக்கைக்கு அடுத்த நிலையிலுள்ள சிறந்த நற்செயலாக இமாம்கள் குறிப்பிடுகின்றனர்.
Download As PDF

ஆராய்ச்சிகள் - அன்றும், இன்றும்



"ஆராய்ச்சி", "ஆராய்ச்சியாளர்கள்", "விஞ்ஞானி" - இதெல்லாம் ரொம்பவே நமக்குப் பரிச்சயமான வார்த்தைகள். அவ்வப்போது பத்திரிககளில் "According to latest research..." என்று படித்திருப்போம். உலகில் நமக்கு புரியாத பல புதிர்களை விளங்க வைப்பதும், அறியாத பல நல்ல விஷயங்களையும் புரிய வைப்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களே!!
எல்லா புகழ்பெற்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிகளுக்கும், புது கண்டுபிடிப்புகளுக்குமென்றே "R & D" எனப்படும் "ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல்" என்ற தனித் துறையே உண்டு. இது தவிர அரசாங்கள் சார்பாகவும், பல்கலைக் கழகங்கள் சார்பாகவும் இத்துறை மூலம் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் நடத்தி, மனித மற்றும் உலக மேம்பாட்டுக்குப் பாடுபடுகிறார்கள். எளிதாகப் புரிய வைக்கவேண்டுமென்றால், "மூலிகை பெட்ரோல்" ராமரும் ஒரு ஆராய்ச்சியாளரே!!
Download As PDF

மீன் வியாபாரம் ஓர் அலசல்





துள்ளிக் குதித்தாடும் மீன்களைப் பார்க்கும்போதெல்லாம் இத்தனை அழகானதையா நாம் சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் தோன்றும். ஆனாலும் மீன் குழம்பின் ருசி, மற்ற அசைவ ருசிகளை விட தூக்கலானதுதான். மீன் குழம்பை இரண்டு நாட்களுக்குக் கூட வைத்து சாப்பிடலாம். ருசிகூடுமே தவிர குறையாது.
மீன் சந்தைக்குப் போய் மீன் வாங்கும்போது விற்பவர்கள் விலை அதிகமாக சொன்னால் நாம் பேரம் பேசி சண்டை கூட போடுகிறோம். ஆனால் மீனவர்களையும் அவர்களிடம் மீனை வாங்கி வந்து விற்பனை செய்யும் வியாபாரிகளையும் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை
Download As PDF

முடிச்சவிழும் முதலீட்டு மர்மங்கள்!



முதலீடு(Investment) என்பது பணக்காரர்களுக்கே உரிய விஷயம் என்று ஒருவர் நினைப்பது இயற்கைதான். அதே மாதிரி, வங்கியாளர்களும், முதலீட்டு ஆலோசகர்களும் (Investments advisors) சொல்வதெல்லாம் உண்மை என்று நம்புவதும், அவர்களுக்கு முதலீடு பற்றி எல்லாம் தெரியும் என்று பொதுமக்கள் பலரும் நினைப்பதும் உண்மைதான். ஆனால், ஒரு வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இப்போதெல்லாம் பல காப்புறுதி ஆலோசகர்கள் (Insurance advisors)
Time-Sharing Schemes', 'Multi Level Marketing (MLM)' அல்லது வெளிநாட்டு நிலவங்கிகள் போன்றவையெல்லாம் இப்படிப்பட்ட திட்டங்கள்தான். இது போன்ற வேறு பல திட்டங்களும் இருக்கின்றன.
இந்தக் கட்டுரை,

Download As PDF

ஒரு கருவின் மௌன அழைப்பு



[ ஹலோ, ஹலோ, அம்மா,
நான் இங்கு வானத்தில் நடக்கிறேன்,
தேவதைகளுடன் விளையாடுகிறேன்,
நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன்.
இருந்தாலும் உங்கள் நினைவு என்னை வாட்டுகிறது. 
உங்களுடைய வயிற்றிலேயே என்னை எப்படி நீங்கள் கொலை செய்யலாம்?
கத்தியும், கத்திரிக்கோலும் என்னுடைய உடலைக் கீறிச் சிதைத்தன.
என்னை நீங்கள் துண்டு துண்டாக்கி விட்டீர்கள்.
என்னை யார் குளிப்பாட்டினார்கள்? குப்பைத்தொட்டியில் அல்லவா வீசிவிட்டார்கள்!]
Download As PDF

ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம்




அன்பு மகளே...
‘ஒரு மௌன அழைப்பில்’
உன் ஆதங்கம் கண்டேன்
என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு.
உன்னை எனது வயிற்றிலேயே
கொலை செய்த பாவிதான் நான்
ஏன் இந்த முடிவு?
Download As PDF

பழமொழிகள் 101


o அகத்தினழகு முகத்தில் தெரியும்.
o அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
o அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
o அடியாத மாடு படியாது.
o அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
o அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
o அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
o அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
o அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
o அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
Download As PDF

Thursday, August 23, 2012

வீழ்த்தியவர்கள் வீழ்கின்றார்கள்!.



வீழ்த்தியவர்கள் வீழ்கின்றார்கள்!. விரைந்து விழிக்குமா முஸ்லிம் உலகம்?
கடந்த சில நாட்களாக ஊடகத்தில் அடிபடும் செய்திகள் பெரும்பாலும் அமெரிக்காவை பற்றியதாகவே உள்ளது. காரணம், அந்நாட்டின் பொருளாதாரம் அகலபாதாலத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டு உள்ளது. அதேசமயம், கடந்த 2001 வருடமும் இதே அமெரிக்கா, ஊடகத்தில் பெரும்பாலும் முன்னிலை படுத்தப்பட்டது. காரணம், அந்நாட்டின் ரெட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டதின் எதிரொலி!!. சரி, இந்த இரண்டிற்கும் தற்போது என்ன வந்தது என்று நீங்கள் நினைக்கலாம்!. நிச்சயம் தொடர்பு உள்ளது.
Download As PDF

‘வட்டி அழிகிறது’! ஐரோப்பாவின் சீரழிவு...!! அமெரிக்காவின் பேரழிவு....!!! தப்பிப் பிழைக்குமா இந்தியா?!!!

V V IMPORTANT ECHONOMIC ARTICLE

o அடி மேல் அடி
o அமெரிக்கா பொருளாதார எத்தர்கள்
o அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?
o அமெரிக்காவின் பெட்ரோ-டாலர் சைக்கிள் ஏமாற்று
o அமெரிக்க-சீன ‘பரஸ்பர ஒட்டுண்ணி’ உறவு
o சதாம் ஹுசைன் கொடுத்த முதலடியும் அமெரிக்காவின் பதிலடியும்
o கடங்கார அமெரிக்கவும் ஈட்டிக்கார சீனாவும்
o ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் விளாசிய விளாசல்
o அரசியல் பிழைத்தாருக்கு பொருளாதாரமே கூற்றாகும்!!!
o அமெரிக்க-ஐரோப்பிய பின்னடைவும் அயோக்கிய தலைவர்களும்!!
o அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும் அதனால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளும்.
o தற்காக்கும் இந்திய தந்திரங்கள்
o எப்படி சரியும் இந்திய சந்தை?
o இந்தியாவில் சரியக்கூடிய முக்கிய துறைகள்
o என்ன செய்தால் பித்தம் தெளியும்?
Download As PDF

விபச்சாரம் - ஒரு பார்வை

o பெண்மையும், விபச்சாரமும்
o தொழில்வளம் இல்லாத சமூகங்களில் விபச்சாரம்
o பணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள்
o பண்டைய கால கிரீஸ் நாகரீகத்தில்
o பல்வேறு பரிமாணங்களில் 20-ம் நூற்றாண்டில் விபச்சாரம்
o இஸ்லாமியப்பார்வையில் விபச்சாரம்
நபிமொழி எச்சரிக்கை
''ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்) ''விபசாரத்தை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
Download As PDF

இப்படியும் ஓர் ஆசிரியர்!

