-->

Tuesday, August 25, 2015

Download As PDF

விவாகரத்தை தவிர்ப்பதற்கான சுலபமான வழிகள்....

இந்த உலகில் எந்த ஒரு உறவுமே நிலையாக நிலைப்பதில்லை. இதற்கு காரணம் ஒவ்வொருவரின் மனநிலையும் வித்தியாசமானதாக இருப்பது தான். மனிதன் என்றால் வித்தியாசம் இருக்கும் தான். ஆனால் அதே சமயம் புரிந்து கொள்ளுதலும், விட்டுக் கொடுத்து நடப்பதும் நிச்சயம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அத்தகைய மனநிலை இல்லாவிட்டால், அனைத்து உறவுகளுமே பாதியிலேயே பிரிந்துவிடும். மேலும் இந்த நிலைமை திருமணமானவர்களுக்கு கூட உள்ளது. இதற்கு இருவரிடமும் சரியான புரிதலும், மனப்பக்குவமும் இல்லாததே ஆகும். 
 
அதுமட்டுமின்றி இன்றைய காலத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள், திருமணத்தை ஒரு விளையாட்டாகவே நினைப்பதால் தான், அந்த உறவுக்கு முடிவை தேடிக்கொள்கின்றனர். இந்த உலகில் இருக்கும் உறவுமுறைகளிலேயே கணவன்-மனைவி உறவு தான் மிகவும் சிறந்தது. இத்தகைய உறவை வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களே உண்மையான அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த உறவில் அனைத்து உறவுகளுமே அடங்கும். எனவே இத்தகைய அருமையான திருமண உறவிற்கு முறிவு என்னும் பெயரில் இருக்கும் விவாகரத்து ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு சில வழிகளை பட்டியலிட்டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்... 
 
* கணவன்-மனைவி இருவருக்குள் சண்டை வருவது சாதாரணம் தான். ஆனால் அந்த பிரச்சனை உடனே தீர்ந்துவிட வேண்டும். இல்லையெனில் அந்த பிரச்சனையே இருவருக்கும் இடையில் பெரும் பிரிவை ஏற்படுத்தும். அதற்கு முதலில் அந்த பிரச்சனையைப் பற்றி இருவரும் பொறுமையாக பேச வேண்டும். இந்த நேரத்தில் ஈகோவை மனதில் கொண்டு நடந்தால், பின் இருவரும் வாழ்நாள் முழுவதும் பிரிய வேண்டி வரும். 
 
* சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. சண்டைகள் வந்தால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கான வழிமுறைகளையும் யோசித்து, அவற்றை தீர்ப்பதற்கு முயல வேண்டும். இவ்வாறு தீர்வு கண்டால், நிச்சயம் விவாகரத்தை தவிர்க்க முடியும். 
 
* விவாகரத்து நிச்சயம் வேண்டும் என்று நினைக்கும் தருவாயில், அதனை தடுப்பதற்கு நடந்த சண்டையை மறந்து, இருவரும் சந்தோஷமாக இருந்த தருணங்களை நினைத்து பார்த்தால், கண்டிப்பாக விவாகரத்தை தவிர்க்கலாம். 
 
* தவறு செய்வதால் தான், சண்டைகள் வருகின்றன. இந்த உலகில் தவறு செய்யாதவர்களே இருக்கமாட்டார்கள். மேலும் தவறு செய்தவர்கள், தவறை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால், நிச்சயம் அந்த உறவு மிகவும் அழகாக இருக்கும். எனவே தவறு யார் மீது இருந்தாலும், அப்போது ஈகோ பார்க்காமல், மன்னிப்பு கேட்க வேண்டும். 
 
* நடைமுறை மற்றும் பழக்கவழக்கங்களை சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். அதைவிட்டு எப்போதுமே ஒரே மாதிரி செயல்பட்டால், பின் இருவருக்கும் இடையில் எந்த நேரமும் சண்டை வந்து கொண்டே இருக்கும். ஆகவே ஒருசில மாற்றங்கள் கூட விவாகரத்தை தடுக்கும். 
 
* திருமண வாழ்வில் சரியான புரிதல் மற்றும் நம்பிக்கை தான் மிகவும் முக்கியமானது. அந்த சரியான புரிதல் மட்டும் இல்லாவிட்டால், அது இறுதியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும். பின் எந்த நேரமும் சண்டை வருவதோடு, இறுதியில் விவாகரத்து வரை சென்று விடும். எனவே எதுவானாலும் மனதில் கொண்டு செயல்படாமல், அதனை பேசி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதன் மூலம், பிரிதலை தடுக்கலாம். ஆனால் அது சற்று தாமதமாகிவிட்டாலும், பின் விவாகரத்து தான் முடிவு. 
 
இவை அனைத்தையும் மனதில் கொண்டு செயல்பட்டால், விவாகரத்து ஏற்படுவதைத் தடுத்து, சந்தோஷமான திருமண வாழ்வை மேற்கொள்ளலாம்.v
Download As PDF

Sunday, December 21, 2014

உலகை மாற்றிய மாமனிதர்


உலகில் பரவலாக பேசப்படுகின்ற பல பிரபலமானவர்களைப் பற்றி பலரும் அறிந்திருக்கின்றனர். அந்த பிரபலங்கள் என்ன செய்தார்கள் என்றே  தெரியாமலும் கூட அதிகமானவர்கள் இந்த பிரபலங்களைப் பற்றி பேசுவதால் பலரும் இவர்களை அறிந்து வைத்திருக்கின்றனர். இன்னும் அவர்களைப் பற்றி அறிய ஆவலாயும் இருக்கின்றார்கள்.

கூடுதலான பிரபலங்கள் ஆன்மீகத் தலைவராய் இருந்திருப்பார்கள். இல்லையெனில் அரசியல் தலைவராய் இருந்திருப்பார்கள்.ஆனால் சமகாலத்தில் ஒரே மனிதனால் ஆன்மீகத் தலைவராகவும்  அரசியல் தலைவராகவும் இருப்பதென்பது மிகக் கடினமான ஒன்றாகும். (இன்றைய கால மக்களும் ஆன்மீகம் ,  அரசியல் என்ற இரு வேறுபட்ட நிலைகளின் நடைமுறை சிக்கலை நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.) 

 ஆனால் இந்த உலகை மாற்றிய மாமனிதர் மிக அழகாகவும் ,  தெளிவாகவும் ,  பலருக்கு முன்மாதிரியாகவும் தன்னுடைய ஆன்மீக ,  அரசியல் வாழ்வினை வாழ்ந்து காட்டினார்கள். சரித்திர ஆசிரியர்கள் பலர் இவரை பற்றி மிக ஆச்சிரியமான விடயங்களை எழுதியுள்ளார்கள்.

மேற்கத்திய உலகம் இவரைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்துள்ளதுடன் இவரது போதனைகளை ஏற்றும் கொண்டுள்ளது. இவரது அரசியல் நெறிமுறைத்தான் முழு உலகிற்கும் சரியானது என மேற்குலகமே வியப்புற்று நிற்கின்றது.

   ஆனால் நாமோ இவரைப் பற்றி இன்னும் தெரியாதவர்களாய் இருக்கின்றோம். அவர் அதிசயமானவர்  பூமியில் சமாதானத்தை நிலை நாட்டினார்  அவர் எதிரிகளை சகோதரர்களாக்கினார். அவர் குல ,  நிற வேறுபாட்டை ஒழித்தார் ஏழைகளுக்கும் ,  அநாதைகளுக்கும் அன்பு காட்டினார் மூடர்களை நல்ல அறிஞர்களாய் மாற்றினார்.

  யேசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பேதனைகளை மறந்து மக்கள் வழிதவறிப் போகும் காலத்தில் வணங்கப்பட தகுதியான இறைவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதனை மீண்டும் ஞாபகமூட்டினார். இந்த ஏக இறைக் கோட்பாட்டினை நிலை நாட்டினார்.

 இவர் நாமம் முஹம்மத் (அவரின் மீது சாந்தி உண்டாகட்டும்) ஆகும். இவர் தாயாரின் கருவறையில் இருக்கும் போதே தந்தையை இழந்துவிட்டார். பிறந்து ஆறு வயதில் அருமை தாயையும் இழந்து அநாதையானார். தனது சிறு தந்தையின் வழியில் வளர்ந்து வாலிபனார்.

 இவர் பிறந்து வளர்ந்தது அறேபியாவின் நாகரீகமில்லாத ஒரு சமூகத்திலாகும். சிறு சண்டைகளுக்கு கூட தமக்குள் கொலை செய்து கொள்ளும் பழக்கத்தை இவர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். அத்தனை பயங்கர பாவச் செயல்களையும் இந்த மக்கள் சர்வசாதாரணமாகவே செய்து வந்தனர். அவர்களிடத்தில் மதுப்பாவனை ஒரு கௌரவச் செயலாக மதிக்கப்பட்டிருந்தது. முடமைக்கே மகுடம் சூட்டி அவர்கள் மதியிழந்து மகிழ்ந்து வந்தனர். பெண் குழந்தை பிறந்தால் அது தன் குழந்தை என்று கூட பாராமல் மண்னுக்கே இறையாக்கினர். இதை பார்த்து உலக சரித்திரமே வியந்து போனது. இப்படியும் மோசமானவர்களா? இவர்கள் என்று.

