இது கண்டிப்பாய் ஆண்களுக்கானது!!!...
புதுசா கல்யாணம் ஆன ஜோடிங்களுக்கு
வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணும்போது பலவிதமான சந்தேகங்கள் உண்டாகும். இதுல ஆணும்
பொண்ணும் தங்களோட சந்தேகங்களை யார்கிட்டப்போயி கேட்டு க்ளியர் பண்ணிக்கிறதுன்னு
தெரியாம அல்லாடுவாங்க பாருங்க... அய்யோ பாவம்! எதாவது புத்தகத்தை படிச்சி
தெரிஞ்சிக்கலாம்னா, உருப்படியா என்ன புத்தகம் இருக்கு?... ஒரு மண்ணும் இல்லை. சரி, டாக்டர் மாத்ருபூதம்?... அவரும் பாவம், போய் சேர்ந்திட்டார்... வேற டாக்டருங்க?... அய்யோ!!! டி.வி.யை ஆன் பண்ணாலே ‘’வாங்கடா, வாங்க உங்க அப்பன் நான்
இருக்கேன்டா, வாங்கடா’’ என்று லேகிய டாக்டர்கள் மிரட்டுவதுதான் மிச்சம்!.. சரி
என்னதான் பண்ணலாம்?...
ஹலோ... ஹலோ... ஸ்டாப், ஸ்டாப்... நீங்க நினைக்கிற மாதிரி டாப்பிக் வேண்டாம் இங்கே! டிராக்
மாறிக்கலாம் பாஸ்!!!
‘’ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்... ஆக மொத்தம் தொண்ணூறு
நாள்!’’... இதுதான் பொதுவா புதுசா கல்யாணம் ஆனவங்களுக்காக சொல்ற டயலாக். வாழ்க்கைய
கொஞ்சம் அனுபவிச்சு கிராஸ் பண்ணவங்களுக்குத்தான் தெரியும் இந்த டயலாக்கோட வொர்த் என்னான்றது?...
கல்யாணத்தை பத்தி வேடிக்கையா ஒன்னு
சொல்லுவாங்க... கல்யாணம்ன்றது ஒரு ஆழ்கிணறு. ஏற்கனவே விழுந்தவங்க வெளியேற
வழியில்லாம தத்தளிச்சிட்டு இருப்பாங்க. வெளியே இருக்கிறவங்களோ, அந்தக்கிணத்துல என்னமோ இருக்குன்னு, எப்படா குதிப்போம்னு நாளை எதிர்பார்த்திட்டு இருப்பாங்களாம்!!!
கொஞ்சம் வேடிக்கையா இருந்தாலும் உண்மைதான்றது காலம் காலமா அனுபவிச்சபிறகுதான்
புரியுது நம்மாளுங்களுக்கு.
பொதுவாவே நம்மாளுங்க கல்யாணம் ஆன புதுசுல மோகம் கண்ணை மறைக்க,
எதிர்காலத்துல வரப்போற பிரச்சினைக்கு தானே விதை போடறது தெரியாம புதுப்பொண்டாட்டிய கொஞ்சம்
ஓவராவே தாங்கிப்புடுவானுங்க. அதுக்கப்புறம் மேலே சொன்ன தொண்ணூறு நாள் முடிஞ்சதும் கொஞ்ச
கொஞ்சமா ஆப்பு ஸ்டார்ட் ஆகும் நம்மாளுக்கு. கிட்டத்தட்ட ஒரு ரெண்டு வருஷம் முடிஞ்சதும்
டெய்லி ஆப்பு மட்டும்தான் அவன் ரெகுலர் வாழ்க்கையாகியிருக்கும். எதுக்கு இப்படி சொந்தக்காசுலேயே
சூனியம் வைச்சுக்கனும்?...
அதுனால புதுசா கல்யாணம் செஞ்சுகிட்ட மற்றும் செஞ்சிக்கப்போற
தம்பிமார்களே... உங்களுக்கான உஷார் டிப்ஸ்தான் இங்கே வரப்போவுது! பஜார்ல உஜாரா இல்லேன்னாக்க
நிஜாரை அவத்துருவாங்கன்றத புரிஞ்சிக்கிட்டீங்கன்னா, கண்டிப்பா இந்த உஷார் டிப்ஸ்சை
ஃபாலோ பண்ணுவீங்க மக்காஸ்!!!
1. கல்யாணமான
புதுசுல காரியம் நடக்கனும்கிறதுக்காக பொண்டாட்டியப்பாத்து சும்மா சும்மா ஒரு நாளைக்கு
நூறுவாட்டியாவது ‘’ஐ லவ் யூ’’ சொல்றது... ரொம்ப தப்பு இது. ஏன்னா எதிர்காலத்துல ஒரு
நாளைக்கு ஒரு தடவை சொல்றதுகூட நின்னு போகும்போது இந்த ஃப்ளாஸ் பேக்தான் உங்களுக்கு
எமன்.
2. கல்யாணமான
புதுசுல ஒரு நாளைக்கு இருபது தடவைக்கு மேல பொண்டாட்டிகிட்ட போன்ல பேசுறது... மாட்டீக்காதீங்க
மக்காஸ்! கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் ஒரு நாளைக்கு ஒரு தடவை போன் பண்ணவே உங்களால நேரம்
ஒதுக்கமுடியாம போகும்போது நிச்சயம் பாதிக்கப்படுவீங்க !