E-mail

வகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.
மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.
Download As PDF

முக்கியமான சில கணிணி டிப்ஸ்


கணிணியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தெரிந்து
வைத்திருக்க வேண்டிய சில குறிப்புகள்:

ஏதாவது .com என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.com , just type yahoo in address bar and hit ctrl + enter
ஏதாவது .net என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.net , just type yahoo in address bar and hit Shift + Enter
ஏதாவது .org என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.org , just type yahoo in address bar and hit ctrl + shift + Enter Ctrl-லை அழுத்தியவாறே + அழுத்தினால் எழுத்துரு பெரிதாகிக்கொண்டேவரும்.தெரியுமா?Ctrl-லை அழுத்தியவாறே - அழுத்தினால் எழுத்துரு சிறிதாகிக்கொண்டேவரும்.தெரியுமோ?
Download As PDF

குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!


க‌விஞ‌ர் ஆலிம் செல்வ‌ன்

குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!
எங்கள் வாழ்வும், வளமும் செழித்திட
மறையாய் வந்த அல்புர்கானே!
திரு மறையாய் வந்த அல் குர் ஆனே!
உன்னை வாழ்த்திடும் மனதினில் நிறைந்தவன்
அருட் கொடை தந்த ரஹ்மானே
(வேறு)
உன்றன் உள்ளே முழுதும் எண்ணங்கள் கோடி
எங்கள் உள்ளம் முழுதும் கொண்டாடும் கூடி
(வேறு)
Download As PDF

கவிதைகள் பலவிதம்


துடிக்கும்போது
யாரும் கவனிக்கமாட்டார்கள்
நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள்

விமானங்களின்
விளையாட்டு மைதானம்
வானம்!

ஏழைகளுக்கான
இலவச மின்சாரம்
நிலாவெளிச்சம்
Download As PDF

நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும் ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது!


 
இரவு 11 மணி.
சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, ‘டாக்ஸி’ என கையசைத்து நிறுத்தினார்.
தம்பி ஆஸ்பத்திரி போகனும்.
நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்.
என் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மணி.
நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்’என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.
அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.
டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.
அக்கர்ப்பினியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.
இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.
இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.
நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.
அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.
‘தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்’ என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.
‘வேனம்மா எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருபாங்கன்னு கடவுள் எனக்குப் புரிய வைச்சிருச்சு. பணத்தை நீங்களே வையிங்க. என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான். எதோ யோசிக்க மொபைலை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பன்னினான்.
ஹலோ முதியோர் இல்லமா?
ஆமா என்ன இந்த நேரத்துல போன் பன்னுறீங்கே?
மன்னிக்கவும் நாளு நாளைக்கி முன்னாடி அனதைன்னு சொல்லிட்டு ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன் இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக. முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பன்னிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்.
ஆம்! நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.
Download As PDF

ங்கொய்யால...! யார ஏமாத்தப்பாக்குறே...?









மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு வயதான பணக்கார தம்பதி, அனாதையான தன் பேரனை ஒரு உறவினரிடம் ஒப்படைத்து கூடவே ஐந்து கோடிரூபாய் பணத்தையும் கொடுத்து....
"இவன் வளர்ந்து பெரியவனானதும் இந்த பணத்திலிருந்து உங்களுக்கு விருப்பமானதை கொடுங்க"ன்னு சொல்லிட்டு இறந்து போய்ட்டாங்க...
.அவங்க அப்படி சொன்னதை எழுத்து பூர்வமா எழுதிக்கொடுத்துட்டும் போயிருந்தாங்க....
காலம் வேகமாக நகர்ந்தது.
பேரன் வளர்ந்து பெரியவனானதும்,
"எனக்கு தாத்தா கொடுத்த பணத்த கொடுங்க நான் தொழில் ஆரம்பிக்கணும்" என்று கேட்டான்.
அதற்கு அந்த உறவினர் "இந்தாப்பா...உன் தாத்தா கொடுத்த பணம்"ன்னு பத்து லட்ச ரூபாயை மட்டும் கொடுத்தார்.
உடனே பேரன் "இது அநியாயம் எங்க தாத்தா கொடுத்தது அஞ்சு கோடிரூபா, ஆனா நீங்க எனக்கு கொடுத்தது ரொம்ப கம்மி, எனக்கு அஞ்சு கோடிரூபாயும் வேணும்...இல்லாட்டி நான் வழக்கு போடுவேன்"னு சொன்னான்...
அசராத உறவினர் "நீ என்ன வேண்ணாலும் போட்டுக்க...உங்க தத்தா சாகும்போது என்ன சொல்லிட்டு செத்தாருன்னு தெரியுமா? உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கன்னு சொல்லிட்டுத்தான் செத்தாரு... அதை எழுதியும் கொடுத்துருக்காருன்னு" சொல்லிட்டாரு.
உடனே பேரன் 'நம்மள இந்தாளு ஏமாத்திட்டாரு இவரை வேற மாதிரி சந்திக்கனும்'ன்னு நினைச்சுக்கு நேரா போயி அந்த ஊர்ல இருக்க பெரிய மனுசன்ட்ட விஷயத்த சொன்னான்.
அந்த பெரிய மனுஷன் ரொம்ப நேர்மையான ஆளு....இந்த பையனுக்கு எப்படியாச்சும் பணத்தை வாங்கி கொடுத்திடனும்ன்னு நினைச்சுக்கு யோசிச்சாரு... யோசிச்சாரு.... ராத்திரி முழுக்க யோசிச்சு ஒரு ஐடியா பண்ணாரு....காலையில அந்த உறவினரை வரச்சொன்னாரு.... உறவினரும் ரொம்ப தைரியமா போனாரு...
எல்லா விவரத்தையும் கேட்ட பெரிய மனுஷன் "இந்த பையனுக்கு நீங்க வச்சுருக்க நாலு கோடியே தொண்ணூறு லச்சரூபாய கொடுத்துட்டு, இவனுக்கு நீங்க கொடுத்த பத்து லச்சரூபாய வாங்கி நீங்களே வச்சுக்கங்க"ன்னாரு....
உடனே அந்த உறவினர் "அதெப்படிங்க முடியும்...இவனோட தாத்தா உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கன்னு எழுதியே கொடுத்துட்டாரே....அப்படி இருக்கையில...எனக்கு எவ்வளவு விருப்பமோ அதைத்தான் கொடுத்துருக்கேன்"னு வாதம் பண்ணினாரு....
பெரிய மனுஷன் விடாமே.... "இவனோட தாத்தா உங்கட்ட அஞ்சு கோடிரூபா கொடுத்தாரு... அதில உங்களுக்கு விருப்பமானத கொடுங்கன்னும் சொல்லிருக்காரு... இப்ப நீங்க என்ன பண்ணிருக்கீங்க அந்த பணத்துலேர்ந்து பத்து லச்ச ரூபாய மட்டும் கொடுத்துட்டு மீதிய நீங்க வச்சுக்க விருப்பபட்டுருக்கீங்க....... இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா... மீதி பணத்த நீங்க விருப்பப்பட்டு எடுத்துக்கிட்டீங்க.... இவனோட தாத்தா சொன்னபடி உங்களுக்கு விருப்பமான பணத்தை அதாவது நீங்க விருப்பப்பட்டு எடுத்துக்கிட்ட மீதி பணத்த இவன்கிட்ட கொடுங்க... அவனுக்கு கொடுத்த பணத்த நீங்க வச்சுக்கங்க... நீங்க விரும்பறத கொடுத்துடுங்கன்னுதான் இவனோட தாத்தா சொல்லிருகாரு.... உங்களால எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அதை கொடுங்கன்னு சொல்லலியே.... ங்கொய்யால யார ஏமாத்த பாக்குறே" என்று பேசி உறவினரின் வாயை அடைத்து அந்த பணத்தை பேரனிடம் வாங்கி கொடுத்தார்.
Download As PDF