-->

Wednesday, November 7, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்


 
  • காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)
  
  * அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?

  • ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.
  • சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.
  • இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.
  • வாய் நல்லதானால் ஊர் நல்லது.
  • கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.
  • காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.
  • மயிர் சுட்டுக் கரியாகாது.
  • ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.
  • விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)
  • திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)
  • பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)
  • ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.
  • ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.
  • ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.
  • தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.
  • அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.
  • அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.
  • தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.
  • எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.
  • வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.
Download As PDF

No comments:

Post a Comment