   மிக மோசமான மக்கள் மத்தியிலும் இவரோ மிக நல்லவர் என்றே அன்று பெயர் பெற்றிருந்தார். முஹம்மத் நபியவர்கள் அறேபியர்களின் உயர் குலமான குறைஷி வம்சத்தின் பனூ ஹாஷிம் குலத்தில் பிறந்தார். அக்கால மக்கள் இவரை “அஸ்ஸாதிக் (உண்மையாளர்); அல் அமீன் (நம்பிக்கையாளர்)”  என்ற வார்த்தைகளினால் சிறப்பு நாமம் கொடுத்து அழைத்தனர்.

அன்றைய அறேபிய மக்கள் புனித இஸ்லாத்தை இந்த முஹம்மத் நபியின் உருவத்தில் தான் கண்டார்கள். இந்த இறைதூதரின் நேரிய வாழ்க்கை முறைமையினால் கவரப்பட்டவர்கள் புனித இஸ்லாத்தை தமது வாழ்க்கையாகவே ஏற்றுக் கொண்டு தம்மையே மாற்றிக் கொண்டார்கள்.

  இன்றும் கூட இது பொறுத்தமாகவே தான் இருக்கின்றது. ஒருவர் இஸ்லாம் எனும் வாழும் கலையை தெரிந்துக் கொள்ள விரும்பினால் அவர் முதலாவதாக இறைவனின் தூதர் முஹம்மது நபியவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் அவசியமாய் இருக்கின்றது. மனித குலத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முஹம்மது நபியவர்கள் தனது இறைக் கொள்கைக்கு ஒரு போதும் தன் பெயரை சூட்டிக் கொள்ளவில்லை. அக்கொள்கை “இஸ்லாம்”  எனும் அறபிச் சொல்லாகவே இருக்கின்றது. அதன் அர்த்தம் சமாதானம் , கீழ்படிதல் , சரணடைதல் ஆகும். இவையாவும் யாருக்கு…? இந்த சரணடைதலும் ,  கீழ்படிதலும் , கட்டுப்படுதலும் பிரபஞ்ச படைப்பாளனாகிய ஒன்றாய் ஒருவனாய் இருக்கின்ற அல்லாஹ் ஒருவனுக்கே.

   சுமார் பதினான்கு நூற்றாண்டுகளாகியும் முஹம்மது நபிகள் நிலை நாட்டிய “ஒருவனே இறைவன் அவனே அல்லாஹ”; என்ற போதனை இன்றைக்கும் கடுகளவும் கூட்டாமலும்  குறைக்கப்படாமலும் இருப்பது ஆச்சிரியம் தான். சுமார் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னும் இந்த திருத்தூதரை அப்படியே பின்பற்றுகின்றனர். 

   இன்று சவூதி அறேபியா என எல்லோராலும் அறியப்படுகின்ற நாட்டில் மக்கா எனும் ஊரில் தான் முஹம்மது நபிகள் பிறந்தார்கள். கி.பி 571 ஆம் ஆண்டளவில் முஹம்மது நபியவர்கள் பிறக்கும் பொழுது சாதி , குல வேற்றுமை அங்கு கொடூரமாக பரவியிருந்தது.   குல வேற்றுமையினால் பலர் பகமையோடு வாழ்ந்து வந்தனர். பல யுத்தங்களும் பல காலம் அங்கு தொடரச்சியாக நடந்தன.குல வெறியே கொலை வெறியர்களை சமூகத்தின் உயர் பிரஜைகளாக மகுடம் சூட்டி மதிப்பளித்தது. இந்த சாதி ,  குல வேற்றுமையை முஹம்மது நபிகள் அடியோடு அழித்துவிட்டார்கள். இன்றும் அறபு நாடுகளிலும் ,  இஸ்லாமிய மார்க்கத்திலும் இந்த சாதி ,  குல வேறுபாடு கிடையவே கிடையாது. உயர்வு ,  தாழ்வு கிடையவே கிடையாது.

   முஹம்மது நபியவர்கள் தனது இருபதைந்தாம் வயதில் தன்னை விட வயதில் முதியவராகிய கதீஜா என்ற பெண்மணியை மணந்தார்கள். அப்போது அப்பெண்னுக்கு நாற்பது வயதாக இருந்தது. இந்த கதீஜா அம்மையார் இவரை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் இவரது நேர்மையும்  உண்மைத் தன்மையும் தான். கதீஜா அம்மையார் ஒரு செல்வ சீமாட்டியாக இருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

   முஹம்மது நபிகள் தான் சமூகத்தார் மத்தியில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்ததுடன் உண்மையாளர் ,  நேர்மையாளர் , நம்பிக்கை;ககுரியவர் என்ற நல்ல பெயருடன் வாழ்ந்து வந்தார்கள்.

   அவரது நாற்பதாம் வயதில் அவர் (மக்கா) பாரான் பாலைவனத்தில் ஹிறா எனும் மலைக் குகையில் தன்னந் தனிமையில் தொடராக இறை சிந்தனையிலும்  இறைத் தேடலிலும்  தியானத்திலும் இருந்த வேலையில் ஜிப்ரயேல் எனும் பிரதான வானவர் மூலம் அவருக்கு இறை வசனங்கள் இறங்கியது. முஹம்மது நபியவர்கள் ஞானமிக்கவரானார். முஹம்மது நபியவர்கள் இறைவனின் இறுதி தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் பெயற்றரவாளன்.

   நாற்பது வயதுவரை மிக நல்லவராகவே வாழ்ந்த முஹம்மது நபியவர்கள் அது முதல் தன்னை இறைவனின் இறுதி தூதர் என்று பிரகடனம் செய்கிறார். அவர் பாவத்தை குறித்தும் ,  நீதியை குறித்தும்  ,  நியாய தீர்ப்;பு நாளை குறித்தும் மக்களை கண்டித்து உணர்த்தினார். சகல சத்தியங்களுக்குள்ளும் மக்களை வழிநடாத்தினார்.

   இவருக்கு அருளப்பெற்ற இறை செய்தியின் தாக்கம் பலரை நேர்வழிக்கு அழைத்துச் சென்றது. பலரை நல்லவர்களாகவும் ,  உண்மையாளர்களாகவும் மாற்றியது. பலருக்கு பிறப்பின் உண்மையை உணர்த்தியது. அத்தோடு முழு உலகிற்கும் பேரொளியாகவும் ,  அருளாகவும் அமைந்தது. அந்த இறை செய்தி தான் “வணங்கி வழிபட தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் கிடையாது. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் இறுதி தூதரும் ஆவார்” என்பதாகும்.

   இந்த இறைச்செய்தி முஹம்மது நபியவர்களுக்கு முன்பும் அருளப்பட்டிருந்தது. இச்செய்தியை சொன்ன முன்னைய தீர்க்கதரிசிகளான இப்றாஹீம் ,  தாவூத் ,  சுலைமான் ,  மூஸா , ஹாரூன் ,  ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) போன்றோர் மிக தெளிவான போதனைகளை செய்திருந்தும் மக்களோ காலத்துக்கு காலம் போதனைகளை மறந்து வழி தவறிப் போனார்கள். தூதர்களையே கடவுளாக்கி வழிபட்டு வழி தவறிப் போய் வேறு விதமாய் புது மார்க்கம் கண்டார்கள்.

   உண்மையான உறுதியான இறைச் செய்தியை முஹம்மது நபியவர்கள் மீண்டும் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறார்கள். இது புதுக் கொள்கை அல்ல. இஸ்லாம் என்பது முன்னைய தீர்க்கதரிசிகளின் இறைக் கொள்கைதான்.

   அந்நாட்களின் அறேபிய மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ஒரு நாளைக்கு ஒரு சிலை என வருடத்தற்கு 360 சிலைகளை வணங்கினார்கள். அல்லாஹ் ஒருவனே வணங்கப்பட வேண்டிய கடவுள் எனும் இறைச் செய்தியின் பின் இச்சிலை கொள்கையை விட்டும் அந்த மக்களை மீட்பதற்கு முஹம்மது நபியவர்கள் பெரும் துயரங்களையும் ,  துன்பங்களையும் அனுபவித்தார்கள். இவரை நல்லவர் என்று சொன்ன அதே சமூகம் மிக மோசமானவர் என்று சொல்வதற்கும் தயங்கவில்லை.