3. கல்யாணமான
புதுசுல பொண்டாட்டிய கன்னாபின்னான்னு வெளியே கூட்டிட்டு போறது... புதுசு புதுசா துணி,
நகைகள்னு பர்சேஸ் பண்ணிக்குடுக்கிறது, அப்பப்போ காஸ்ட்லி கிஃப்ட் குடுக்கிறது, பொண்டாட்டிக்கு
புடிச்ச ஹீரோவோட புதுப்படத்துக்கு ஆயிரமாயிரம் செலவு பண்ணி ரிலீஸ் அன்னிக்கே சினிமாவுக்கு
கூட்டிட்டு போறது, கணக்கு பாக்காம பர்சை தண்ணியா காலி பன்றது... இதெல்லாமே உங்களுக்கு
நீங்களே வச்சிக்கிற சூனியம்தான்... ஃபியூச்சர்ல ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க பாஸ், அப்புறம்
உங்க இஷ்டம்!!!
4. கல்யாணமான
புதுசுல பொண்டாட்டி சமைக்கிற சமையல் வாய்லேயே வைக்க முடியாம இருக்கும்போதுகூட, ‘’சூப்பர்
டார்லிங்... இது மாதிரி ஒரு சமையலை நான் சாப்பிட்டதேயில்லை, எக்சலென்ட்’’ அப்பிடீன்லாம்
சும்மானாச்சுக்கும் காரியத்துக்காக புகழ்றது உங்க நாக்குக்கு நீங்களே அடிச்சிக்கிற
சாவு மணி... அம்புட்டுதேன் சொல்லமுடியும்!.
5. கல்யாணமான
புதுசுல சாயந்திரம் ஆறு மணிக்குள்ளார ஆபிசிலேயிருந்து எஸ்கேப் ஆகி பொண்டாட்டிகிட்ட
அட்டெண்டென்ஸ் போடுறது மாதிரி முட்டாள்தனம் வேற ஒன்னுமேயில்லை பாஸ்!... எதிர்காலத்துல
நீங்க கண்டிப்பா வூட்டுக்கு லேட்டா வரப்போற ஒவ்வொரு சாயந்திரமும் உங்களுக்கு நரகம்தான்!!!
6. கல்யாணத்துக்கு
அப்புறம் முதல் மாச சம்பளத்தை பெரிய பருப்பு மாதிரி பொண்டாட்டி கையில எடுத்துக்கொடுக்கிறதுக்கு
முன்னாடி ஒரேயொரு நிமிஷம், ‘’வாழ்க்கை முழுவதும் பொண்டாட்டிகிட்ட சம்பளத்தைக்குடுத்துட்டு
செலவுக்கு கையேந்தி நிக்கிறதுக்கு ரெடியான்னு’’ யோசிச்சிக்கோங்க பிரதர்!!!
7. புதுப்பொண்டாட்டிகிட்ட
சும்மா சும்மா, அவன் குடிப்பான், இவன் குடிப்பான்... நான் ரொம்ப யோக்கியமாக்கும்...
சீச்சீய் இந்த குடிக்கிற ஆளுங்க பக்கத்துல வந்தாலே எனக்கு கொமட்டிக்கிட்டு வரும்...
அப்பிடி இப்பிடீன்னு சீன் போடுறதுக்கு முன்னாடி, எதிர்காலத்துல நாம எப்பவுமே எந்த பார்ட்டியையும்
அட்டெண்டு பண்ணாம வூட்டுக்கு வருவோமான்றத ஒரு வாட்டி கன்ஃபார்ம் பண்ணிக்கிறது உத்தமமுங்க!!!
8. கல்யாணமான
மூனாவது மாசம் பொண்டாட்டி மாசமா இருக்கான்னு தெரிஞ்சதும், விழுந்து விழுந்து சீன் போட்டு,
வூட்டுல துணி துவைக்கிறது, சமைக்கிறது, தண்ணி புடிக்கிறதுன்னு எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு
செஞ்சீங்கன்னா... சாரி பாஸ்... எதிர்காலத்துல உங்களை கடவுள்கூட காப்பாத்த முடியாது!!!
ஸ்பைடர் மேனுக்கே இந்த நிலைமையா?!!!...
மொத்தத்துல சிம்பிளா சொல்லனும்னா...
கல்யாணமான புதுசுல சும்மா ஓவர் சீன் போட்டு அள்ளி விடாம, எப்பவுமே நீங்க நீங்களாவே
அளவா, இயல்பா, உண்மையா இருக்க பழகிக்கிட்டீங்கன்னா எதிர்காலத்துல உங்க மனைவியும் உங்கமேல
கல்யாணமான புதுசுல அப்படி இருந்தீங்க... இப்படி இருந்தீங்கன்னு எந்தவித எதிர்பார்ப்பும்
இல்லாம வாழப்பழகிப்பாங்க. உங்க வாழ்க்கையும் டென்ஷன் இல்லாம நிம்மதியா ஓடும். அதுக்காக
மனைவி மேல ஓவர் அன்பு வைக்கக்கூடாதுன்னு அர்த்தமில்லை. கல்யாணமான புதுசுல உங்க மனைவிமேல
நீங்க ஓவர் அன்பு வைச்சு அதை அவங்களுக்கும் புரியிறமாதிரி வெளிக்காட்டலாம். ஆனா காலம்
போக போக உங்களுக்கு உங்க மனைவி மேல அதே அளவு அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டுற அளவுக்கு
சூழ்நிலைகள் அமையாமல் போகும். அப்போது உங்கள் மனைவி அதைப்புரிந்து கொள்ளும் பக்குவம்
பெற்றிருக்காவிட்டால் தினம் தினம் உங்கள் வாழ்க்கையில் நரகம்தான்.
அதனால்தான் சொல்றேன் மக்காஸ்... கல்யாணம்ன்றது
சாதாரண விஷயமில்லை... உஷார் பிரதர்ஸ்!!!
விஷ் யூ எ ஹேப்பி மேரிடு லைஃப்... என்ஜாய்!!!








No comments:
Post a Comment