சுவையுணரக் கூடும் வாய்ப்பு
வருத்தப்பட சில நூறு
நிகழ்வுகள் என்றால்
ஆனந்திக்க ஆயிரம்
தருணங்கள் கிடைக்கலாம்
எத்தனை கடினம் என்பதல்ல
வாழ்க்கை
எப்படி வாழ்கிறோம் என்பதே
நம்பிக்கை
புதுமணத் தம்பதிகளின் கையில்
புகைப்பட ஆல்பம்
வலது அடி எடுத்து வைக்க
கால்களில்லை அவளுக்கு
ஆசையாய் அரவணைக்க
கைகளில்லை இவனுக்கு
தொட்டு அறிவதில்லை
உணர்ந்து வாழ்வதுதான் காதல்
அன்பாய் பாசமாய்
தியாகமாய் நேசமாய்
காதலின் பரிமாணம்
விழுதுகள் விட்டு வேறூன்றிப் போனதாலே
மனிதம் வாழ்கிறது
இன்னமும்