   வட்டி வியாபாரம் ,  சூதாட்டம் , விபச்சாரம் , கொலை , கொள்ளை,  பொய் , ஏமாற்று போன்ற மாபெரும் பாவச் செயல்களில் இருந்து அம்மக்களை மீட்டெடுத்தார்கள். இவர் இதுவரை மீட்டெடுத்த நல்லவர்களுடன் தனது போதனைகளை தொடர்ந்து மக்கா நகரில் செய்ய முடியாமற் போனது. கைதர் (கேதர்) வம்சத்தார் இந்த முஹம்மது நபியை பிறந்த மன்னை விட்டு துரத்தினர். எனவே தன் மக்களோடு மதீனா (தேமா) நகரை நோக்கி பயணமானார்கள். மதீனா (தேமா) இவர்களை வரவேற்றது. இவர்களுக்கு அடைக்கலம் கிடைத்தது. (அப்பமும் தண்ணீரும் கிடைத்தது)

   மக்காவில் ஆன்மீகத் தலைவராக மட்டுமே இருந்த முஹம்மது நபியவர்கள் (தேமா) மதீனாவின் பக்கம் குடிபெயர்ந்த பின் அரசியல் தலைவராகவும் , ஆட்சித் தலைவராகவும் மாறுகின்றார்கள். இதைத் தொடர்ந்து பல யூதர்களும் ,  கிறிஸ்தவர்களும் இஸ்லாத்திற்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். வணங்கி வழிபட தகுதியான இறைவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என உறுதிக் கொண்டனர்.

   முஹம்மது நபியவர்கள் ஒரு ஆட்சித் தலைவராக இருந்தும் கூட மிகமிக எளிமையான ஒரு வாழ்வையே வாழ்ந்து வந்தார்கள். எவ்விதமான பகட்டுகளும் இல்லாமல் பக்கத்தில் எந்த பாதுகாவலர்களும் இல்லாமல் அரண்மனை ,  சிம்மாசனம் எதுவுமே இல்லாமல் சராசரி ஒரு சாதாரண மனிதனைப் போலவே வாழ்ந்தார்கள். உலகில் எந்த தலைவரும் இவ்வாறு இருந்திருப்பாரா..? 

   அதனால்தான் அன்று அம்மக்கள் தன் மனைவி , பிள்ளைகள் , தாய் ,  தந்தை , உற்றார் உறவினர்கள் ,  சொத்து சுகம் அனைத்தையும் விட இம்மகத்தான மனிதரை உயிராய் நேசித்தார்கள். இன்றும் அது போலவே இவரை நேசிக்கக் கூடிய பல கோடிப் பேர் காணப்படுகின்றனர்.

   இவரது உணவு விடயத்தை கவணித்து பார்த்தவர்கள் யாரும் கண் கலங்காமல் இருக்கமாட்டார்கள். அந்தளவிற்கு ஒரு சாதாரண மனிதனை விட மிக ஏழ்மையாகவே உணவு உட்கொண்டார்கள். சில வேலை உணவின்றி மூன்று நாட்கள் தொடர் பட்டினியால் வாடினார்கள். இவர் வயிறார உணவு உட்கொண்டது மிக அபூர்வமாகவே இருந்தது. ஒரு ஆட்சித் தலைவர் இவ்வாறு ஏழ்மையாக வாழ்ந்ததை எங்கே நாம் காண முடியும..?!. ஒருவரை கூட காட்ட முடியாது. தன் கையில் ஆட்சியின் முழு அதிகாரமும் இருந்தால் இவ்வாறு யாரால் வாழ முடியும்..!? ஆனால் அம்மாமனிதரால் முடிந்தது. காரணம் உலகாலும் உண்மை இறைவனின் இறுதித் தூதராய் இவர்கள் இருந்தார்கள். அந்த இறைவன் அவரை வழி நடாத்தினான். அல்லாஹ்வின் வழிகாட்டல் இவரை உறுதி பெறச் செய்தது. 

   முஹம்மது நபி தான் இறைவனின் இறுதித் தூதர் என பல மாற்றுமத அறிஞர்களும் இன்று ஏற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சிலர் மட்டும் பிழையாக சிந்திப்பதையும் நாம் காணக் கூடியதாய் இருக்கின்றது. அவர்கள் ஒரு விடயத்தை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கே உண்மை புரியும்.

   தன் சமூகத்தில் நாற்பது வயது வரை எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் நம்பிக்கையாளர் ,  உண்மையாளர் என்று பெயர் எடுத்தவர். திடீரென தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றோ இறைவனின் தூதர் என்றோ கூறி தன் பெயரை கெடுத்து கொள்ள ஒரு போதும் விரும்ப மாட்டார். பெரும்பான்மை சமூகமே ஒருவரை மிக நல்லவர் என நம்பியிருக்கும் போது அம்மனிதர் தன் அந்தஸ்தை , புகழை இன்னும் உயர்த்திக் கொள்ள, அதிகரித்துக் கொள்ள பார்ப்பாரேயல்லாமல் புதுமையான விடயங்களை முயற்சிக்கமாட்டான் என்பது நம் அனைவருக்கும் மிக தெளிவாக புரிகின்றது.

   ஆனால் முஹம்மது நபியவர்களோ உண்மையை சொல்ல ஒரு போதும் தயங்கியதில்லை. சத்தியம் இது தான் என தெளிவாக அவர் அறிந்து கொண்டவுடன் அதை மக்கள் மத்தியில் போதிக்க ஆரம்பித்தார். முஹம்மது நபியவர்கள் ஒரு புதிய மார்க்கத்தை அறிமுகப்படுத்த வந்திருந்தால் அவர் இயேசுவையும் (ஈஸா) மோஸசையும் (மூஸா) பற்றி அன்றைய மக்களிடம் உயர்வாகவும் கன்னியமாகவும் போதித்திருக்கத் தேவையில்லை. முன்னைய நபிமார்களான தூதர்களான இவர்களை நம்புவது மிக அவசியம் என்றும் இவர்களை நம்பிக்கை கொள்ளாமல் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது என்றும் இவர் தெளிவாக போதித்தார். இதனை இஸ்லாத்தின் அடிப்படையாகவும் வழியுறுத்தினார்.

   பிழையாக சிந்திப்போர் சற்று சிந்திக்க வேண்டும். பொய்யான ஒரு மனிதன் தன்னை இறைவனின் தீர்க்கதரிசி என மிக நீண்ட காலம் வாதிட முடியாது. வாழ்ந்து காட்டவும் முடியாது. அவர் காட்டிய அந்த போதனை வழியும் நீண்டகாலம் நில்லாது. அன்றைய காலத்திலேயே பலர் இந்த மகத்தான மனிதர் மேல் பல அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் கட்டவிழ்த்து விட்டார்கள். ஆனால் அவரோ நீண்ட பொறுமையுடன் இருந்தார்கள். காலப்போக்கில் இவருக்கு அநீதி இழைத்தவர்களே இவரது உண்மைத் தன்மையை கண்டு இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். இன்றும் அதையே நாம் காண்கின்றோம். 

   ஒருவர் தன்னை ஒரு இறைத் தூதர் என பொய்யாக பெறுமைப்படுத்தியிருந்தால் அவரது இறைப் போதனையில் உண்மையிராது. அவர் நடையில் நீதம் இராது. அவர் வாழ்வில் முன்மாதிரி இராது. ஆனால் இந்த மகத்தான மனிதர் முஹம்மது நபியவர்கள் (அவரின் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டும்) அவர்களோ தனது போதனைகளை ,  தனது வழிகாட்டலினை கோடான கோடி மக்கள் இன்றைக்கும் கைக்கொள்ளக் கூடிய வகையில் அழகாகவும் ,  இலகுவாகவும் , எளிமையாகவும் காட்டித் தந்திருக்கின்றார்கள். இஸ்லாத்தின் நம்பகத் தன்மையில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. 

   இவர் இறைவனின் உண்மையான தூதர் என்பதற்கு இன்னும் பல சான்றுகளும் இருக்கின்றன. இவரது உயர்ந்த குறிக்கோளுடனான போதனைகளுக்கு முன்னால் அன்றைய அறபி கவிஞர்கள் எல்லாம் தோற்றுப் போனார்கள். இவரது இறை போதனைகளுக்கு முன்னால் பல நாவன்மையுள்ளவர்களும் தோற்றுப் போனார்கள். முஹம்மது நபியவர்களின் வசீகர போதனை அனைவரையும் செவியுறச் செய்தது. இதனால் அறபுலகமே வியந்தது. காரணம் அந்த அளவிற்கு அவர்களின் சொல்வன்மை நிகரற்றதாய் இருந்தது. அவரது சொற்பொழிவுக்கு நிகராக ஒரு சொற்பொழிவையேனும் உருவாக்க ஒருவாராலும் முடியாமல் போனது. இன்றும் இது பெறும் சவாலாகவே உள்ளது.

   சந்தேகம் கொள்வோர் பலர் தெளிவு பெற்றிருப்பார்கள் என இப்போது விளங்குகின்றது. இதன் பிறகு ஒருவருக்கு சத்தியம் தேவையெனின் அவர் முஹம்மது நபியவர்களைத் தான் பின்பற்ற வேண்டும். அவர் வழி சத்தியமாய் இருக்கின்றது. அவர் சத்தியத்தையே சரியான வழியாக போதித்தார்.

