இன்று பல திருமணங்களில் தங்கள் வசதியைக் காட்ட 30 வகை உணவுகள்..40 வகை
உணவுகள் என பரிமாறப்படுகின்றன.ஆனால் இவர்கள் மறந்துவிட்டது..உண்பவர்க்கு
இருப்பது ஒரு வயிறு என்பதை.
ஆகவே..பலர்..பல உணவுவகைகளை வீணடிக்கின்றனர்.இனிப்பு வகைகள் உண்ணக்கூடாது என்பவர்கள் அவற்றை அப்படியே ஒதுக்கி விடுகின்றனர்.ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து ரத்தக் கண்ணீர் விடுவது மத்தியத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்வீட்டார்..போலி கௌரவம்..பல லட்சக்கணக்கான பணத்தை வீணடிக்கிறது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நியோ20 என்ற பெயரில் ஜி20 நாடுகளின் மாநாடு நடந்தது.அதில் வெளியிடப்பட்ட ஐ.நா., அறிக்கையில்..
'உலகம் முழுதும் ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு வீணாகிறதாம்.உணவுப் பொருட்கள் அவை உற்பத்தியாகும் விளை நிலத்தில் தொடங்கி போக்குவரத்து, சேமிப்புக் கிடங்கு சந்தை எனத் தொடர்ந்து வீட்டின் உணவு மேசைவரை வீணடிக்கப்படுகிறது.
இதில் அமெரிக்கா மட்டும் உணவில் 25 விழுக்காடுகளை குப்பையில் எறிகின்றதாம்.ஐரோப்பாவில் சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 300 கிலோ உணவை வீணடிக்கிறார் என்றால்..இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் இது 170கிலோவாக உள்ளதாம்.இந்தப் புள்ளி விவரங்கள் ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவால் திரட்டப்பட்டவை.
டிஸ்கி - நாட்டில் ஒரு வேளை உணவிற்குக் கூட வழியில்லாமல் வாடும் மக்களும் கோடிக் கணக்கில் உள்ளனர்..
உணவுப் பொருட்கள் வீணானாலும் பரவாயில்லை மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்னும் பிரதமர்களும் உள்ளனர்.
Download As PDF
ஆகவே..பலர்..பல உணவுவகைகளை வீணடிக்கின்றனர்.இனிப்பு வகைகள் உண்ணக்கூடாது என்பவர்கள் அவற்றை அப்படியே ஒதுக்கி விடுகின்றனர்.ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து ரத்தக் கண்ணீர் விடுவது மத்தியத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்வீட்டார்..போலி கௌரவம்..பல லட்சக்கணக்கான பணத்தை வீணடிக்கிறது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நியோ20 என்ற பெயரில் ஜி20 நாடுகளின் மாநாடு நடந்தது.அதில் வெளியிடப்பட்ட ஐ.நா., அறிக்கையில்..
'உலகம் முழுதும் ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு வீணாகிறதாம்.உணவுப் பொருட்கள் அவை உற்பத்தியாகும் விளை நிலத்தில் தொடங்கி போக்குவரத்து, சேமிப்புக் கிடங்கு சந்தை எனத் தொடர்ந்து வீட்டின் உணவு மேசைவரை வீணடிக்கப்படுகிறது.
இதில் அமெரிக்கா மட்டும் உணவில் 25 விழுக்காடுகளை குப்பையில் எறிகின்றதாம்.ஐரோப்பாவில் சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 300 கிலோ உணவை வீணடிக்கிறார் என்றால்..இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் இது 170கிலோவாக உள்ளதாம்.இந்தப் புள்ளி விவரங்கள் ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவால் திரட்டப்பட்டவை.
டிஸ்கி - நாட்டில் ஒரு வேளை உணவிற்குக் கூட வழியில்லாமல் வாடும் மக்களும் கோடிக் கணக்கில் உள்ளனர்..
உணவுப் பொருட்கள் வீணானாலும் பரவாயில்லை மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்னும் பிரதமர்களும் உள்ளனர்.
No comments:
Post a Comment