-->

Wednesday, December 12, 2012

பெண்ணாய்ப் பிறந்திடவே……..

கழுத்தில் விழுந்த பந்தம்
கண்ணுக்குத் தெரியாத
விலங்குகளாய் மாறும்
அடிமைத்தனம் வேண்டாம்
வாழ்த்துக்களும் பூச்செண்டுகளும்
வேண்டாம்
பொன்னகையும் புகழும்
வேண்டாம்
இதழோரத்துப் புன்னகை
ஒன்றே போதும்
தவறுகளை பொருட்படுத்தாத
பெருந்தன்மை போதும்
புலம்பலே ஆனாலும்
உணர்வுகளை மதிக்கும்
தாராளப் பொறுமை போதும்
ஆஹா அருமையென
நல்லவைகளை அங்கீரிக்கத்
தயங்காத மனது போதும்
துன்பத்தில் தோள்கொடுக்கும்
தோழமை போதும்
எல்லாம் கிடைக்குமெனில்
இன்னொரு முறையும்
பெண்ணாய்ப் பிறந்திடவே
மாதவம் செய்திடுவேன்
Download As PDF

No comments:

Post a Comment