   முஹம்மது நபிகள் (அவரின் மீது சாந்தி உண்டாகட்டும்) ஒரு சாதாரண மனிதரே. ஆனால் ஓர் உன்னத மகத்தான குறிக்கோளுக்காக உழைத்த மகத்தான மனிதர். அவரது போதனைகளில் பிரதான போதனை ஒரே ஒரு இறைவனை வணங்குமாறு முழு மனித குழைத்தையும் அழைப்பதும் , அந்த அல்லாஹ்வின் கட்டளைப்படி நேர்மையான ,  தூய்மையான , உயர்ந்த ஒழுக்க பண்புகள் அடங்கிய சமூகத்தை தனது முன்மாதிரி வாழ்வின் மூலம் உருவாக்குவதுமே ஆகும்.

   இவரது போதனைகள் வெறும் வாய் வார்த்தைகளாய் மட்டும் இருக்கவில்லை. போதனைகள் யாவும் செயலுருவில் மலர்ந்தது. செயற்படுத்த கூடிய பல பேர் அவர் கண் முன்னே செயலுருவாய் திகழ்ந்தார்கள். அவரது போதனைகள் இன்றைக்கும் பல்லாயிரக் கணக்கான மாந்தர் வழமாய் வாழும் வாழ்க்கை நெறியாய் இருக்கின்றது.

   அன்பின் நண்பர்களே! இதுவரை முஹம்மது நபிகள் (அவரின் மீது சாந்தி உண்டாகட்டும்) பற்றி பல விடயங்களை நாம் பார்த்தோம். புகழையும் ,  மரியாதையையும் இயல்பிலேயே விரும்பாத அதிசய மனிதராய் அவர் இருக்கின்றார். இங்கு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் முக்கியமான ஒரு விடயமும் இருக்கின்றது. நிச்சயமாக அனைவரும் சற்று நிதானத்தோடு கவணித்து பார்க்க வேண்டும்.

   முஹம்மது நபியவர்கள் பலரால் போற்றப்பட்டும் சரித்திரம் அவரை உயர்வாய் பேசியும் , அறிஞர்கள் பலர் அவர் புகழ் பாடியும் ,  அன்றைய அறபுலகமே வியந்து பாராட்டியும் ,  பல அற்புதங்களை அவர் செய்திருந்தும் , உலகை மாற்றிய மாமனிதராய் அவர் இருந்தும் ஒரு போதும் அவர் தன்னை கடவுளின் சாயல் என்றோ , அவதாரம் என்றோ , இறைமகன் என்றோ , இறை அம்சத்தில் ஒன்றென்றோ கூறவே இல்லை. மாறாக அவர் சொன்னது “நான் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் இறுதி தூதரும் , அல்லாஹ்வின் அடிமையும் ஆவேன்” என்பதேயாகும்.

   நண்பர்களே! இஸ்லாம் ஓர் உன்னத மார்க்கம் ,  கலப்படம் இல்லாத தூய மார்க்கம் என்பதற்கு இதையன்றி வேறென்ன ஆதாரம் தேவை. உலக மாந்தருக்கு நற்போதனை செய்த எத்தனையோ நல்லவர்களையெல்லாம் இன்று கடவுள் என மக்கள் நினைத்து பூத்தூவி ,  தீப ஆராதனை செய்து.  அவர்களுக்கு பலவகை உருவச் சிலைகளை செய்து வணங்கி வழிபடுவதையெல்லாம் நாம் இன்றும் கண்கூடாக கண்டுக் கொண்டுத்தானே இருக்கின்றோம். இவை தனிமதின வழிபாடுகளாக ஆரம்பித்து பின்னர் அதனால் ஒரு மக்கள் கூட்டமே வழிகெட்டு பிழையான வழியில் செல்லக் கூடிய மதங்களாக காலப் போக்கில் ஆகிவிட்டன.

   முஹம்மது நபியவர்களோ இந்நிலமைக்கு முற்றிலும் மாறுபட்டவர்களாக தன்னை இறைவனுடைய அந்தஸ்த்திற்கு சமனாக்க வேண்டாம் என தன் தோழர்களிடம் கண்டிப்பாக கூறி விட்டார்கள். தன்னை கண்டு யாரும் எழுந்து நிற்பதையே இவர்கள் விரும்ப வில்லை. இஸ்லாம் இவ்வளவு தெளிவாகவும் தூய்மையாகவும் இருப்பதற்கு இதுவே காரணம். 

   இன்னும் சிந்தித்து பாருங்கள்! முஸ்லிம்கள் முஹம்மது நபியின் மீது தம் உயிரையே வைத்திருக்கின்றனர். அவரின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றுகின்றனர். அவருக்கு அவதூரு சொல்லும் போதும் , அவருக்கு எதிராக கேலிச் சித்திரங்கள் வரையும் போதும் கவலையும் விசனமும் அடைகின்றனர். ஆனால் அவ்வளவு அன்பு வைத்திருந்தும் முஸ்லிம்கள் அவரின் உருவப்படத்தையோää சிலையையோ அமைக்கவில்லை. இஸ்லாம் ஓர் உண்மை இறை மார்க்கம் என்பது இதிலிருந்தும் தெளிவாகின்றது.

   நல்லுள்ளம் கொண்ட நல்லவர்களே! சுமார் 1432 வருடங்கள் ஆகியும் இந்த மகத்தான மனிதரது வார்த்தைகளும் , அவரது வாழ்க்கையும் நம்மிடம் அதே வடிவில் கிடைத்திருக்கின்றது. அன்றைய மக்களின் அநேக பிரச்சினைகளை இந்த தூய்மையான கொள்கையும் ,  வழிகாட்டலும் தீர்த்து வைத்தன. இன்றும் அது போலவே பலரது பிரச்சினைகளையும் , துன்பங்களையும் இந்த கொள்கை தீர்த்து வைக்கின்றன. ஏன்….? உங்களது பிரச்சினைகளையயும் இந்த புனிதமான ,  தூய்மையான வாழ்ககைக்கு சரியான கொள்கை தீர்த்து வைக்கும்.

   அறிவுள்ளோர்களே! நீங்கள் இன்று முதல் இந்த மகத்தான மனிதரைப் பற்றி சற்று ஆராய்ந்து தேடிப் பாருங்கள். நாம் மேலே சொன்னவைகள் யாவும் உண்மை தானா என்பதை நீங்களே நடு நிலமையோடு ஆராய்ந்து பாருங்கள். இன்று வரையிலும் நீங்கள் இவரைப் பற்றி அறியாதவராய் இருந்தால் சற்றேனும் தாமதிக்காமல் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.

   நபிகள் முஹம்மது (அவரின் மீது சாந்தி உண்டாகட்டும்) தனது கடைசி காலத்தை மதீனா நகரிலேயே கழித்தார்கள். ஆனால் தான் பிறந்த ஊரான மக்காவை எதிரிகளின் துன்புருத்தல்களால் கவலையோடு பிரிந்து வந்தவர்கள் பின்பு அவ்வூரையும் கைப்பற்றினார்கள். ஆனால் அவ்வூரில் அவருக்கு அநியாயம் இழைத்த மக்களுக்கு பொது  மன்னிப்பு வழங்கினார்கள். அவர் பலரை மன்னித்தார்.

   மனிதனாக பிறந்த அனைவரும் மரணித்தே ஆகவேண்டும். அது போலவே முஹம்மது நபியவர்களும் கடைசி ஹஜ் கடமையை நிறைவேற்றி மதீனா தேசம் திரும்பியது முதல் கொஞ்சம் கொஞ்சமாக நோய்வாய்ப் பட்டார்கள். ஒரு திங்கட் கிழமை நாளில் (ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதம் 12ஆம் நாள்) அவர்கள் மரணமடைந்தார்கள். மிக்க கண்ணியமிக்க , சர்வ வல்லமையுள்ள அந்த ஏக அல்லாஹ்விடமே அவர்கள் திரும்பி சென்றுவிட்டார்கள். அப்போது அவர்கள் 63 வயதுடையவராய் இருந்தார்கள்.

   இச்செய்தி நம்மையே கவலையில் ஆழ்த்துகின்றது. அது போல அன்றைய அவரது அருமை தோழர்களும் உணர்விழந்து மயங்கினார்கள். அன்னாரது மரணச் செய்தி கேட்டது முதல் கண்ணீர் சிந்தி கவலை கொண்டார்கள். உலகமே இருண்டு போனதாய் உணர்ந்தார்கள். அன்று முதல் கவலை மிகுதியால் வாழ்க்கையே கசந்து போனது அந்த தோழர்களுக்கு.

   முஹம்மது நபியின் மேல் தம் உயிரையே வைத்திருந்தவர்களின் அன்றைய நிலையை வார்த்தைகளினால் விளக்க முடியாது. முஹம்மது நபியவர்கள் மரணித்தார்கள். ஆனால் அவர் நமக்கு கொண்டுவந்த தூது செய்தி மரணிக்க வில்லை. அந்த தூதிற்கும் மரணமில்லை. 

