-->

Wednesday, December 12, 2012

வாழ்வின் நம்பிக்கை


சுமை தாங்கிய கணங்களில் தான்
சுவையுணரக் கூடும் வாய்ப்பு
வருத்தப்பட சில நூறு
நிகழ்வுகள் என்றால்
ஆனந்திக்க ஆயிரம்
தருணங்கள் கிடைக்கலாம்
எத்தனை கடினம் என்பதல்ல
வாழ்க்கை
எப்படி வாழ்கிறோம் என்பதே
நம்பிக்கை
புதுமணத் தம்பதிகளின் கையில்
புகைப்பட ஆல்பம்
வலது அடி எடுத்து வைக்க
கால்களில்லை அவளுக்கு
ஆசையாய் அரவணைக்க                                     
கைகளில்லை இவனுக்கு
தொட்டு அறிவதில்லை
உணர்ந்து வாழ்வதுதான் காதல்
அன்பாய் பாசமாய்
தியாகமாய் நேசமாய்
காதலின் பரிமாணம்
விழுதுகள் விட்டு வேறூன்றிப் போனதாலே
மனிதம் வாழ்கிறது
இன்னமும்
Download As PDF

No comments:

Post a Comment