
- காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)
* அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று
சொல்லுவதா?
- ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.
- சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.
- இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.
- வாய் நல்லதானால் ஊர் நல்லது.
- கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.
- காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.
- மயிர் சுட்டுக் கரியாகாது.
- ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.
- விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)
- திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)
- பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)
- ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.
- ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.
- ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.
- தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.
- அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.
- அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.
- தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.
- எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.
- வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.
No comments:
Post a Comment