   உலகத்திற்கே நலவாகவும் பெறும் நன்மையாகவும் இருக்கின்ற அந்த தூதின் நற்செய்தி “லாயிலாஹ இல்லல்லாஹ{ முஹம்மதுர் ரஸ{லுல்லாஹ்”. அதன் அர்த்தமாவது “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை  முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என்பதாகும்.

                                                        முற்றும்.

 

 
 


 
 

 

Download As PDF

Thursday, December 18, 2014

சூபிசம் (சூபித்துவம்) என்றால் என்ன? (WHAT IS SUFISM - TAMIL)




எழுதியது - மெயில் ஒப் இஸ்லாம் ஆசிரியர் குழு


இஸ்லாமிய மார்க்கமானது வெளிப்புற சட்டங்களையும்,  ஆன்மீகத்துறையையும் சேர்த்து ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டம் ஆகும்.  ஒருவன் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை உண்டான எல்லா நிலைகளுக்கும் தேவையான சட்டத்திட்டங்களை சொல்லி தந்துள்ள இஸ்லாம், அதே போல எவ்வாறு ஆன்மீகம் மூலம் படைத்த இறைவனை அறிவது, அவனை அடைவது என்றும் சொல்லி தந்துள்ளது.


சூபித்துவம் (ஸூபித்துவம்) என்பது இஸ்லாத்தின் ஆன்மீக பகுதியை குறிக்கிறது. இந்த சூபித்துவம் “தசவ்வுப்” என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
ஒருநாள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் தங்களது தோழர்களோடு அமர்ந்து இருந்தார்கள். அப்போது ஒருவர் அங்கே வந்தார். அவரை அதுவரை அந்த ஊரில் யாரும் பார்த்தது கிடையாது. புதுமுகம். வந்தவர் நபிகள் நாயகத்தின் (ﷺ) முன்னாள் வந்து நெருங்கி அமர்ந்தார்.

பின்னர் நபிகள் நாயகத்திடம் (ﷺ) “முஹம்மத் நபியவர்களே! இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்கள் “வணக்கத்துக்குரிய நாயன் இறைவனை அன்றி வேறு நாயன் இல்லை என்றும் முஹம்மத் நபியவர்கள் இறைவனின் திருத்தூதர் என்றும் நம்பிக்கை கொள்ளுதல், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை சரிவர நிறைவேற்றி வருதலும்தான் இஸ்லாம்” என்று கூறினார்கள். அதற்கு வந்த அந்த மனிதர் “ஆம், நீங்கள் உண்மையை உரைத்தீர்கள்” என்று கூறினார்.

பின்னர் “ஈமான் (நம்பிக்கை) என்றால் என்ன? என்று வினவினார். அதற்கு நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்கள் “இறைவனையும், வானவர்களையும், இறைவனால் அருளப்பட்ட இறைவேதங்களையும், இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர்களையும், இறுதி நாளையும், நன்மை தீமை யாவும் இறைவனின் நாட்டப்படியே நடைப்பெறுகிறது என்னும் விதியையும் நம்புதலே ஈமான் (நம்பிக்கை) என்று கூறினார்கள். அதற்கு வந்த அந்த மனிதர் “ஆம், நீங்கள் உண்மையை உரைத்தீர்கள்” என்று கூறினார்.

கடைசியாக “இஹ்ஸான்” (சம்பூரணத்தன்மை) என்றால் என்ன? என்று வினவினார். அதற்கு நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்கள் “இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்க முடியாவிட்டால், அவன் உன்னை பார்க்கிறான் என்ற நிலையில் வணங்க வேண்டும் இதுதான் இஹ்ஸான்” என்று கூறினார்கள். அதற்கு வந்த அந்த மனிதர் “ஆம், நீங்கள் உண்மையை உரைத்தீர்கள்” என்று கூறினார்.

பக்கத்தில் உட்கார்ந்து இருந்த நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்களின் தோழர்களுக்கு மிக்க ஆச்சர்யமாக இருந்தது, வந்தவரே கேள்வியும் கேட்டுவிட்டு கூறிய பதிலுக்கு சரியாக சொன்னீர்கள் என்று சரி கண்டுவிட்டும் போகிறாரே என்று ஆச்சர்யத்துடன் அமர்ந்து இருந்தனர்.

வந்த மனிதர் சென்று விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்கள் தங்களது தோழர்களின் ஆச்சர்யத்தை புரிந்து சொன்னார்கள். வந்தவர் யார் தெரியுமா? ஜிப்ரீல் என்று சொல்லக்கூடிய வானவர்களின் தலைவர். உங்களுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுப்பதற்காக இறைவன் அவர்களை அனுப்பி அவர் மூலம் கேள்வி கேட்டு கற்றுக்கொடுக்கிறான் என்று கூறினார்கள்.

இதன்படி, இஸ்லாமிய மார்க்கம் என்னும் கோட்டை மூன்று தூண்களை கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் என்பவையே அவை. இந்த மூன்று அடிப்படைகளை கொண்டு உருவாக்கப்பட்ட மூன்று விடயங்கள்தான் :

1. ஷரீஆ எனப்படும் இஸ்லாமிய சட்டம்
2. அகீதா எனப்படும் இஸ்லாமிய கொள்கை
3. சூபித்துவம் எனப்படும் இஸ்லாமிய ஆன்மீகம்


ஷரீஆ எனப்படும் இஸ்லாமிய மார்க்க சட்டம்

இது வெளிப்புற சட்டங்களை அடிப்படையாக கொண்டது. உதாரணமாக: எவ்வாறு தொழுவது? தொழும்போது என்ன ஓதுவது? எவ்வாறு நோன்பு நோற்பது? கொலை செய்தால் என்ன தண்டனை?, இது போன்ற வணக்கம், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, வியாபார கொடுக்கல் வாங்கல்கள், குற்றவியல் தண்டனை அனைத்துக்குமான வெளிப்புற சட்டத்திட்டங்கள் பற்றிய அறிவுதான் ஷரீஆ எனப்படும் இஸ்லாமிய மார்க்க சட்டம்.


அகீதா எனப்படும் இஸ்லாமிய கொள்கை

இது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விடயம். மாறுப்பட்ட பல்வேறு நம்பிக்கைகளுக்கு மத்தியிலும் கொள்கைகளுக்கு மத்தியிலும் சரியான நம்பிக்கையை, கொள்கையை பின்பற்றுதலை இது குறிக்கும். உதாரணமாக – இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையானது இறைவனுக்கு உடலோ உருவமோ இல்லை என்பதாகும். ஆனால், ஒரு முஸ்லிம் இறைவனுக்கு உருவம் உண்டு, உடல் உண்டு என்று நம்பிக்கை கொண்டால், பெயரளவில் அவன் முஸ்லிமாக இருந்தாலும் அவன் உண்மை முஸ்லிமாக கருதப்பட மாட்டான்.


சூபித்துவம் எனப்படும் இஸ்லாமிய ஆன்மீகம்

இது முழுமையாக உள்ளம் சம்பந்தப்பட்ட ஆன்மீக வழிமுறையாகும். எவ்வாறு உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனை அறிவது, அவனை வணங்குவது, அவனை அடைவது? என்று இறைவனை அடைவதற்கான வழிக்காட்டல்களை சொல்லி தரும் அறிவுதான்தான் சூபித்துவம் எனப்படுகிறது.


அதன்படி, மேல் சொன்ன மூன்று விடயங்களும் ஒழுங்காக ஒன்று சேர்ந்தாலே ஒருவன் உண்மை முஸ்லிமாக ஆகலாம்.

உதாரணமாக - தொழுகையை எடுத்துக்கொள்வோம். ஒரு முஸ்லிம் தினமும் ஐந்து நேரம் தொழுவது கடமை. தொழுவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. முதலில் நிற்க வேண்டும், பின்னர் தரையில் நெற்றியை வைத்து வணங்க வேண்டும், ஒவ்வொரு நிலையிலும் சில வசனங்களை வாயால் ஓத வேண்டும். இவை தான் ஷரீஆ என்னும் வெளிப்புற சட்டங்கள்.

அடுத்து தொழும் மனிதன் சரியான நம்பிக்கையோடும் கொள்கையோடும் தொழவேண்டும். இறைவனை தொழுகிறேன் என்று ஆரம்பித்து விட்டான். ஆனால் அவனோ இறைவனுக்கு உருவம், உடல் உண்டு என்று நம்பிக்கை கொண்டவன். எனவே, இவன் என்ன தொழுதாலும் அதில் எவ்வித பலனும் இல்லை. எனவே, இதுதான் அகீதா என்னும் இஸ்லாமிய கொள்கை.

