-->

Saturday, December 29, 2012

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்

Mohamed Salih
அஸ்ஸலாமு அலைக்கும் ....
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
மீது நான் எழுதிய ஒரு சிரிய கவி இதோ .....

" காதலால் தேடல் "

அஸ்ஸலாம் அலைக்கு முஸ்ஸலாம் அலைக்கும்
அஸ்ஸலாம் அலைக்கு முஸ்ஸலாம் அலைக்கும் ....!!!!!

யா ரஸூலுல்லாஹ் எங்கள் யா ஹபீபுல்லாஹ்
யா ஷபீயுல்லாஹ் வருக அஸ்ஸலாம் அலைக் .......
அஸ்ஸலாம் அலைக்கும் .........

ஆதி தூதரே என் உயிரின் உயிரே
உங்களை காண வேண்டும் என்ற ஆவலாலே ....!!!
அஸ்ஸலாம் அலைக்கும் ........

கருவில் இருந்தேனே இனி கபுரில் இருப்பேனே
உங்களை காணும் எந்தன் ஆசை எப்ப தீருமோ....!!!
அஸ்ஸலாம் அலைக்கும் ........

கண்கள் தேடுதே என் இதயம் வாடுதே
வையகம் போற்றும் உண்மை வேந்தர் உங்களை காணவே ....!!!
அஸ்ஸலாம் அலைக்கும் ........

முத்த மிடனுமே நான் முத்த மிடனுமே
உங்கள் பாதங்களை தொட்டு தழுவி முத்தமிடனுமே....!!!
அஸ்ஸலாம் அலைக்கும் ........

இறுதி பார்வையே என் இறுதி பார்வையே
ஒளிவான ஜோதி முகத்தை நான் காண வேண்டுமே ...!!!
அஸ்ஸலாம் அலைக்கும் ........

உலக வாழ்விலும் என் இறுதி மூச்சிலும்
உறுதியாக உங்கள் நாமம் கூற வேண்டுமே ......
அஸ்ஸலாம் அலைக்கும் ........

உடலும் அர்பணம் என் உயிரும் அர்பணம்
மறை போற்றும் இறை வேந்தர் உங்கள் முன்னாலே...!!!
அஸ்ஸலாம் அலைக்கும் .......

 

Download As PDF

No comments:

Post a Comment