அடுத்து, ஒருவன் தொழுகையை ஆரம்பித்துவிட்டான். அவனது உடல் தொழுகிறது. ஆனால் அவனது உள்ளமோ இறைவனை நினைக்காமல், வேறு ஏதேனும் ஒன்றை நினைத்து கொண்டு இருக்கிறது. தொழுகை என்பது இறைவனை ஞாபகம் செய்து இறைவனுடன் ஒருவன் செய்யும் உரையாடல் ஆகும். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால், அப்போது கூட இறைவனை நினைக்காமல் வேறு ஏதேனும் நினைவில் இருந்தால், அந்த தொழுகை வெறும் சடங்கு, சம்பிரதாயமானதே தவிர அவன் உண்மையில் இறைவனை வணங்கவில்லை. எனவே தூய உள்ளத்தோடு வேறு சிந்தனைகள் இன்றி இறைவனை மட்டும் நினைத்து தொழுவதுதான் சூபிசம்.


எனவே மேலே சொல்லப்பட்ட மூன்று காரணிகளையும் ஒரு மனிதன் முழுமையாக பின்பற்றும்போதுதான் அவன் பூரணத்துவம் பெற்ற ஒரு முஸ்லிமாக மாறுகிறான். பல்வேறு சிறப்புகளை பெற்றுக்கொள்கிறான். அதில் முக்கியமானது சூபித்துவம் பற்றிய அறிவு.


இஸ்லாத்தில் சூபிசம்

இன்று முஸ்லிம்கள் மறந்த, ஆனால் மிக தேவையான ஒரு அறிவுதான் இந்த சூபித்துவம். இதுதான் இஸ்லாத்தின் ஆணிவேர். ஆம், இஸ்லாம் என்பது வெறும் வெளிப்புற சடங்கு சம்பிரதாயம் அல்ல. உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனை அடைவதுதான் அதன் நோக்கம். தொழுகை, நோன்பு போன்ற எல்லா வணக்க வழிப்பாடுகளும் அந்த நோக்கத்தை அடைவதற்கான கருவிகளே.

ஆனால், இன்றைய முஸ்லிம்கள் இந்த வணக்க வழிப்பாடுகளை வெறுமனே சடங்கு சம்பிரதாயமாக மாற்றி கொண்டனர். அதன் உண்மை நோக்கங்களை புரிந்து கொள்ளவில்லை. சூபித்துவ அறிவை பெற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டனர். அதன் விளைவுதான், இன்று முஸ்லிம் சமுதாயம் சந்திக்கும் எல்லா விதமான சீரழிவுகளும் ஆகும்.


சூபிசம் போதிப்பது என்ன?

இஸ்லாமிய ஆன்மீகத்துறையான சூபித்துவம் போதிப்பது இறைவனை அடைவதற்கான சகல வழிமுறைகளையும் ஆகும். இறைவனை அடைவது என்பது அவ்வளவு சாதாரண விடயம் அல்ல. முதலில் இறைவனின் நேசத்தை பெறுதல் வேண்டும். அதற்கு இறைவனை நேசிக்க வேண்டும். அப்படி இறைவனின் நேசத்தை பெற முதலில் இறைவனின் பிரதிநிதியான மனிதர்களை நேசிக்க வேண்டும். ஏனைய படைப்புகளை நேசிக்க வேண்டும். அவர்களுக்கு நன்மை செய்து, கெடுதல் செய்யாமல் வாழுதல் வேண்டும்.

பின்னர் உள்ளத்தை பரிசுத்தப்படுத்துதல் வேண்டும். உள்ளத்தில் உள்ள தீய அழுக்கான எண்ணங்களை நீக்கி, உள்ளத்தளவில் எப்போதும் நல்லதையே நாடி, உலக ஆசாபாசங்களை உள்ளத்தை விட்டும் நீக்கி இறைவனின் நேசத்திற்கு மட்டுமே உள்ளத்தில் இடம் கொடுக்க வேண்டும்.

இப்படியாக சூபிசம் அன்பையும் அமைதியையும் போதிக்கிறது. எந்நேரமும் உள்ளத்தை இறைவனின் நினைப்பில் வைத்திருத்தல், இறைவனை தியானித்தல், நல்ல குணங்களை, நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ளல், மதம், சாதி, இன, நாடு வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் அன்பு காட்டுதல், உதவி செய்தல், ஆனால் தீயவர்களால் சத்தியத்திற்கு பாதகம் ஏற்படும்போதும், சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படும்போதும் உயிரை கொடுத்தேனும் தீயவர்களுடன் யுத்தம் செய்து சத்தியத்தை பாதுகாத்தல் (இதுவே உண்மையான ஜிஹாத்), மக்களுக்கு நல்லது செய்தல், நல்லதை சொல்லிக்கொடுத்தல் போன்ற போதனைகளையே சூபித்துவம் போதிக்கிறது. அதாவது இஸ்லாம் போதிக்கிறது.


சூபிச அறிவை பெறும் முறைகள்

சூபித்துவ கல்வியானது மார்க்கச்சட்ட கல்வியை போன்று வெறும் புத்தகத்தின் வாயிலாகவோ அல்லது வெளிப்புற அறிவின் (Explicit Knowledge) மூலமாகவோ கற்றுக்கொள்வதை விட உள்ளத்திலிருந்து உள்ளத்திற்கு (Heart to Heart) என்ற முறையிலேயே பெரும்பாலும் கற்பிக்கப்படுகிறது.

நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்களின் தோழர்களில் ஒருவரான அபூஹுரைரா கூறினார்கள் (அல்லாஹ் அவர்களை பொருந்திகொள்வானாக)

“இரண்டு விதமான கல்விகளை நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். ஒன்றை மட்டுமே வெளியில் சொன்னேன், மற்றதை கூறினால் என் தொண்டை சங்கு வெட்டப்பட்டுவிடும்” என்பதாக (நூல் - புகாரி)

அந்த இரண்டு விதமான கல்விகள் தான் வெளிப்புற மார்க்க சட்ட கல்வியும், ஆன்மீக சூபிச கல்வியும் ஆகும் என்று மார்க்க மேதைகள் விளக்கம் தருகின்றனர். 

மார்க்க சட்ட கல்வி இன்றளவிலும் பகிரங்கமாக போதிக்கப்படுகிறது, கற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், ஆன்மீக கல்வி அவ்வாறு அல்ல. அதற்கு என்று ஒரு சிறப்பான முறை இருக்கிறது.

நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்களிடம் இருந்து அவர்களது தோழர்கள் இக்கல்வியை முறைப்படி கற்றுக்கொண்டனர். அவர்களிடம் இருந்து அவர்களுக்கு பின் வந்தவர்களும், அவர்களிடம் இருந்து அவர்களுக்கு பின் வந்தவர்களும் என்று ஒவ்வொரு சமுதயாமாக வாழையடி வாழையாக இக்கல்வி முறைப்படி போதிக்கப்பட்டு வருகிறது.


தரீக்காக்கள் என்றால் என்ன?

இப்படி நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்களிடம் இருந்து இன்று வரை இந்த சூபிச அறிவுகள் வந்து சேர்ந்த அத்தொடரே தரீக்கா (வழி) என்று அழைக்கப்படுகிறது.

இஸ்லாத்தில் பல தரீக்காக்கள் உள்ளன. காதிரியா, ரிபாயியா, சிஸ்தியா, நக்ஷபந்தியா, ஷாதுலியா போன்ற இன்னும் பல தரீக்காக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் உண்மையில் இஸ்லாமிய ஆன்மீக பள்ளி பாசறைகளே.

அதாவது,சூபித்துவ கல்வியை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களிடம் இருந்து இன்று வரை கொண்டு வரக்கூடிய ஆன்மீக சங்கிலி தொடர்களே ஆகும். இவை பல கிளைகளாக பிரிந்து இன்றளவும் உலகளவில் இஸ்லாமிய ஆன்மீக கல்வியை மக்களுக்கு போதித்து கொண்டு உள்ளன.

இதன்படி, ஒவ்வொரு தரீக்க்காகளிலும் பல ஆன்மீக தலைவர்கள் அதாவது, ஆன்மீக ஆசான்கள் இருப்பர். இக்கல்வியை கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவன் அவர்களில் ஒருவரிடம் மாணவராக ஆகி அவர் மூலம் இக்கல்வியை முறைப்படி கற்றுக்கொள்கிறான். அதற்காக அவரிடம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளலே அரபி மொழியில் "பைஅத் செய்தல்" என்று அழைக்கப்படுகிறது. அந்த ஆன்மீக ஆசானை "முர்ஷித்" அல்லது "ஷெய்க்" என்றும் மாணவனை "முரீத்" என்றும் சொல்லப்படுகிறது.


சூபிசம் மூலம் இறைவனை அடைவது எப்படி?

ஒரு முர்ஷித் (ஆசிரியர்) தன்னிடம் பைஅத் செய்துள்ள மாணவனை இறைவனிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக வழிகாட்டுவார். அவனுக்கு தேவையான அறிவுரைகள், வழிக்கட்டல்களின் மூலம் அவனை நேர்வழிக்கு கொண்டு செல்லுவார்.

அதேநேரம், மாணவனின் உள்ளத்தை பரிசுத்தப்படுத்தவும், இறை சிந்தனையை அதிகப்படுத்தவும் அம்மாணவனுக்கு முதலில் சில திக்ர்களை (வார்த்தைகளை) சொல்லிக்கொடுத்து அதனை ஓதி வரும்படி கூறுவார். அதேபோல அவர் கூறும் கட்டளைகளை ஒரு மாணவன் முறைப்படி செய்து வருவான். அவை யாவும் முழுக்க முழுக்க அவனை ஒழுக்க சீலனாக ஆக்கவும் இறை அன்பை பெற்ற ஒருவனாக ஆக்க்கவுமாகவே இருக்கும்.

இப்படி தொடர்ந்து பயின்று வரும் அம்மாணவனின் ஆன்மீக படித்தரம் அவன் அறியாத நிலையிலேயே உயர்கிறது. அவனின் படித்தரத்திற்கு ஏற்ப அவனுக்கு வழங்கப்படும் கல்வியும் மாறுப்படுகிறது.

இப்படி ஆன்மீக பயிற்சியில் ஈடுப்பட்டு வரும் ஒருவனது வாழ்க்கை, வணக்கம், செயற்பாடுகள் அனைத்தும் சாதாரண மனிதர்களது செயற்பாடுகளை விட்டும் முற்றிலும் வித்தியாசப்பட்டு இருக்கும். சாதாரண மனிதர்களை போன்று உலக ஆசாபாசங்களில் சிக்கி மனதை பறிக்கொடுத்து வாழமாட்டான். போட்டி, பொறாமை, கர்வம், திமிர், நம்பிக்கை மோசடி, அநியாயம் செய்தல், கோபம், குரோதம், தீவிரவாதம் என்று எந்த கெட்ட குணங்களும் அவனிடம் இருக்காது.

உலகத்தில் குடும்பத்தோடும் சக மனிதர்களோடும் வாழுவான். ஆனால் அனைவருக்கும் நல்லது செய்து வாழுவான். நல்லவனாக வாழுவான். பிறருக்கு எந்த விதத்திலும் தன் நாவினாலோ, உடலாலோ துன்பம் இழைக்க மாட்டான். உலகத்தில் அனுமதிக்கப்பட்ட விதத்தில் இன்பம் அனுபவிப்பான். ஆனால், வரம்பு மீற மாறமாட்டான். அதிலேயே தன் உள்ளத்தை பறிக்கொடுத்து அடிமையாகி விட மாட்டான்.


அவ்லியாக்கள் (இறைநேசர்கள்) என்றால் யார்?

இப்படி அவர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் செய்து வருகையில் அவரது ஆன்மீக படித்தரம் உச்ச நிலையை அடைகிறது. அவர் இறைவனின் நேசத்தை பெற்ற ஒரு இறைநேசராக மாறுகிறார். இத்தகைய சிறப்பு மிக்க மனிதர்களையே முஸ்லிம்கள் "அவ்லியாக்கள்" அதாவது இறைநேசர்கள் என்று சொல்லுகின்றனர். இஸ்லாமிய வரலாற்றில் அன்று தொட்டு இன்று வரை எண்ணிகையில் அடங்காத அவ்லியாக்கள் உலகத்தில் தோன்றி மறைந்து உள்ளனர். இன்னும் தோன்றி கொண்டே இருப்பர்.

உதாரணமாக - பக்தாத்தில் வாழ்ந்து அடங்கப்பெற்ற ஷெய்க் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி வலியுல்லாஹ், அஜ்மீரில் வாழ்ந்து அடங்கப்பெற்ற ஷெய்க் காஜா முயினுத்தீன் சிஸ்தி வலியுல்லாஹ், நாகூரில் வாழ்ந்து அடங்கப்பெற்ற நாகூர் ஆண்டகை ஷெய்க் ஷாஹுல் ஹமீத் வலியுல்லாஹ், கொழும்பில் அடங்கப்பெற்றுள்ள ஷெய்க் உஸ்மான் வலியுல்லாஹ் (அல்லாஹ் இவர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக) ஆகிய அனைவரும் அவ்லியாக்களுக்கு உதாரணங்களாகும்.

இந்த இறைநேசர்கள் சில நேரங்களில் இறைவனின் அருளை கொண்டு சில அற்புதங்களை நிகழ்த்துகின்றனர். அவை முஸ்லிம்களால் "கராமத்" என்று சொல்லப்படுகிறது.  அவை இறைவன் தன் நேசர்களுக்கு கொடுத்துள்ள ஒரு வெகுமதியாகும்.

இந்த இறைநேசர்கள் மதம், இனம், மொழி, நாடு என எவ்வித வேறுப்பாடும் இன்றி எல்லா மனிதர்களாலும் நேசிக்கப்படுகின்றனர். இவர்களது அடக்கஸ்தலங்களுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த பல்வேறு மதத்தை சேர்ந்த மனிதர்கள் போய் வருகின்றனர்.  அந்த அடக்கஸ்தலங்களுக்கு "தர்கா" என்று சொல்லப்படுகிறது. அம்மனிதர்கள் தமது பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், தேவைகள் குறித்தும் அங்கே சென்று அந்த இறைநேசரிடம் முறையிடுகின்றனர். அந்த இறைநேசர் அது சம்பந்தமாக இறைவனிடம் பிரார்த்தித்து அம்முறையீடு ஏற்றுக்கொள்ள வழிவகுக்கிறார்கள். 

அப்போது அந்த இறைநேசர் மதம், மொழி, நாடு என எந்த ஒரு வேறுப்பாடும் காட்டுவதில்லை. நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் உண்மையான ஆன்மீக வாரிசுகளான அந்த இறைநேசர்கள் நபிகள் நாயகத்தை ﷺ போன்றே மக்களிடையே பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் உதவி செய்கின்றனர். அவர்களது நோக்கம் எல்லா மக்களும் நல்லா இருக்க வேண்டும். எல்லா மக்களும் நேர்வழி பெற வேண்டும் என்பது மட்டுமே. இப்படி அவர்கள் உதவி செய்ததன் மூலம் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளம். ஆனால் அவர்கள் ஒருபோதும் அம்மக்களிடம் நீ இஸ்லாத்தை தழுவினால்தான் நான் உனக்கு உதவி செய்வேன் என்று விலை பேசியது கிடையாது. அவர்களின் உயரிய பண்புகளாலும் நற்குணத்தாலும் கவரும் மக்கள் அவர்கள் மீது கொள்ளும் அளவில்லா காதல் அம்மக்களை இஸ்லாத்தை நோக்கி வர வைக்கின்றன.


சூபிசம் சம்பந்தமாக இன்னும் கற்றுக்கொள்வது எப்படி?

எமது இந்த கட்டுரை சூபிசம் சம்பந்தமான ஒரு அறிமுக கட்டுரை மட்டுமே. சூபிசம் சம்பந்தமாக இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவும், இந்த சூபிச வழிமுறையை பின்பற்றி இறைவனை அடைவதற்காக ஆன்மீக பாதையில் செல்ல விரும்புவோரும் வாசிக்க நிறைய நூல்கள் உள்ளன.

குறிப்பாக அறிவுலக மாமேதை என்று முஸ்லிம்களால் அழைக்கப்படும் மாபெரும் அறிஞர் இமாம் கஸ்ஸாலி அவர்கள் எழுதிய மாபெரும் நூலான "இஹ்யாவு உலூத்தீன்" என்ற நூல் சுமார் 1000 வருடங்களாக சூபிச துறையில் ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. எமது பெரும் பாக்கியம் அந்த நூல் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு வந்துள்ளது. அவற்றின் மின்னூல் வடிவம் (E-Book) எமது இணையத்தளத்தில் இஸ்லாமிய நூல்கள் என்னும் பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. வாசித்து பயன்பெறுங்கள்.  


சூபிசம் சம்பந்தமாக இன்னும் சில நூல்கள் எமது இணையத்தளத்தில் உள்ளன:

1. பத்ஹுர் ரப்பானி     2. மௌலானா ரூமியின் தத்துவங்கள்    3. கல்வத்தின் இரகசியங்கள்
Download As PDF

Saturday, January 19, 2013

சந்திர நபிகளாரின் சுந்தரத்தோற்றம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அதிக நெட்டையாகவும், அதிகக் குட்டையாகவும் இருக்கவில்லை. நடுத்தர உயரமானவர்களாக இருந்தார்கள். அன்னார் முற்றிலும் வெளுத்த நிறமுடையவர்களாகவோ பொது நிறமுடையவர்களாகவோ இல்லாமல் அவ்விரண்டிற்கும் மத்தியில் ஓர் அழகான நிறமுடையவர்களாக இருந்தார்கள். அன்னாரின் மேனி (கோதுமை போன்ற) பொன்னிறமானது. அன்னாரின் மேனி ஒளி வீசிக் கொண்டிருக்கும்.
அவர்களுடைய சிரசின் ரோமங்கள் முற்றிலும் சுருண்டவையாகவும், முற்றிலும் நேரானவையாகவும் இல்லாமல் அவ்விரண்டிற்கும் பொதுவான ஒரு நிலையில் இருந்தன. தலைமுடி அடர்ந்து காதுச் சோணை வரை தொங்கிக் கொண்டிருந்தது. தாடி நெருங்கி அடர்ந்திருக்கும். அன்னார் மறையும் போது அவர்களின் சிரசிலும், தாடியிலும் இருபது நரைகள் கூட கிடையாது.
அன்னாரின் இரு புயங்களுக்கு மத்தியில் ஓர் இலஞ்சானை (முத்திரை) இருந்தது. அது தடித்து துருத்திக் கொண்டிருந்த ஒரு சதைக் கட்டியாக இருந்தது.
அன்னாருடைய இரு புஜங்களுக்கும் மத்தியிலுள்ள மார்பகம் விசாலமாக இருந்தது. அன்னாரின் இரு அகங்கைகளும், உள்ளங்கால்களும் சதைப் பிடிப்புள்ளவைகளாயிருந்தன. அன்னாரின் சிரசு சற்று பெரிதாக இருந்தது. மொழிகள் பருத்து எலும்புத் தாக்குள்ளவர்களாகவும், நெஞ்சுக் குழியிலிருந்து தொப்புள் வரை ஒரு சிறு உரோமக் கொடி ஓடியவர்களாகவும் இருந்தனர். வதனம் சதைப் பிடிப்பால் தொங்கிக் கொண்டிராமல் சமமாயிருக்கும். வயிறும் நெஞ்சும் சமமானதாக இருக்கும்.
விழிகள் நன்றாக கருத்தவை. வெள்ளை விழிகளிலே செவ்வரி படர்ந்திருக்கும். இமைகள் நீண்டவை. அடர்ந்த மெல்லிய வளை புருவம். இரு புருவங்களும் ஒன்றோடு ஒன்று சேராது விலகியிருந்தன. இரு புருவங்களுக்கு மத்தியில் ஓரளவு தாரளமான அகலமிருக்கும். மேனியில் அதிகமான ரோமங்கள் இல்லை. மார்பு, வயிறுகளில் ரோமங்கள் கிடையாது. தோள் புயம், நெஞ்சின் மேற்பாகம் ஆகியவற்றில் ரோமங்கள் இருக்கும்.
கரண்டைக் கை நீண்டிருக்கும். கை, கால் ஆகியவைகளின் விரல்கள் பொருத்தமான நீளமுடையதாக இருக்கும். குதிக்கால் தசைப் பிடிப்பில்லாததாக இருக்கும். பாதக்கால் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் ஒப்புரவாக இருக்கும். ஆதலால் அவைகளில் தண்ணீர் பட்டால் எங்கும் தங்குவதில்லை. கரங்களும் பாதங்களும் தசைப் பிடிப்பானவைகளாக இருந்தன. நடக்கும்போது முன்புறமாக சிறிது கவிழ்ந்து பாதத்தை பூமியிலிருந்து பிடுங்கி எடுப்பது போல் அழுத்தமாக அடியெடுத்து நிலத்தில் மெதுவாக வைத்து நடப்பர். பார்வை எப்பொழுதும் கீழ் நோக்கியே இருக்கும்.
வாய் விரிந்தும் ஒடுங்கியும் இல்லாமல் நடுத்தரமாய் இருக்கும். முன் பற்கள் சற்று இடை விட்டவைகளாக இருந்தன. அன்னார் பேசும் போது அந்தப் பற்களிலிருந்து ஓர் ஒளி வீசிக் கொண்டிருப்பது போல் இருக்கும்.
ஒருவரைத் திரும்பிப் பார்;ப்பார்களாயின் முகத்தை மட்டும் திருப்பாமல் – தேகம் முழுவதையுமே திருப்பி விடுவார்கள்.
ஆதாரம்: 'ஷமாயில் திர்மிதீ' நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.
     நெஞ்சில் சந்தோசம் பெருகாதோ?
மண்ணில் தெய்வீகம் விளையாதோ..?
வாசக் கஸ்தூரி தவழாதோ..?
காணக் கண் தேடி தவிக்காதோ..?
அண்ணல் நபி அழகை,எண்ணி எண்ணிப் பார்த்தால்,,,,!
ஆனந்தமும்,பேரின்பமும் வளராதோ...?
அற்ப்புதங்கள்,சொல்லி சொல்லி முடியாதோ...!

வெண்மையும் செம்மையும் கலந்தோர் நிறம்..!
நிலவும் குடியிருக்கும் பூ முகம்..!
கன்னம் ரெண்டும் சாய்ந்து தோன்றிடும்..!
புருவம் அடர்ந்திருக்கும் பூரணம்..!
இமைகள் நீண்ட திருக்காரணம்..!
கருவிழி கொஞ்சும் அஞ்சனம்..!
திருவாய் விரிந்தே பொன் மலராகும்..!
பற்கள் இடைகொண்டு ஒளி வீசும்..!
தாடி அடர்ந்தே பேரெழில் கூட்டும்...!
தோளில் சரிந்தே நல் முடி யாடும்..!
திருமேனி ஒரு காவியம்...! (நெஞ்சில் )

அதிக உயரமில்லை மாநபி..!
அளவும் குறைவுமில்லை யா நபி..!
தோள்கள் விரிந்தவர் தீன் நபி...!
அதிக சதையுமில்லை நாயகம்...!
அதிக மெலிவுமில்லை மாதவம்..!
நெஞ்சம் விரிந்த ஓர் நூலகம்...!
அங்கங்கள் அளவான அழகாகும்..!
நெஞ்சோடு வயிறுந்தான் சமமாகும்..!
உள்ளங்கை பாதங்கள் சதையாகும்..!
குதிகால்கள் சதையின்றி மெலிவாகும்..!
திரு மேனி ஒரு காவியம்..! (நெஞ்சில்)

உயர இருந்து பள்ளம் நோக்கியே..!
சரிந்து நடக்கும்நடை போலவே..!
தோன்றும் நடை என்னும் வேகமே...!
புயங்கள் இரண்டின் நடுவாகவே..!
திகழும் நபியின் அடையாளமே..!
பொன்னோ மின்னோ ஒளி தேகமே..!
வேர்வையில் கஸ்தூரி மனம் வீசும்...!
வேறெங்கும் காணாத பிரகாசம்..!
பார்த்தாலே நெஞ்சங்கள் பறிபோகும்...!
பாதத்தில் என்றென்றும் சரனாகும்...!
திருமேனி ஒரு காவியம்...! (நெஞ்சில்)

(நன்றிகள் ,,இப்பாடலை இயற்றிய கலிபா மௌலவி ஹுசைன் முஹம்மது மன்பஈ அவர்களுக்கு!
தாலாட்ட வருவாளா என்ற பாடல் மெட்டில் பாடிப்பாருங்கள்! )
அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்
அவர்களை எப்படி வரவேற்ப்பேன்
அஸ்ஸலாமு அழைக்கும் முகமன் கூறி
ஆரத் தழுவ விரைவானா
ஸலவாத்தை என் நெஞ்சில் நிறைத்து

சப்தத்துடனே ஒலிப்பேனா

களிப்பின் கடலில் ஆளா மிளிர்ந்து
கண்ணீர் வழிய பார்ப்பேனா
கண்களில் வெளிச்சம் அதிகமாகி
காண முடியாமல் அழுவேனா

வாழ்த்தி கவிதை பாட நினைத்தும்
வார்த்தை வராமால் தவிப்பேனா
வார்த்தைகள் கோடி வளமாய்
வந்தும் நாவு எழும்பாமல் திகைப்பேனா

சிந்தனை இழந்து செயல் பட மறந்து
சிலையாய் நானும் நிற்பேனா
உணர்ச்சிகள் மீறி உயிர் நிலை மாறி
தரையில் விழுந்து சறிவேனா

ஸல்லல்லாஹு அலா முஹமமது
ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹமமது
ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
யா ரப்பி ஸல்லி அலைஹிவ ஸல்லம்
ہم جنس اگر ملے نہ کوئی آسمان پر
بہتر ہے خال ڈالیے ایسی اُڑان پر

آ کر گرا تھا ایک پرندہ لہو میں تر
تصویر اپنی چھوڑ گیا ہے چٹان پر

پوچھو سمندروں سے کبھی خاک کا پتہ
دیکھو ہوا کا نقش کبھی بادبان پر

یارو میں اس نظر کی بلندی کو کیا کروں
سایہ بھی اپنا دیکھتا ہوں آسمان پر

کتنے ہی زخم ہیٕ مرے اک زخم میں چھپے
کتنے ہی تیر آنے لگے اِک نشان پر

جل تھل ہوئی تمام زمیں آس پاس کی
پانی کی بوند بھی نہ گری سائبان پر

ملبوس خوشنما ہیں مگر جسم کھوکھلے
چھلکے سجے ہوں جیسے پھلوں کی دکان پر

سایہ نہیں تھا نیند کا آنکھوں میں دور تک
بکھرے تھے روشنی کے نگیں آسمان پر

حق بات آکے رک سی گئی تھی کبھی شکیب
چھالے پڑے ہوئے ہیں ابھی تک زبان پ
 
 
Download As PDF